சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Khan11

கே இனியவனின் பல்வகை கவிதைகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 6:42

நீ 
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!

எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 7:01

நட்பு , நண்பன் ....
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!

எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும் 
நட்பு ஒரு தராசு ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 7:08

வாழ்கை தொடக்கம் 
வாழ்கை முடிவு 
பூ மாலை 

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 7:19

உன்னோடு ....
எடுத்த செல்ஃ யும் 
நீ பேசிய வார்த்தையின் ....
கைபேசி பதிவும் ....
உன் ப்ரோஃ பைல் படமும் ...
நாம் பிரிந்திருந்தாலும் .....
நினைவுகளை உயிர்கிறது ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
கைபேசி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 7:35

காதலுக்கு 
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ 
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின் 
கொடுமையை உணர்கிறேன் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல்தோல்வி  கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 7:45

நீண்டுகொண்டே போகிறது ...
தொலைகாட்சி தொடர்கள் ....
சுருங்கிக்கொண்டே போகிறது ...
உறவுகளின் தொடர்பு ....!!!

வந்த உறவை வரவேற்க .....
நேரமற்று... விருப்பமற்று ....
படலையுடன் திருப்பியனுப்பும்....
தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 5:53

தமிழ்மொழி  இனிமை மொழி .....
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ்  " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட  மொழி ....!!!

என் தமிழ் மொழி ....
தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!

தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழிகவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by சே.குமார் Mon 27 Jul 2015 - 6:30

கவிதை அருமை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 6:31

காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!

வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?

அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!

ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....

அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...?  ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!

போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை விட்டிவிடகூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!

அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!

இப்போதுதான் புரிந்தது .....
மூத்தாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!

இன்றைய நவீன உலகில் வாழும் ....
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை 
( மரங்களை காப்பாற்றுவோம் )  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 6:53

முயற்சிக்க கூடாததை ...
முயற்சிக்காதே ....
முயற்சிக்க கூடியதை ....
முயற்சிக்காமல் இருக்காதே ....!!!

முயற்சி 
தெருவில் இருப்பவனையும் ....
திருவினையாக்கும் 
முயற்சி இல்லாதவன் ...
முழுவதையும் இழப்பான் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 7:15

ஒரு உடலில் இரண்டு ....
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!

வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம் 
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து 
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 7:29

நாம் ஒவ்வொருவரும் ...
பொய்யர்கள் தான் ...
நம் நிழல் காட்டுகிறது ....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 17:49

ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒன்றில் 
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி 
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 29 Jul 2015 - 4:30

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
மூன்றுவரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 29 Jul 2015 - 4:37

சுவருக்குள் சண்டை 
பரகசியமாகிறது 
தொலைகாட்சி நிகழ்சி 

$$$

குழந்தையால் முடியாது 
தாத்தாவால் முடியாது 
புஸ்பம் 

$$$

உயிரில்லை 
பேசிகொண்டிருக்கும் 
தொலைக்காட்சி 

$$$

பலதிருமணம் 
சட்டம் தடுக்காது 
திரைப்படம் 

$$$

கடவுளே பாதுகாத்திடு 
கோயிலில் வேண்டுதல் 
வாசலில் புதுச்செருப்பு 

$$$

கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
சென்ரியூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Aug 2015 - 14:06

காதலுக்காக 
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது 
காதலை மதிக்காதவர்கள் 
செய்யும் முட்டாள் தனம் ...!!!

காதல் 
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால் 
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 6:23

என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 11:37

நட்பு ...
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!

இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு 
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 11:45

தாயே உலகம் 
தாயே உணவு 
குழந்தை பருவம் 

@@@

தாயே உலகம் 
கல்வியே உயர்வு 
பள்ளி பருவம் 

@@@

தாயே கடவுள் 
உழைப்பே உலகம் 
இளமைப்பருவம் 

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஹைக்கூ கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 11:53

உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!

உன்னையும் 
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
கைபேசி கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 12:05

தண்ணீரால் என் முகம் 
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என் 
சுவாசம் உன்  நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் தோல்வி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 12:15

பிறக்கும்போதே வாழ்கையை ...
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!

அனுபவங்களே 
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்க்கை  கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கமாலுதீன் Tue 4 Aug 2015 - 12:31

பல்வேறு கவிதைகளில் காதல், நட்பு, பாசம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய‌ இன்றைய‌ இனிய கவிதைகளில் அனைத்தையும் ரசித்தேன். நன்றியும் பாராட்டுக்களும் இனியவன் சார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 12:40

" அ " அன்புக்கு அம்மா 
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன் 
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 12:47

கமாலுதீன் wrote:பல்வேறு கவிதைகளில் காதல், நட்பு, பாசம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய‌ இன்றைய‌ இனிய கவிதைகளில் அனைத்தையும் ரசித்தேன். நன்றியும் பாராட்டுக்களும் இனியவன் சார்.
முதல் கண் உங்கள் ரசனைக்கு  மிக்க நன்றி 
இனியவன் ஓரே காதல் கவிதை தான் எழுதுகிறார் 
மற்றகவிதை வகை   எழுதுங்கள் என்றார்கள் . நான் பல முறை 
பலவகை கவிதை எழுதியுள்ளேன் .

இப்போ ஒரே திரியில் எழுதுகிறேன் 
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum