Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
சிறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கோசியார்பூரை சேந்தவர் ஜஸ்வீர்சிங். இவரது மனைவி சோனியா. அதே பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மா என்பவரின் மகன் ஹரிவர்மா. இவன் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜஸ்வீர் சிங்சோனியா இருவரும் ஹரிவர்மாவை காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் அவனது தந்தை ரவிவர்மா விடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவர் பணம் தரமறுத்ததால் ஈவு இரக்கமின்றி ஹரிவர்மாவை கொன்று வீசினர். இவ்வழக்கை விசாரித்த கோசியார்பூர் நீதிமன்றம் ஜஸ்வீர்சிங் சோனியா அவர்களுக்கு உடந்தையாக இருந்த விக்ரம் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து 3 பேரும் தண்டனையை குறைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சோனியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. ஜஸ்வீர் சிங்கின் தண்டனையை குறைக்க மறுத்து விட்டது. இருவரும் தற்போது பாட்டியாலா சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தாம்பத்ய உரிமை வழக்கு தொடர்ந்தனர்.
அதில், எங்களுக்கு திருமணமாகி 8வது மாதத்திலேயே கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளோம். நாங்கள் இறப்பதற்கு முன்பு சிறையிலேயே குழந்தை பெற விரும்புகிறோம். இதற்காக இருவரையும் பொது ஜெயிலுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஐஸ்வீர்சிங் சோனியாவின் இந்த கோரிக்கைக்கு கொலையுண்ட சிறுவனின் தந்தை ரவிவர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இருவரும் ஜெயிலில் குழந்தை பெற உயர்நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டார். இருவரும் சேர்ந்து எனது மகனை கொன்று குடும்பத்தையே சீரழித்து விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை தேவைதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிட்டியை நியமித்தது. இதனையடுத்து அந்த கமிட்டி விசாரணை மேற்கொண்டு கைதிகள் தாம்பத்ய உறவு கொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் தடையில்லை என்று பரிந்துரைத்தது. இந்த நிலையில் நேற்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பரபரப்பு தீர்ப்பினை அளித்தார்.
சிறையில் இருக்கும் தம்பதியர் தாம்பத்ய உறவு கொள்ளவதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் அவர்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள கணவனுடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள மனைவி தாம்பத்ய உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள தடையில்லை எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தது.
நன்றி தினக்குரல்
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
ஆனா வெளிய யாராவது காவலுக்கு இருக்கனும் சரிதானே ஹிஹி.
கேடுகெட்ட தீர்ப்பு. கொலைகார கடத்தல் பாவிகளுக்கும் உரிமைகள் இருக்கா என்ன? இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா? அவனுக்கு எதற்கு குழந்தை. கொலைகாரனின் குழந்தை என்ற அவப்பெயருடன் ஒருகுழந்தை பிறந்து அதன் வாழ்நாள் முழுவதும் மனம் சங்கடப்படுவது மட்டும் அந்த குழந்தையின் உரிமையில் தலையிடுவதாகாதா? அடப்போங்கப்பா
கேடுகெட்ட தீர்ப்பு. கொலைகார கடத்தல் பாவிகளுக்கும் உரிமைகள் இருக்கா என்ன? இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா? அவனுக்கு எதற்கு குழந்தை. கொலைகாரனின் குழந்தை என்ற அவப்பெயருடன் ஒருகுழந்தை பிறந்து அதன் வாழ்நாள் முழுவதும் மனம் சங்கடப்படுவது மட்டும் அந்த குழந்தையின் உரிமையில் தலையிடுவதாகாதா? அடப்போங்கப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
குழந்தை இவுங்களுக்கு ரொம்ப முக்கியம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
நேசமுடன் ஹாசிம் wrote:உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)
நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.
சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
அதைத்தான் நான் சொல்ல வந்தேன் அண்ணா கருணை உள்ளமும் மனித இயல்புதானே ஒருவன் பிழை செய்தான் என்பதற்காக நாமும் பிழைசெய்திட முடியாதில்லையா அதனால்தான் சொன்னேன் கோட்டின் தீர்ப்பும் அந்த கருணை அடிப்படையில்தான் இத்தீர்ப்பினையும் வழங்கியிருக்கிறதுசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)
நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.
சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது
அவனுடைய பிழைக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாகிவிட்டது அதன்பிறகும் தண்டனை வழங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி தீர்ப்பு வரவேற்கத்தக்தே என்பது எனது பார்வை
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் நான் சொல்ல வந்தேன் அண்ணா கருணை உள்ளமும் மனித இயல்புதானே ஒருவன் பிழை செய்தான் என்பதற்காக நாமும் பிழைசெய்திட முடியாதில்லையா அதனால்தான் சொன்னேன் கோட்டின் தீர்ப்பும் அந்த கருணை அடிப்படையில்தான் இத்தீர்ப்பினையும் வழங்கியிருக்கிறதுசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உயிர் கொல்லாத மனிதர்களே இல்லையே அண்ணா! நீங்கள் எந்த உயிரையும் கொலை செய்ததே இல்லையாசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆனாலும் அண்ணா மனிதன் என்று வரும் போது ஆசை தவறு பிழை அத்தனைக்கும் மத்தியில்தான் வாழ்கிறான் ஒரு சந்தர்பத்தில் செய்கின்ற பிழைகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது அவனது பிழைக்கு பரிகாரம் கிடைத்துவிடுகிறதுதானே அவனை மனிதனாக மதித்து அவனது அடிப்படைத்தேவைக்கு வழிசெய்தல் நாம் மனிதர்கள் என்று உணர்த்துவதாகாதா??
இன்னொரு உயிரை கொல்பவன் மனிதனா?
தம்பி உங்கள் கருணை உள்ளம் புரிகிறது. நான் சிக்கன் மட்டன் இவைகளை கொல்லவில்லை. ஆனால் கொன்ற இறைச்சியை தான் வாங்கி வந்து உண்பேன் :)
நீங்கள் சொல்லும் புல் பூண்டு போன்றவற்றில் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் உயிர்கள் தான் நானும் அறிவேன்.
சிறுபிள்ளையை கடத்தி 10 லட்சம் கேட்டு அதை கொன்றும் விட்டான். அது மிகப்பெரிய தவறாயிற்றே. சரி கடவுளின் பார்வையில் அவனுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது அதனால் தான் என்னவோ கோர்ட் அப்படி தீர்ப்பு கொடுத்திருக்கிறது
அவனுடைய பிழைக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாகிவிட்டது அதன்பிறகும் தண்டனை வழங்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி தீர்ப்பு வரவேற்கத்தக்தே என்பது எனது பார்வை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் தந்து முடித்துவிட்டிங்களே அண்ணா.
சிறையில் முத்தம் கூட கொடுக்க அனுமதி கொடுக்கனும்னு நான் நீதிபதியை கேட்கபோறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் தந்து முடித்துவிட்டிங்களே அண்ணா.
பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் துரோகம் குரோதம் எனும் செயல்களாலேயே உலகில் அமைதியின்மை போர் என தொடர்கிறது. இறைவனின் எண்ணமும் இதனால் நாம் அறியமுடியாமல் போகிறது. அதனை நினைவூட்டியமைக்கு தான் உங்களுக்கு முத்தம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
ரொம்ப முக்கியம் அது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
*சம்ஸ் wrote:ரொம்ப முக்கியம் அது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
*சம்ஸ் wrote:ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.
ரொம்ப முக்கியம் இல்லாத விசயம் பக்கம் இருந்து சீக்கிரம் ஓடிடனும்னு தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
சுறா wrote:*சம்ஸ் wrote:ஏன் அண்ணா என்ன அவசரம் உங்களும் இப்படி ஓடுறீங்க?பதில் சொல்லிட்டு போங்க.
ரொம்ப முக்கியம் இல்லாத விசயம் பக்கம் இருந்து சீக்கிரம் ஓடிடனும்னு தான்
ஓ.........அப்படியா அண்ணா அப்படியென்றால் சரிதான்.
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
மிகக்கேவலமான தீர்ப்பு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
அப்பா மரண தண்டனை கைதி. அம்மா ஆயுள் கைதி.. இவர்களுக்கு குழந்தை தேவையாஅப்படி ஒரு ஜீவன் இனி இவ்வுலகில் பிறந்து அதுவும் பாடுகளும், அவமானங்களும் பட வேண்டுமா?
நீதிமன்றங்கள் தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியும். நிதானமான வாழ்க்கையையும் அமைத்து தருமா?
நாளை அந்த குழந்தை வளர்ந்து என்னை ஏன் பெற்றாய் என கேட்கும் போது இதே நீதிமன்றம் என்ன பதில் சொல்லும்?
நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கும் குழந்தைகளே வாழ்வில் தறிகெட்டு போய் போராடும் சூழலில் சிறையில் இருப்பவர்களுக்கு குழந்தை அவசியமா?
தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தபின் அவன் செய்த தவறு தவறல்லாது போகும் எனில்’ அவனால் போக்கப்ட்ட உயிருக்கு மீண்டும் உயிர் வருமா? நீதி மன்ற தீர்ப்பு என்பது தண்டனையா? இனிமேலும் வேறு ஒருவருக்கு அக்குற்றவாளி தீங்கிளைக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் சிறைத்தண்டனையை எடுத்து கொள்ளணும். சிறையில் இருக்கும் நாளில் அவன் செய்த தப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாய் அங்கிருக்கும் காலம் அவனை உந்தணும்.-
அதை விட்டு விட்டு இருவர் இணைந்து செய்த தப்புக்கு பரிகாரமாய் தண்டனை கொடுத்த பின் இன்னொரு உயிரை ஜனிக்க வைத்து அதையும் தண்டனைக்குள்ளாக்குவது கண்டிக்க பட வேண்டியது!
நீதிமன்றங்கள் தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியும். நிதானமான வாழ்க்கையையும் அமைத்து தருமா?
நாளை அந்த குழந்தை வளர்ந்து என்னை ஏன் பெற்றாய் என கேட்கும் போது இதே நீதிமன்றம் என்ன பதில் சொல்லும்?
நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கும் குழந்தைகளே வாழ்வில் தறிகெட்டு போய் போராடும் சூழலில் சிறையில் இருப்பவர்களுக்கு குழந்தை அவசியமா?
தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தபின் அவன் செய்த தவறு தவறல்லாது போகும் எனில்’ அவனால் போக்கப்ட்ட உயிருக்கு மீண்டும் உயிர் வருமா? நீதி மன்ற தீர்ப்பு என்பது தண்டனையா? இனிமேலும் வேறு ஒருவருக்கு அக்குற்றவாளி தீங்கிளைக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் சிறைத்தண்டனையை எடுத்து கொள்ளணும். சிறையில் இருக்கும் நாளில் அவன் செய்த தப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாய் அங்கிருக்கும் காலம் அவனை உந்தணும்.-
அதை விட்டு விட்டு இருவர் இணைந்து செய்த தப்புக்கு பரிகாரமாய் தண்டனை கொடுத்த பின் இன்னொரு உயிரை ஜனிக்க வைத்து அதையும் தண்டனைக்குள்ளாக்குவது கண்டிக்க பட வேண்டியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
எமது கோட்டில் தீர்ப்பெழுதிய நீதிபதிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தல் வேண்டும்Nisha wrote:அப்பா மரண தண்டனை கைதி. அம்மா ஆயுள் கைதி.. இவர்களுக்கு குழந்தை தேவையாஅப்படி ஒரு ஜீவன் இனி இவ்வுலகில் பிறந்து அதுவும் பாடுகளும், அவமானங்களும் பட வேண்டுமா?
நீதிமன்றங்கள் தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியும். நிதானமான வாழ்க்கையையும் அமைத்து தருமா?
நாளை அந்த குழந்தை வளர்ந்து என்னை ஏன் பெற்றாய் என கேட்கும் போது இதே நீதிமன்றம் என்ன பதில் சொல்லும்?
நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் பிறக்கும் குழந்தைகளே வாழ்வில் தறிகெட்டு போய் போராடும் சூழலில் சிறையில் இருப்பவர்களுக்கு குழந்தை அவசியமா?
தவறு செய்தவனுக்கு தண்டனை கொடுத்தபின் அவன் செய்த தவறு தவறல்லாது போகும் எனில்’ அவனால் போக்கப்ட்ட உயிருக்கு மீண்டும் உயிர் வருமா? நீதி மன்ற தீர்ப்பு என்பது தண்டனையா? இனிமேலும் வேறு ஒருவருக்கு அக்குற்றவாளி தீங்கிளைக்க கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் சிறைத்தண்டனையை எடுத்து கொள்ளணும். சிறையில் இருக்கும் நாளில் அவன் செய்த தப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாய் அங்கிருக்கும் காலம் அவனை உந்தணும்.-
அதை விட்டு விட்டு இருவர் இணைந்து செய்த தப்புக்கு பரிகாரமாய் தண்டனை கொடுத்த பின் இன்னொரு உயிரை ஜனிக்க வைத்து அதையும் தண்டனைக்குள்ளாக்குவது கண்டிக்க பட வேண்டியது!
தவறான தீர்ப்பினை எழுதிவிட்டார்கள்
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
ஹாஹா! ஹாசிம்.
கொஞ்சம் இருங்க.. அவங்களுக்கு பிறக்கும் குழந்தையே ஏன் இப்படி தீர்ப்பு செய்து நான் பிறக்கும் தண்டனை தந்தாய் என அவர்களை போட்டு தள்ளினாலும் தள்ளலாம்.
கொஞ்சம் இருங்க.. அவங்களுக்கு பிறக்கும் குழந்தையே ஏன் இப்படி தீர்ப்பு செய்து நான் பிறக்கும் தண்டனை தந்தாய் என அவர்களை போட்டு தள்ளினாலும் தள்ளலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
குழந்தை பிறக்குதோ இல்லையோ அடிப்படை மனித உரிமை அடிப்படையில் கணவன் மனைவி அதே சிறையில் இருக்க அவர்களை சேர்ந்திருக்கச்செய்தல் தவறில்லைதானே பாவம் அவர்களும் மனிதர்களே.............Nisha wrote:ஹாஹா! ஹாசிம்.
கொஞ்சம் இருங்க.. அவங்களுக்கு பிறக்கும் குழந்தையே ஏன் இப்படி தீர்ப்பு செய்து நான் பிறக்கும் தண்டனை தந்தாய் என அவர்களை போட்டு தள்ளினாலும் தள்ளலாம்.
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
அடடா!
அதை ஏன் ஜெயிலில் வைத்திருக்கணும். பேசாம்ல் தனி வீடு எடுத்து தங்க வைக்கலாம்ல.. சில விடயங்களுக்கு பாவம், புண்ணியம், பரிகாரம் பார்க்க முடியாது ஹாசிம்.
அரசன் அன்றறுப்பான்.. தெய்வம் நின்றறுக்கும் என்பர். கடவுளின் தீர்ப்பு மனித தீர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நாம் உண்ர்வு வேகத்தில் செய்யும் முடிவுகள் எல்லாமே எப்போதும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாதே!
இன்னொரு தாய் தகப்பனும் புத்திர சோக வேதனை யை உணர செய்யணும் எனில் இந்த மாதிரி மனிதாபிமான சிந்தனைகள் தப்பை உணர்த்தும் வடிகாலாகாது.
ஒன்று கிடைக்காது எனும் போது தான் அதன் அருமை புரியும். அவசியமும் புரியும். எல்லாம் கிடைக்கும் எனும் போது அவர் தாம் செய்த தப்பை உணரும் வாய்ப்பேது ?
அதை ஏன் ஜெயிலில் வைத்திருக்கணும். பேசாம்ல் தனி வீடு எடுத்து தங்க வைக்கலாம்ல.. சில விடயங்களுக்கு பாவம், புண்ணியம், பரிகாரம் பார்க்க முடியாது ஹாசிம்.
அரசன் அன்றறுப்பான்.. தெய்வம் நின்றறுக்கும் என்பர். கடவுளின் தீர்ப்பு மனித தீர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நாம் உண்ர்வு வேகத்தில் செய்யும் முடிவுகள் எல்லாமே எப்போதும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாதே!
இன்னொரு தாய் தகப்பனும் புத்திர சோக வேதனை யை உணர செய்யணும் எனில் இந்த மாதிரி மனிதாபிமான சிந்தனைகள் தப்பை உணர்த்தும் வடிகாலாகாது.
ஒன்று கிடைக்காது எனும் போது தான் அதன் அருமை புரியும். அவசியமும் புரியும். எல்லாம் கிடைக்கும் எனும் போது அவர் தாம் செய்த தப்பை உணரும் வாய்ப்பேது ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
சரிதான் அக்கா ஒவ்வொருத்தருடைய பார்வையும் கருணையும் வேறு வேறாக அமைகிறதென்பதுதான் உண்மைNisha wrote:அடடா!
அதை ஏன் ஜெயிலில் வைத்திருக்கணும். பேசாம்ல் தனி வீடு எடுத்து தங்க வைக்கலாம்ல.. சில விடயங்களுக்கு பாவம், புண்ணியம், பரிகாரம் பார்க்க முடியாது ஹாசிம்.
அரசன் அன்றறுப்பான்.. தெய்வம் நின்றறுக்கும் என்பர். கடவுளின் தீர்ப்பு மனித தீர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நாம் உண்ர்வு வேகத்தில் செய்யும் முடிவுகள் எல்லாமே எப்போதும் சரியாக இருக்கும் என சொல்ல முடியாதே!
இன்னொரு தாய் தகப்பனும் புத்திர சோக வேதனை யை உணர செய்யணும் எனில் இந்த மாதிரி மனிதாபிமான சிந்தனைகள் தப்பை உணர்த்தும் வடிகாலாகாது.
ஒன்று கிடைக்காது எனும் போது தான் அதன் அருமை புரியும். அவசியமும் புரியும். எல்லாம் கிடைக்கும் எனும் போது அவர் தாம் செய்த தப்பை உணரும் வாய்ப்பேது ?
அதற்கு உதாரணமாக இதை கொள்ளலாம்
Re: சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
சிறை என்பது ஒரு வெளிஉலகில் ஒரு மனிதன் என்னவெல்லாம் அனுபவித்தானோ அதெல்லாம் கிடைக்காமல் நெருக்கடியான ஒரு வாழ்வைத்தரக்கூடிய இடம். அப்படித்தான் இருக்கவேண்டும்.
தவறு செய்யக்கூடியவன் சிறைக்கு செல்வதற்கு சிறையில் கிடைக்கின்ற தண்டனைகளுக்கு பயப்படவேண்டும்.
ஆனால் இந்த நாட்டில் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமென்றால் சிறைக்கு செல்லலாம் போலிருக்கிறது.
3 வேலை உணவு. கேலிக்கைக்கு சினிமாக்கள் காட்டப்படுகின்றன.
தவறுகள் கூடக்கூட சுகபோகங்கள் அதிகமாக சிறையில் கிடைக்கின்ற ஒரு நிலை.
இப்போது இதுவும்.
என்ன தீர்ப்போ!?
Sliding hairSliding hairSliding hair
தவறு செய்யக்கூடியவன் சிறைக்கு செல்வதற்கு சிறையில் கிடைக்கின்ற தண்டனைகளுக்கு பயப்படவேண்டும்.
ஆனால் இந்த நாட்டில் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமென்றால் சிறைக்கு செல்லலாம் போலிருக்கிறது.
3 வேலை உணவு. கேலிக்கைக்கு சினிமாக்கள் காட்டப்படுகின்றன.
தவறுகள் கூடக்கூட சுகபோகங்கள் அதிகமாக சிறையில் கிடைக்கின்ற ஒரு நிலை.
இப்போது இதுவும்.
என்ன தீர்ப்போ!?
Sliding hairSliding hairSliding hair
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பிரசவத்துக்கு பின் தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்.
» ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
» முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
» அன்வர் இப்ராஹிமை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு
» 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!!(படங்கள் இணைப்பு)
» முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
» அன்வர் இப்ராஹிமை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு
» 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|