சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Khan11

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

2 posters

Go down

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Empty வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Post by சே.குமார் Thu 16 Jul 2015 - 21:41

வெள்ளந்தி மனிதர்கள் பலரை இந்த தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதுவேன்.  பெரும்பாலும் என்னைக் கவர்ந்த, மகனாக, சகோதரனாக, நண்பனாகப் பார்த்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். இதில் எழுத இருக்கும் மகான் குன்றக்குடி அடிகளாரை இதற்குள் நிறுத்த முடியாது என்றாலும் என்னைக் கவர்ந்தவர் ஆதலால் இன்றைக்கு அவரைப் பற்றி எழுத வேண்டும் தோன்றியதால் வெள்ளந்தி மனிதராய் இங்கு பகிரப்பட்டிருக்கிறார். அதற்கான காரணமும் இருக்கிறது. அதை இறுதியில் சொல்லியிருக்கிறேன்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் அழகன் முருகனின் திருத்தலமான குன்றக்குடி, காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் கோவிலூரில் இருந்து பத்து கிலோமீட்டருக்குள் இருக்கிறது. குன்றக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி... நமக்கு பைக்கில் பயணிக்கும் தூரமே என்பதால் இரண்டு ஸ்தலங்களுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.
வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 1011814


குன்றக்குடியில் முருகனைத் தரிசிக்க மட்டுமே வந்து கொண்டிருந்தவர்களை, எங்கள் பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள்தான் அடிகளாரைப் (பெரிய அடிகளார்) பார்க்க அழைத்து வந்தார். குன்றக்குடி அடிகளாருக்கும் ஐயாவுக்கும் ரொம்ப நெருக்கம். அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் ஐயா அவரிடம் நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் முருகனுக்கும் அவரிடம் பேசுவதற்கே பயம். அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றுவிடுவோம். அடிகளாரிடம் பேசுவதற்கே எல்லாரும் பயப்படுவார்கள்.
தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாவில் சிறப்புரை ஆற்றவும் மற்றும் சில விழாக்களுக்கும் அடிகளார் அவர்கள் வருவார்கள். அப்போதெல்லாம் அவரிடம் ஐயாவின் மாணவர்களாக பேசி, ஆசி வாங்கியிருக்கிறோம். அடிகளாரின் பின்னே ஒரு இளைஞராக, அடுத்த குன்றக்குடி அடிகளாராக உருவாகிக் கொண்டிருந்த பொன்னம்பல அடிகளார் வருவதுண்டு. அதிகம் பேசமாட்டார். அவரது கருந்தாடிக்குள் மென்மையாய் ஒரு சிரிப்பு எப்போதும் ஒளிந்திருக்கும்.
பெரியவரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டவர், பெரியவர் ஆரம்பித்து வைத்த கல்வி, தொழிற்கூடங்களை எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி குன்றக்குடிப் பகுதியை சிறப்பானதொரு பகுதியாக மாற்றியிருக்கிறார். இவரும் ஐயாவின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். ஆரம்பத்தில் அதிகம் பேச மாட்டார். பாரதி விழாவுக்கு வரும்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் பேசுவார். பின்னர் வருடங்கள் ஆக, ஆக அவரது பேச்சின் வீரியமும் அகண்ட பார்வையும் எல்லோரையும் ஈர்க்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அழகாக, மிக அருமையாக பேசுகிறார்.
வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Maxresdefault

பெரியவர் இருக்கும் போது குன்றக்குடி மடத்து மாடியில் இருக்கும் அவரது அறைக்குச் செல்ல ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. கீழே வந்துதான் எல்லோரையும் பார்ப்பார்... பேசுவார்... ஆசி வழங்குவார். பெரும்பாலும் யாரையும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லமாட்டார். ஆனால் பொன்னம்பல அடிகளாரை ஐயாவுடன் போகும் போதும் அதன் பின் முருகனுடன் போகும் போதும் இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தி போனதும் மேலே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி அவரது அறையிலேயே சந்திப்பார். ஐயாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ப்பார். அப்போதெல்லாம் எங்காவது விழாவில் பேசிவிட்டு வந்திருந்தால் அது பற்றி ஐயாவிடம் நீண்ட நேரம் உரையாடுவார். மிகவும் பண்பாகப் பேசுவார். 
எங்கள் திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசி வாங்க முருகனுடன் சென்றோம். மேலே வரச்சொல்லி எங்களை ஆசிர்வதித்து பழங்கள் கொடுத்தார். இந்தப் பழக்கம் பெரியவரிடமும் இருந்தது. பார்க்கப் போகும் போது பழங்கள் வாங்கிச் சென்றால் அதை வைத்திருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கொடுப்பது அவரின் வழக்கம். அதையே இவரும் கடைபிடித்து வந்தார். 
நல்ல இலக்கியவாதி, ரசனையாக... நிறைய விஷயங்களை ஞானத்துடன் பேசுபவர், இலக்கியவாதிகளுடன் விவாதிப்பவர், அவர்களுக்கு மரியாதை கொடுப்பவர், பாசம் நிறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். என்னடா இன்னைக்கு அடிகளார் பற்றி எழுதியிருக்கானேன்னுதானே நினைக்கிறீங்க.. நண்பன் அவருக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருந்தான். எனக்குள்ளும் பழைய நினைவுகள் மெல்ல எட்டிப் பார்க்க, நானும் இங்கு உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களையும் பகிர்வாக ஆக்கிவிட்டேன்.
முருகன் எந்தச் செயலைச் செய்தாலும் அடிகளார் இல்லாது செய்வதில்லை. அடிக்கடி அவரைச் சந்திக்கிறான்.  அவனது இல்லத்துக்கு கூட பொன்னம்பலக் குடில் என்று வைத்திருக்கிறான். நான் வெளிநாடு வந்தபின்னர் அவரைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அடிகளாரைப் பார்க்கப் போவோமா என்று முருகன் கேட்பதுண்டு. நமக்குத்தான் நேரம் கிடைப்பதில்லை.
அடிகளாரின் மிகச் சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று... நீங்களும் கேட்டுப் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்.



எனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன். முத்துநிலவன் ஐயா கூட எப்போது சிறுகதை தொகுப்பு வருகிறது என்று கேட்டிருந்தார்கள். முருகன் அருளால் தொகுப்பு கொண்டு வரும் போது அடிகளார் அவர்களின் அணிந்துரையோடும் எனது பேராசானின் வாழ்த்துரையோடும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணம். அந்த குன்றக்குடி சண்முகநாதன் நினைத்தால் எல்லாம் நடக்கும். பார்க்கலாம்.
எங்கள் அன்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னும் இலக்கியப் பெட்டகத்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவரின் ஆசியை வேண்டி....
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Post by Nisha Sat 18 Jul 2015 - 1:59

குன்னக்குடி அடி களார் பற்றி அறியச்செய்தமைக்கு நன்றி. 

எனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன்.

கை கூடும் வேலையா? வேளையா?

எதுவோ சீக்கிரம் சிறுகதைத்தொகுப்பை மட்டும் அல்ல தொடர் கதையையும் கூட   புத்தகமாக்கி வெளியிடுங்கள். 

உங்கள் கதையை பாக்யாவில்  தொடராய் வெளியிட  பூங்கதிர் சாரிடம்  நான் டெக்மெண்ட் செய்தேன்னு சொல்லுங்கள் குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Post by சே.குமார் Sat 18 Jul 2015 - 9:11

Nisha wrote:குன்னக்குடி அடி களார் பற்றி அறியச்செய்தமைக்கு நன்றி. 

எனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன்.

கை கூடும் வேலையா? வேளையா?

எதுவோ சீக்கிரம் சிறுகதைத்தொகுப்பை மட்டும் அல்ல தொடர் கதையையும் கூட   புத்தகமாக்கி வெளியிடுங்கள். 

உங்கள் கதையை பாக்யாவில்  தொடராய் வெளியிட  பூங்கதிர் சாரிடம்  நான் டெக்மெண்ட் செய்தேன்னு சொல்லுங்கள் குமார்!
பாக்யாவிலா... அம்புட்டு நல்லாவா இருக்கு,,,
வேளை என்றுதானே வரணும்... தவறுதான் அக்கா...
கண்டிப்பாக புத்தகம் கொண்டு வரணும் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum