Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
Page 1 of 1
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
* வெளியான செய்திகளில் உண்மையில்லை ; இராணுவம் முற்றாக மறுப்பு
* வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் மாத்திரம் இராணுவம்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.
இராணுவப் பேச்சாளர்
சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எதிர்க் கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய :-
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இரா ணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன் றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.
யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன், மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக மக்கள் நலன் கருதி இராணுவம் பாரிய அபிவிருத்தி, நலன்புரி வேலைத் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பயங்கரவாதிகளால் புதைக் கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை யுத்தத் திற்கு பின்னர் அகற்றி வடபகுதி மக்களை துரிதமாக மீள் குடியமர்த்தும் பணிகளை இராணுவம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
* வெளியான செய்திகளில் உண்மையில்லை ; இராணுவம் முற்றாக மறுப்பு
* வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் மாத்திரம் இராணுவம்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.
இராணுவப் பேச்சாளர்
சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எதிர்க் கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய :-
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இரா ணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன் றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.
யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன், மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக மக்கள் நலன் கருதி இராணுவம் பாரிய அபிவிருத்தி, நலன்புரி வேலைத் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பயங்கரவாதிகளால் புதைக் கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை யுத்தத் திற்கு பின்னர் அகற்றி வடபகுதி மக்களை துரிதமாக மீள் குடியமர்த்தும் பணிகளை இராணுவம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 26 லட்சம் லாரிகள் இயங்கவில்லை : சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
» வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
» எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
» வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
» எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» நாட்டுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல்கொடுக்கத் தயார்: சரத் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|