Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
2 posters
Page 1 of 1
திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
சுமார் 4 வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…...
“உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,
அயல்நாட்டில் வேலைசெய்பவனை கட்டிக்கொடுத்தார்கள் உறவுகள்!
அவள் மனதாய் நான்”
திரும்பி வந்துவிடு என் கணவா….
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
என்மகளின் மாப்பிள்ளை வெளிநாடு ஒன்றில்
பெரியபதவியில் இருக்கிறார்
என்று பெருமை பேசுபவர்களிடம்
சொல்ல முடியாதவைகள்
நிறையவே இருக்கிறது கணவா!!
கணவனோடு ஒரு மாதம்…
கனவுகளோடு பதினொரு மாதமா….???
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்……..
வருடமொருமுறை மட்டும் எனக்குக் கணவன்…
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது எனக்கான வரமா….? சாபமா….?
கண்ணாடிமுன் நின்று
மெய்யாய் முகச்சாயம்பூசி
பொய்யாய் புன்னகைக்கும்போது
என்கண்ணீரை கண்ணாடி தடுக்கவில்லையே கணவா
இது வரமா? சாபமா?
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்,
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,
கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
அழுவதும்… அணைப்பதும்…
கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
இடைகிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா
“அடி கள்ளி “.
இவையெல்லாம் ஒரு மாதம் தந்துவிட்டு…
எனைத் தீயில் தள்ளி
வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாயே…
என் கணவா…!
கணவா – எல்லாமே கனவா?
நான் தாகத்தில் நிற்கிறேன்,
நீ கிணறு வெட்டுகிறாய்….!!
நான் மோகத்தில் நிற்கிறேன்,
நீ விசாவை காட்டுகிறாய்.
நியாயமா….???
முப்பது நாள் சந்தோசத்தில்
மூன்றுநாள் மதவிலக்காய் கழிந்துபோக
மீதிநாட்கள்,
ஆடம்பர வாழ்க்கை,
உல்லாச உறவு,
சுருக்கமாய் சில உறவுகளோடு மட்டும்
சுகம் விசாரிக்கும் பாசாங்கு வாழ்க்கை
எனக்கு புளித்து விட்டது கணவா….!!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா…?
எப்போதாவது வருவதற்கு நீ என்ன
கரடிகாணும் பிறையா…??
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
E-Cash வரும், பாசம் வருமா…?
பணம்தரும் ATM, முத்தமாவது தருமா….???
நீ இழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிகமாகிவிட்டதால்,
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?
பாலைவனத்திலும் AC யினுள் நீவாழ,
மார்கழியிலும் வறண்டது
என்வாழ்வு மட்டுமே கணவா….!
திரும்பி வந்துவிடு என் கணவா,
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…!!
விட்டுக்கொடுத்து….
தொட்டுப்பிடித்து…
தேவை அறிந்து…
சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து…
எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு…
தூங்குவதாய் உன் நடிப்பு…
விழித்துவிடு கணவா!
விழித்து விடு…!!
வார விடுமுறையில் பிரியாணி….
காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படிக் காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்,
என் கணவா….!!
ஈச்சமரம் சாய்ந்து நீ அனுப்பிய புகைப்படம்
அந்தமரமாய் நான் இருக்கவெண்ணி
வெதும்பும் என்மனம்..!!
வந்துவிடு கணவா வந்துவிடு….
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே என் கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல்,
விவாக ரத்து செய்துவிட்டுப்போ…!!!
நானும் கண்ணகியாகவேண்டும்
ஊர்ஊராய் எரிப்பதற்கு அல்ல….!!!
நாடுநாடாய் சென்று
கடவுச்சீட்டு காரியாலயங்களை
மட்டும் எரிப்பதற்கு….!!!
இதில் எத்தனை உண்மை உள்ளது பாஸ் அனைவரலாலும் சொல்ல முடியாத பல விடயங்கள் யாரோ ஒருவர் மனம்திறந்து சொல்லி இருக்கிறார்.படித்தேன் சிந்தித்தேன்.பகிர்ந்தேன் தவறுயிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி புதிய தமிழர்கள்.
“உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,
அயல்நாட்டில் வேலைசெய்பவனை கட்டிக்கொடுத்தார்கள் உறவுகள்!
அவள் மனதாய் நான்”
திரும்பி வந்துவிடு என் கணவா….
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
என்மகளின் மாப்பிள்ளை வெளிநாடு ஒன்றில்
பெரியபதவியில் இருக்கிறார்
என்று பெருமை பேசுபவர்களிடம்
சொல்ல முடியாதவைகள்
நிறையவே இருக்கிறது கணவா!!
கணவனோடு ஒரு மாதம்…
கனவுகளோடு பதினொரு மாதமா….???
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்……..
வருடமொருமுறை மட்டும் எனக்குக் கணவன்…
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது எனக்கான வரமா….? சாபமா….?
கண்ணாடிமுன் நின்று
மெய்யாய் முகச்சாயம்பூசி
பொய்யாய் புன்னகைக்கும்போது
என்கண்ணீரை கண்ணாடி தடுக்கவில்லையே கணவா
இது வரமா? சாபமா?
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்,
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,
கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
அழுவதும்… அணைப்பதும்…
கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
இடைகிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா
“அடி கள்ளி “.
இவையெல்லாம் ஒரு மாதம் தந்துவிட்டு…
எனைத் தீயில் தள்ளி
வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாயே…
என் கணவா…!
கணவா – எல்லாமே கனவா?
நான் தாகத்தில் நிற்கிறேன்,
நீ கிணறு வெட்டுகிறாய்….!!
நான் மோகத்தில் நிற்கிறேன்,
நீ விசாவை காட்டுகிறாய்.
நியாயமா….???
முப்பது நாள் சந்தோசத்தில்
மூன்றுநாள் மதவிலக்காய் கழிந்துபோக
மீதிநாட்கள்,
ஆடம்பர வாழ்க்கை,
உல்லாச உறவு,
சுருக்கமாய் சில உறவுகளோடு மட்டும்
சுகம் விசாரிக்கும் பாசாங்கு வாழ்க்கை
எனக்கு புளித்து விட்டது கணவா….!!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா…?
எப்போதாவது வருவதற்கு நீ என்ன
கரடிகாணும் பிறையா…??
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
E-Cash வரும், பாசம் வருமா…?
பணம்தரும் ATM, முத்தமாவது தருமா….???
நீ இழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,
அனுமதிக்கப்பட்ட எடையைவிட அதிகமாகிவிட்டதால்,
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?
பாலைவனத்திலும் AC யினுள் நீவாழ,
மார்கழியிலும் வறண்டது
என்வாழ்வு மட்டுமே கணவா….!
திரும்பி வந்துவிடு என் கணவா,
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…!!
விட்டுக்கொடுத்து….
தொட்டுப்பிடித்து…
தேவை அறிந்து…
சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து…
எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு…
தூங்குவதாய் உன் நடிப்பு…
விழித்துவிடு கணவா!
விழித்து விடு…!!
வார விடுமுறையில் பிரியாணி….
காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படிக் காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்,
என் கணவா….!!
ஈச்சமரம் சாய்ந்து நீ அனுப்பிய புகைப்படம்
அந்தமரமாய் நான் இருக்கவெண்ணி
வெதும்பும் என்மனம்..!!
வந்துவிடு கணவா வந்துவிடு….
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே என் கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல்,
விவாக ரத்து செய்துவிட்டுப்போ…!!!
நானும் கண்ணகியாகவேண்டும்
ஊர்ஊராய் எரிப்பதற்கு அல்ல….!!!
நாடுநாடாய் சென்று
கடவுச்சீட்டு காரியாலயங்களை
மட்டும் எரிப்பதற்கு….!!!
இதில் எத்தனை உண்மை உள்ளது பாஸ் அனைவரலாலும் சொல்ல முடியாத பல விடயங்கள் யாரோ ஒருவர் மனம்திறந்து சொல்லி இருக்கிறார்.படித்தேன் சிந்தித்தேன்.பகிர்ந்தேன் தவறுயிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி புதிய தமிழர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
இதை நானும் ஒலி வடிவில் ஒரு குரலில் கேட்டேன் மிகவும் வருத்தமாக இருந்தது முடிவெடுக்கும் நாட்கள் வந்து விட்டது என்ற மன ஆறுதலில் இருக்கிறேன் இறைவன் துணையோடு நாடு செல்ல நான் தயாராகி விட்டேன் இதை இறைவன் மாற்றாமல் என்னையும் எங்களையும் நாட்டில் நிலையான தொழிலோடு அமர்த்த வேண்டும் ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
» உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
» நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
» வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை
» தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்
» உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!
» நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
» வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை
» தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|