Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
3 posters
Page 1 of 1
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
புதுடில்லி: ''நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி வழங்குவது தான் எங்கள் அரசின் லட்சியம். ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
அனைவருக்கும் வீடு
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில், மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்; கழிவறை வசதி செய்து கொடுப்போம்; இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு கெட்டுப் போனால் பரவாயில்லை என, எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான், முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்; இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள் தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை வரவேற்கிறோம். மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி கூட்டுறவு முறை தான் எங்கள் வழி. நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக நாடுகள் மத்தியில் உள்ளது.
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க உள்ளோம். ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல், நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும் எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம். கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல், அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில், கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள் யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி, இளைஞர்களுக்கு தரமான
கல்வி போன்றவற்றை அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.அனைத்து வடகிழக்கு மாநிலங்களை யும், அந்த முறையில் மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
தமிழகத்திற்கு பாராட்டு:
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில், 'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம் பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது; அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை. ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு மோடி பேசினார்.அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
முதல் உரை அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஊழல் இந்தியா என்ற பெயரை, திறன் வாய்ந்த இந்தியா என்று மாற்றிக் காட்டுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசிய முதல் உரையே மிக அருமை...! ^) ^) ^) ^) ^) ^)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|