சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Khan11

சின்னச் சின்ன கதைகள்

5 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Oct 2015 - 16:57

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Nov 2015 - 4:32

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...

அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள்,
நான் மருத்துவமனையில் இல்லை...
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால்
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்"
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன்
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்,
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா?
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன்
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.
‪#‎நீதி‬:
எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???
எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???
எனக்கு வேறு கருத்தில்லை இதுவே எனது கருத்தும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 15:03

எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,
------------
ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,

வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...

அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள்,
நான் மருத்துவமனையில் இல்லை...
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால்
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்"
என்று கூறினார்.

"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன்
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.

அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்,
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று சொன்னபடி,

"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா?
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...

இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அழைத்தவுடன்
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்" என்று கூறினாள்.

‪#‎நீதி‬:
எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,

அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!

"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...

மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...

பின்பு ஏன்...???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Dec 2015 - 15:04

கண்களை கலங்க வைத்த பதிவு
படித்தது
பகிர்கிறேன்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் 
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது 
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் 
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி 
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து 
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று 
அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே 
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.
அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, 
மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த 
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு 
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது 
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல 
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், 
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது, 
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் 
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 18:59

கவிப்புயல் இனியவன் wrote:கண்களை கலங்க வைத்த பதிவு
படித்தது
பகிர்கிறேன்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் 
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது 
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் 
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி 
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து 
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று 
அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே 
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.
அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, 
மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த 
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு 
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது 
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல 
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், 
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே.,
இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது, 
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் 
தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

அன்றும் படித்தேன் இன்றும் படித்தேன்  சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 21:27

கண்கலங்க வைத்த கதை.
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Dec 2015 - 20:09

சே.குமார் wrote:கண்கலங்க வைத்த கதை.
பகிர்வுக்கு நன்றி.
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 16:28

ஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….!!
---------------

அத்தெரு வழி நடக்கையிலெல்லாம் எல்லார் கண்ணிலும் அக்கதவு படும்.. நீண்ட பெரிய மரக்கதவு பல ஆண்டுகாலமாக மழை கண்டு ஈரமேறி, வெயிலின் காட்டலில் முறுக்கேறி இளவட்ட பயல்களின் அரும்பு மீசை முறுக்கைப் போல் வளைந்து நெளிந்து நிற்கும்..

அந்தக் கதவு பல நேரம் அடைத்தே இருக்கும்.. வெகு சில நேரத்தில் மட்டுமே அதன் மேல் அச்சிறுமி ஏறி இங்குமங்கும் ஆடிய நிலையில் காணலாம்.. அவள் செந்தூர வானத்தின் வெளிறிய மேகம் போல் வெளுத்திருந்தாள்.. அது அழகால் வந்த வெண்ணிறமாய்த் தெரியவில்லை.. சத்தின்றி, ரத்தமற்று மெலிந்து காணும் அவள் உடல் அதனை நன்கு உணர்த்தியது..

அவள் கண்கள் எதையோ தொலைத்த சோகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.. எப்போதேனும் அவ்வழியில் அவளொத்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவள் ஏக்கம் அதில் மேலும் எட்டிப் பார்க்கும்.. பள்ளிச் செல்ல சீருடையோடு போகும் பள்ளிக் குழந்தைகளின் சிரிப்பொலியும் பேச்சுகளும் அவளை கதவிடுக்கில் ஒளிந்தபடி பார்க்க வைக்கும்.. அவளை நான் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவள் முற்றத்தில் பெரும்பாலும் கூட்டி தண்ணீர் இட்டுக் கொண்டிருப்பாள்.. வீட்டினுள்ளிருந்து வரும் கஞ்சியின் வாசனை அவள் அரிசிச் சோறு சமைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொடுக்கும்..

கிழிந்த தன் உடுப்புகளில் அழகழகாய் தையல் கடை குப்பை துணித் துண்டுகளைக் கச்சிதமாய் தைத்திருப்பாள்.. அது அந்த அழுக்கேறிய உடப்பை வனப்பாக்கியிருக்கும்.. ஒன்பது பத்து வயதிருக்கும் அவளுக்கு… தலை முழுக்க தேங்காய் நாறான கூந்தலை பல நேரம் அவள் அலட்சியப் படுத்தி ஒருவாறு முடிந்திருப்பாள்.. சில நேரம் அதில் பக்கத்து வீட்டில் மலரும் சின்ன ரோஜாக்களைச் சூடியிருப்பாள்.. 


அக்கதவுகளுள் செல்ல யாருக்கும் துணிவு வந்ததில்லை.. காரணம் பல நேரம் அக்கதவு வழி கசியும் இறுமலோடான கரடு முரடான கெட்ட வார்த்தைகளென்று ஒரு நாள் யாரோ சொல்ல அறியப் பெற்றேன்.. மற்றுமொரு நாள், அவ்வசை மொழிகளை அக்கதவைக் கடக்கையில் கேட்டுமிருந்தேன்.. அச்சிறுமி கதவைத் திறந்து அதைத் தாங்கி விசும்பியபடி நிற்பதைக் காண நேர்கையில் அவள் விழி நம் விழி பார்த்ததும் குனிந்து கொள்ளும்.. ஆற்றாமையும் அவமானமும் அவள் முகத்தை இன்னும் இருளுக்குக் கொண்டு சென்றிருக்கும்..


அச்சிறுமி பற்றிய நினைவு தொடர்ந்து சில காலம் உறக்கமில்லா நெடிய இரவுகளாக என் இரவுகளை மாற்றியது.. அழுதழுது வீங்கிய கண்களோடு வேறொரு சமயம், சிறுமியைக் காண்கையில் அவள் தன் பிசுபிசுப்பான முடியை வாரிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கென்று தோழியில்லை.. யாரோடும் அவள் பேசுவதைப் பார்த்ததுமில்லை.. 


அவ்வீடு பற்றி யாருக்கும் அதிக நாட்டமிருந்ததில்லை.. ஓர் வயோதிகர் கடும் இறுமல் நோயால் போராடுவதாகவும், அவரின் பேத்தியான அச்சிறுமி தான் அவருக்கு துணையெனவும் பக்கத்து வீட்டு பூந்தோட்டக்காரர் உரைத்திருந்தார்..


ஓர் காலை நேரம், என் பணிக்குச் செல்வதையும் தவிர்த்து, அச்சிறுமி வீட்டினுள் நுழைந்து என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி வெகு வேகமாக நடந்த வண்ணம் அத்தெருவை அடைய..


தெருவில் அச்சிறுமி வீட்டருகே பெருங்கூட்டமொன்று கூடியிருந்தது.. விரைந்து அக்கூட்டதினுள் நுழைந்து அவள் முகம் காண தேட அதிர்ச்சியில் கண்கள் உறைந்தது..


அழுக்குத் துண்டையும் கிழிந்த பழுப்பேறிய வேட்டியையும் எலும்புடலோடிருந்த அம்முதியவர் அக்கதவருகே விழுந்திருந்தார்.. கண்கள் மேல் நிலைக்க.. வாய் திறந்த நிலையில் அவரின் நிலை அவர் மரணமடைந்திருப்பதைக் காட்டியிருந்தது.. கைகளிலும் கால்களிலும் சங்கலி பூட்டியிருக்க.. அது பாதியறுந்து கீழே கிடந்தது..


சிறுமி ஓர் மூலையில் தன் கால்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது அழுத வண்ணம் இருந்தாள்.. அவளோடான என் அன்புப் பார்வை அவள் அருகில் எனைக் கொண்டு சென்றது.
என் வருகை அவளறியச் செய்ய.. கதவு தாண்டி அவள் குடிசை நுழைந்தேன்.. மூளையில் கிடத்தப்பட்ட அந்த கட்டிலும், மற்றொரு மூலையில் கூட்டப்பட்ட அடுப்பும் போடப்பட்டிருந்தது.. இரு அலுமனியப் பாத்திரமும், ஒரு மண் பானையும் அடுப்பருகே வைக்கப்பட்டிருந்தது..


சிறுமியின் விசும்பல் ஓயவில்லை.. வேடிக்கை பார்ப்பவர் மெல்ல கலையத் துவங்க.. நான் காவல் துறைக்கு தகவல் சொல்ல ஆளை அனுப்ப ஏற்பாடு செய்தேன்.. அச்சிறுமி குறித்து அடுத்த வீட்டு தோட்டக்காரரிடம் சொந்தங்கள் பற்றி கேட்க.. எங்கிருந்தோ ஒரு வருடம் முன்பு வந்தனர்.. உறவென்று இவ்வூரில் யாருமில்லை என்றுரைத்தார்..


உடலை கதவருகிருந்து எடுத்து கூடத்தில் கிடத்தி, மாலை வாங்கி வந்து அணிவித்தேன்... சிறுமி அப்போதும் அழுகை ஓயாமல் விசும்பிய வண்ணமே இருந்தாள்.. மெல்ல அவள் தலை கோத, அவள் திடுக்கிட்டு ஏறிட்டாள்.. கண்கள் சிவக்க.. முகமெல்லாம் வீங்கியிருக்க அவளின் கோலம் மனதை வாட்டியது..என் கண்கள் கண்டதும் சின்ன ஆறுதல் கிட்டியிருக்கக் கூடும்.. அழுகை நின்றிருந்தது.. சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்து அவரை மின்மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஆட்கள் வந்தனர்.


கூட்டம் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி வெளியேறத் தலைப்பட்டனர்.. சிறுமி அதன் பின் அழவே இல்லை.. இருந்த இடம் விட்டும் அசையவுமில்லை.. மாலை நெருங்க.. அவளை விட்டு எப்படி செல்வதென்று யோசனை வரத் துவங்கியது.. அவள் நாள் முழுதும் உண்ண மறுத்ததால் பசியில் வாடித் துவண்டு அவ்விடத்திலேயே படுத்திருந்தாள்.. சொல்லாமல் செல்லச் சொன்ன சிலர், என்னிடம் சொல்லாமலே சென்றிருந்தனர்.. இறுதியில் ஓர் முடிவெடுத்து அவள் கை பற்றி வெளியே வந்தேன்..


அவ்வீட்டு கதவு அதன் பின் திறக்கவே இல்லை.. வழியெங்கும் மஞ்சள் பூக்கள் எங்களை இளஞ்சூரியன் வெளிச்சத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தது.. அச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..

(முற்றும்)

-- பூமகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 16:31

ஈரம் சிறுகதை 
-----------
"யார் மனசிலையும் ஈரமில்ல" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒலி வடிவில் உமிழ்ந்து கொண்டிருந்தது..

மீரா அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் அவள் கண்கள் கலங்கி தொலைக்காட்சித் திரையை தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது..

அறைக்கு அன்று தான் வந்திருந்தாள் தன் பத்தரை மாத்துத் தங்கமான ஒன்றரை மாதத் தங்கத்தை ஏந்தியபடி..

ஏன்.. எப்படி.. எதற்காக.. அங்கே மீரா எப்படி?? அந்த அறையின் நெடி பினாயிலையும் டெட்டாலையும் கலந்து வீசி அது ஒரு மருத்துவமனை என்பதை உறுதியாக்கியது.

"அப்பா.. சொல்லுங்கப்பா.. ஆங்… அஞ்சலி அழுதுட்டே இருக்காள்.. டாக்டர் வந்து பார்த்துட்டு தான் போயிருக்கார்.. எதாவதுன்னா கூப்பிட சொல்லியிருக்கா ர்.. என்ன.. அம்மாவுக்கு காய்ச்சலா? தூக்கிதூக்கி போடுதா.. சரிப்பா.. இங்கையே கூட்டிட்டு வந்துடுங்க.. அட்மிட் செஞ்சாலும் இங்கையே பார்த்துக்கலாம்.. சரி வைச்சிடறேன்"

மனதுக்குள்ளே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் சத்தமாக மீரா. பித்து பிடிக்காத குறையாக மீரா உறங்கா விழிகளோடு கலங்கி தவித்திருந்தாள்..

அப்போது,

"வாங்க அத்தை, வாங்க மாமா.. " - மருத்துவமனை ஆனாலும் விருந்தினரை வரவேற்பது போல வரவேற்பது பண்பாடு.. இங்கே அது சம்பரதாயம் பார்க்கும் நபர்களுக்கு அத்யாவசியமானது.. இதை வைத்து புதுப் பிரச்சனை வரக் கூடதென்ற கவலை மீராவுக்கு..

"தங்கக்குட்டிக்கு என்னாச்சு.. எல்லாம் சரியாயிடும்.. திருநீறு பூசியாச்சு.. சரியாயிடும்.. இந்தா நீயும் வைச்சிக்கோ ஏம்மா மீரா.. டாக்டர் என்ன சொன்னாரு?"

"சரிங்க அத்தை.. டாக்டர் இப்ப வருவார்னு நர்ஸ் சொன்னாங்க.." என்றாள் மீரா.

டாக்டர் வரும் சத்தம் கேட்டு, அத்தையும் மாமாவும் வெளியில் செல்ல முயல.. அவர் "பரவாயில்ல இருங்க.. மீரா குழந்தைக்கு தடுப்பூசி போட்டதும் இப்படி காய்ச்சல் வந்ததால என்னால உடனே முடிவெடுக்க முடியல.. அதான் திரும்பத் திரும்ப காய்ச்சல் மருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுத்தீங்களான்னு கேட்டேன்.. இரண்டு நாள் ஆகியும் இப்படி இருக்கறதா சொன்னதால தான் நான் அழைச்சி வரச் சொன்னேன்.. "

மீரா, "டாக்டர், குழந்தைக்கு மருத்து சரியா தான் டாக்டர் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் காய்ச்சல் 105 டிகிரி வந்து குழந்தை கண்ணும் முழிக்கலை. பாலும் குடிக்கலை.. அதான் உடனே உங்களைப் பார்க்க வர கூப்பிட்டேன் டாக்டர்.."

"மீரா, இப்போ குழந்தைக்கு பிளட் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட் வந்திருக்கு.. அதுல நிறைய இன்பக்சன் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு.. பிளட்ல மட்டும் தான் அட்டாக் ஆயிருக்கு… முதுகுத் தண்டு வடம் வழியா மூளைக்கு போயிருந்தா அப்புறம் மூளைக் காய்ச்சல் ஆகியிருக்கும்.. ஐசியூல தான் வைச்சிருக்கனும்.. ஆனா முன்னமே பார்த்ததால அதையெல்லாம் தடுக்க முடிஞ்சிது.. எந்த கிருமினால.. அதுவும் யார் மூலமாக காய்ச்சல் வந்திச்சின்னு கல்சர் ரிப்போர்ட் வந்ததும் தெரிஞ்சிடும்.. அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் மீரா.."

"கலங்கிய கண்ணோடு, சரிங்க டாக்டர் என்று விழி நீரை மறைக்க முயன்றாள் மீரா.."

"மீரா, வீட்டுக்கு கெஸ்ட் நெறைய வந்தாங்களா குழந்தையைப் பார்க்க?? "

"ஆமாம் டாக்டர்.. "

"நான் குழந்தை பிறந்தப்பவே சொன்னேன்ல.. இவ்வளவு கெஸ்ட் வரக் கூடாதுன்னு.."

"ஒன்னும் பண்ண முடியலை டாக்டர்.. "

"இப்போ குழந்தை தான் கஸ்டப்படுது பாருங்க… " சொல்லிவிட்டு குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சென்று விட்டார்.

அப்பாவிடமிருந்து அழைப்பு… "ஹாஸ்பிடல் வந்தாச்சு மீரா.. அம்மாவை அட்மிட் செய்ய ரூம் புக் பண்ணிட்டேன்.. உன் அறைக்கு ஒரு அறை தள்ளி புக் பண்ணிட்டேன்.. சரியா.."

அப்பாவுக்கு பதில் சொல்லி, போனை வைத்த பின்,
"அத்தை, அம்மாவுக்கும் உடம்பு நெருப்பா கொதிக்கிறதாம்.. அதனால இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்யப் போறாங்க.. இன்னிக்கி மதியம் கூட எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க.. இப்போ என்னவோ திடீர்னு காய்ச்சல்.."

சரி.. நாங்க அப்படியே கிளம்பறோம்.. நாளைக்கு மூன்று மணிக்கு வந்து பார்க்கறோம்.. என்னவரைப் பெற்றவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்..

அம்மா பக்கத்திலேயே இருந்தும், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அருகே சென்று பார்க்கத் தடை விதித்திருந்தார் டாக்டர்.. மீரா கவலையின் உச்சத்தில் இருந்தாள்.. ஒரு புறம், அம்மா.. மறு புறம் குழந்தை.. என்னைப் பார்ப்பதா.. அம்மாவைப் பார்ப்பதா என்று தெரியாமல் தவித்தாலும் மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் அப்பா..

அப்பாவுக்காகவே மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் மீரா.

மறு நாள், குழந்தைக்கு ஊசியேற்ற வந்த செவிலியர்கள் அங்கு கொடுக்கும் உணவு பற்றாது.. நீங்கள் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுங்கள்.. ஹாஸ்பிடல் ரூல் பார்க்காதீங்க.. நீங்க தாய்ப்பால் மட்டுமே தருவதாலும், குழந்தைக்கு இப்போது அதிகமான தாய்ப்பால் தேவைப்படுவதாலும் நல்ல சத்துள்ள உணவை வீட்டிலிருந்து சமைத்துச் சாப்பிடுங்கள்.. உங்க அரோக்கியம் ரொம்ப முக்கியம்" என்று மீராவுக்குச் சொல்லிச் சென்றனர்..

உடன் ஓடி வந்த ரேவதி அக்காவோ, நான் உன் கூடவே இருக்கேன் மீரா.. கவலையை விடு.. யாராவது நம்ம சொந்த காரங்க கிட்ட சொல்லி சோறு வரவழைச்சிரு மீரா என்றார்.

அக்கா தன்னோடு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது அதுவுமில்லாமல். கல்லூரிக்குச் செல்லும் மகனையும் பொருட்படுத்தாமல் தன்னோடு குழந்தைக்கு நன்றாகும் வரை இரு என்று சொன்ன அவர் கணவர் மீதும் பெருத்த நன்றியுணர்ச்சி பொங்கியது மீராவுக்கு..

அருகில் இருந்தாலும் இரு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி தானும் பணிக்கு போகும் சீதா அக்கா நினைவு வர.. வேண்டாம்.. அவர்களுக்கு ஏன் சிரமம் என்று பின்வாங்கினாள் மீரா. சரி.. நம் மாமியாரும் நம் தாய் போலத் தானே.. தாயும் படுத்துக் கிடக்கையில் அவர் தானே நம் தாய்.. அவரிடம் கேட்போம்.. அத்தைக்கு மாமாவுக்கு சமைப்பதைத் தவிர பெரிய கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்பது கூடுதல் வசதியாகவே மீராவுக்குத் தோன்றியது.. அத்தைக்கு சிரமம் இருக்காது என்று காலையிலேயே போன் பண்ணினாள் மீரா.

"அத்தை, இன்னிக்கி மதியம் எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வருவீங்களா?? 3 மணிக்கு வருவதை, கொஞ்சம் முன்னாடி வந்திடுங்களேன்.."

"சரி கொண்டு வர்றேன்.." என்றார் அத்தை..

அத்தை மாமாவோடு வந்து மீராவைச் சாப்பிட வைத்தார்.. பின்பு, அப்பா வந்து குழந்தையை தொலைவிருந்தே பார்த்துவிட்டு பின் சென்று விட்டார்..

மணி 2 இருக்கும்.. மீராவுக்கு போன் வந்தது.. "மீரா.. நான் தான் அண்ணி பேசறேன்.. சவிதா.. (மீரா கணவரின் அக்கா..) அஞ்சலிக்கு எப்படி இருக்கு.. இப்போ பரவாயில்லையா.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு மீரா.. "

மீரா மனதுக்குள், பாவம் அண்ணி, ஏற்கனவே பத்து வயதிலும், 8 வயதிலும் ஒரு பையனையும் பொண்ணையும் வைத்துக் கொண்டு கூடவே வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலையையும் செய்து கொண்டு கஸ்டப்படுகிறார்.. நான் ஏன் தொல்லை தர வேண்டும் என்று எண்ணியபடியே..

"சொல்லுங்க அண்ணி.. இப்போ பரவாயில்லை.. காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது.. ஹெல்ப் எல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி.. நீங்களே வேலைக்கும் போயிட்டு வீட்டையும் பார்த்திட்டு இருக்கீங்க.. பிரச்சனை இல்லை.."

"சரி.. நான் சாயிந்திரம் வர்றேன்.."

மாலை 4 மணி.. சொன்னது போலவே வந்து நின்றார் அண்ணி..

முகம், கை, கால்களைக் கழுவி விட்டு, பின் வந்து குழந்தை அருகில் நின்றார்.. வாங்க அண்ணி என்று மீரா கூப்பிட்டதைச் சட்டை செய்யவில்லை..

அத்தையும், அண்ணியும் குழந்தையைப் பார்த்து வாயில் சேலையை மூடி அழுதனர்..

"நோய் வந்து வந்து தான் எதிப்பு சக்தி வளரும்.." என்றார் அண்ணி..

"அதான் நல்லா வளர்ந்திட்டு இருக்கு பாருங்க… ஏண்டி பயாட்டிக் ஊசி ஊசியா போட்டு.. நானும் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் வந்துடுச்சே…" இது மீரா. 45 நாள் குழந்தைக்கு எந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று புரியாது பேசத் தொடங்கினார் அவள் அண்ணி..

"எதிர்ப்பு சக்தி அப்போ இல்லைன்னு அர்த்தம்…. உன் பால்ல அப்ப சத்தில்ல.." இது அண்ணி..

சுளீர் என்றது மீராவுக்கு… தாய்ப்பாலில் சத்தில்லை என்று ஒரு பட்டம் பெற்றவர் சொல்லலாமா? அதுவும் இரு குழந்தைக்குத் தாய்.. கல்வி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர்… தான் எந்த மனப் போராட்டத்தில் இரவும் பகலும் உறங்காது சதா அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு இருக்கேன்.. தன் கணவர் கூட அருகில் இல்லையே.. இவ்வாறாக சுயபட்சாதாபம் மேலோங்கியது மீராவுக்கு.. மௌனம் காத்தாள் மீரா..

பேச்சு திசை மாறியது..
"சாப்பாடு இங்கையே உனக்கு கொடுத்திடுவாங்களா மீரா" இது சவிதா அண்ணி.

"ஆமாங்க அண்ணி.. இங்கையே கொடுப்பாங்க.." என்றாள் மீரா.

"ஏம்மா… அப்போ ஹோட்டல்ல வாங்கி சாப்பிட வேண்டியது தானே.. நீ ஏம்மா சோறு செமக்கறே….." என்று ஓரக் கண்ணால் மீராவைப் பார்த்தபடியே சொன்னார் சவிதா அண்ணி..

"ஏ போயி வெளியில சாப்பிடனும்னு தான் கொண்டு வந்தேன்.." இது அத்தை..

மீராவுக்கு நெஞ்சில் நெருஞ்சியால் குத்தியது போல் வலி…

எழுந்து வெளியே வந்து விட்டார்.. தன் மகளுக்கு சோறு பரிமாறி உண்ண வைத்து அனுப்பினார் அத்தை..

அடுத்த நாள் மாமாவுக்குச் சமைக்க அத்தை கிளம்ப.. எனக்கும் சேர்த்து எடுத்து வர வேண்டாம் என்றாள் மீரா.. பதிலேதும் பேசாமல் சென்றார் அத்தை..

தனக்கு உண்ணக் கொண்டு வந்ததை அத்தை சிறிது கொடுத்தும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது மீராவுக்கு.. அப்படியே வைத்து விட்டாள்.

அப்பா, ஹோட்டலுக்கும் வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.. மீரா விரும்பிய உணவெல்லாம் வாங்கி உண்ண வைத்தார்.. அத்தைக்கும் ரேவதி அக்காவுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு சேர்த்து வாங்கி வந்தார்..

மருத்துவர் வந்தார்.. "கல்சர் ரிப்போர்ட் வந்திடுச்சுங்க மீரா.. கை நகத்துல இருக்கிற கிருமிங்க தான் காரணம்.. சோ.. கெஸ்ட்ஸ் தான் பிரச்சனை.. விசிடர்ஸ் நாட் அலவுட்-நு போர்ட் போட்டாசு.. 3 மாசம் முடியறவரை கெஸ்ட்ஸை அவாய்ட் பண்ணுங்க.. இன் ஹைகீனிக்கா குழந்தையைத் தொடாதீங்க.. தொடவுடாதீங்க.."

"டாக்டர், என் அம்மாவும் காய்ச்சல்ல தான் பக்கத்து ரூம்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. "

"பார்த்தேன் மீரா.. அவுங்க இந்த இன்பக்சனுக்கு காரணம் இல்ல.. இருந்தாலும் அவுங்களுக்கு சிக்கன் குனியாங்கறதால 1 மாசத்துக்கு குழந்தையை அவுங்க தொட வேண்டாம்.."

"சரிங்க டாக்டர் " என்றாள் மீரா.

அத்தையை அழைத்துச் செல்ல மாமா வந்தார்.. அப்பா அவரிடம், ஓரிரு நாட்களுக்கு மீராவோடு அவள் மாமியாரை இருக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்.. பாவம் அக்கா.. உடனே திரும்பி வருவோம் என்று எண்ணி போட்டது போட்டபடி ஓடி வந்தவர்.. துவைத்த துணி பாதியும் துவைக்காத துணி பாதியும் இருக்க மீராவுக்காக வந்தவர்.. இப்போது வீட்டுக்கு போயே ஆகவேண்டிய இக்கட்டான பெண்களுக்கான பிரச்சனையான சூழல்... எல்லாவற்றையும் விவரித்தார் அப்பா..

என் மனைவிக்கு தூக்கம் கெட்டால் சேராது.. என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார் மாமா..

சரிங்க என்று அப்பா இறுகிய முகத்தோடு சென்று விட்டார்..

சிறிது நேரத்துக்கு பின், கிளம்ப தயாராக இருந்த மாமாவிடம், மீண்டும் அப்பா கெஞ்சினார்..

சரி இருக்கட்டும் என்று ஒப்புதல் அளித்தார் மாமா.

4 நாட்கள் ரேவதி அக்காவும், 3 நாட்கள் அத்தையும் இருந்து குழந்தை அஞ்சலியும் அம்மாவும் தேற வீடு திரும்பினர்..

மீராவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. பின்பொரு நாள் தான் 2 நாள்கள் இருந்ததையும், குலதெய்வத்துக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேத்தியதாலும் தான் தன் பேத்தி குணமானாள் என்று அத்தை சொல்வார்கள் என்று…!!

__________________
-- பூமகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 8:31

கொடுங்கள்... பெறுவீர்கள்!
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. நடக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அருகில் இருக்கும் பம்ப்செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்செல்லவும்."

அந்த பம்ப்செட்டோ மிகவும் பழையதாகஇருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவுகூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப்பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம்தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப்பெரிய பரிசு, விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்ம திருப்தியை விடப் பெரியசபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால்தான் பெறமுடியும். இதுபிரபஞ்சவிதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்தசந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

கதையை எழுதியவர் : தெரியவில்லை.
நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 8:52

உலகத்திற்கு உப்பாய் இரு
---------------
ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி
காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக
அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில்
திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக
தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு
சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு'
என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல

காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன்
இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப்
பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன்
முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா,
நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது
கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும்

கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன்
வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால்
அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக்
கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை
சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை
அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த
எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும்
கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை
விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.
இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.


வேறு

வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு
ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி
வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான்.
இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு
கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு
பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய்
விட்டது.


காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு
பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து
ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று
நம்பிக்கையை வளர்த்தி விட்டது.


மன்னன் ஏரியைத் தேடி
ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக்
கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக்
கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில்
இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது.
அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை
ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று
நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை
அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான
பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள
புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன்
குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப்
போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப்
பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக்
கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன்
வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப்
போகின்றன' என்றது.


தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.


நீதி:
நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல
தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


நன்றி: எகனாமிக் டைம்ஸ், இந்தியா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 8:54

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது
-------------------
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து
கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும்,
நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை
மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான்
போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா
தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும்
மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால்
கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை
படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?"
என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள
மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில்
வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று
முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர்
கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன்
காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.


வீரன் நாண் ஏற்றி
அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின்
தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து
ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.


வீரன்
கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப்
பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர்
கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு
ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி
ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு
அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு
ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே
எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம்
சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப்
போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை
எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே
கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.


கிருஷ்ணர் "வீரனே,
போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில்
பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார்.
அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி,
அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத்
தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு
தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.


நீதி:
எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன்
இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 8:56

கை மேல் பலன் கிடைத்தது !
--------------
அரசன்
ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த
நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான்
'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள்
சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான். ஒரு
நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக
அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு
நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க
ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு

மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற
சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன்
சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப்
புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.
'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி'
என்று உறுமினான்.

சேவகன்
சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக்
காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 8:58

சட்டமும் தர்க்கமும் - குறும்புக் கதை
-------------
ஒரு சட்டக்கல்லூரி மாணவன் தனது பரீட்சையில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டான்.

தனது மதிப்பெண் சான்றிதழைப் பார்த்துவிட்டு தனது பேராசிரியரிடம் கேட்டான். அவருக்கு வயது 50+.

மாணவன் - “நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?”.
பேரா - “தாராளமாக. பதில் கூறுவது எனது கடமை”.

மாணவன் - “நல்லது. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் தேவை. நீங்கள் சரியான பதிலைச் சொன்னால் எனக்கு வழங்கப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண்ணையே அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் தவறான பதிலைச் சொன்னால் எனக்கு உயர் மதிப்பெண் வழங்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?”.

பேரா - “சரி. கேள்வியைக் கேள் மகனே!”.

மாணவன் - 1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்க (logical) ரீதியிலாக தவறானதும் எது?
2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி சரியானதும் எது?

நீண்ட நேரம் யோசித்த பிறகும் எந்த ஒரு முடிவுக்கும் வராத பேராசிரியர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என ஒத்துக்கொண்டார். அந்த மாணவன் பெற்ற குறைந்தபட்ச மதிப்பெண்ணை அதிகபட்சமாக மாற்றுவதற்கு சம்மதித்தார்.

பின் மாணவனின் முகத்தைப் பார்த்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டு ”பதில் வேண்டும்”, என்றார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்கள் :

1) சட்டப்படி (law) சரியானதும், தர்க்கரீதியிலாக தவறானதும் எது?
உங்களுக்கு 55 வயது ஆன பின்பு இப்போது 20 வயது குமரியைத் திருமணம் செய்திருக்கிறீர்கள். இது சட்டப்படி சரியானதாக இருந்தாலும், தர்க்க ரீதியிலாகத் தவறானது.

2) சட்டப்படி தவறானதும், தர்க்கப்படி (logical) சரியானதும் எது?
உங்கள் மனைவிக்கு 25 வயதுக் காதலன் ஒருவன் இருக்கிறான். அது தர்க்கப்படி சரி ஆனால் சட்டப்படி தவறு.

அந்த 25 வயதுக் காதலனுக்கு நீங்கள் முதலில் குறைத்த மதிப்பெண் வழங்கினீர்கள். இப்போது அதிகபட்ச மதிப்பெண் வழங்கிக் கவுரவித்துவிட்டீர்கள். அவன் வேறு யாருமில்லை. நானே..

(இதுக்கு மேல என்ன நடந்துருக்கும்னு சொல்லத் தேவையில்லைங்க)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:00

என்ன பிரச்சினை தல?
----------
ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - “நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை”, சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. “குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை” என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

“இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்” என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

”தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது”, ஓட்டுநர்.

நடத்துநர் “அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்” எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. “நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்” - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - “நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை”.

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் “ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்” என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் “எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை” எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:01

உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்
-------------
சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமான கம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன் பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டு பாத்திரங்களிலும் நீரை நிரப்பி அவற்றைத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவாள்.

அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரை நிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில் கொட்டி வீணாகிவிடும்.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டு பாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரை சுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக் காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாக இருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவது பானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன் முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப் பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாத பாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".

இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் - "சிறுமியே ஒன்றைக் கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும் கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப் பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜா மலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன் திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவை பூப்பூப்பதற்கு யார் காரணம் - அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர் சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"

நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் என நன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கான விதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்த ஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்ட பிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச் செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம் காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:03

மணலில் எழுதிய எழுத்து
---------------

இணைபிரியாத நண்பர்கள் இருவர் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர். இருவரும் பயணத்தின் ஊடே பேசிக்கொண்டே சென்றனர். வாக்குவாதம் பலமாக இருந்தது. வாதம் மிக தீவிரமாகச் சென்றது. ஒரு நண்பனானவர் அடுத்தவனின் கன்னத்தில் அடித்து விட்டான்.வாக்குவாதத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.

அடி வாங்கியவனுக்கு வலித்தது. அவன் மனம் துடித்தது. இருப்பினும் அவன் எதையும் சொல்லாமல் மவுனமாக அந்தப் பாலைவனப் பாதையின் மணலில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது கன்னத்தின் அடித்துவிட்டான்”.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் மேலும் வெகுதொலைவு நடந்து சென்றனர். அங்கே ஒரு பாலைவனச்சோலை (oasis) காணப்பட்டது. அந்தப் பாலைவனச்சோலையில் குளிக்கலாமென இருவரும் முடிவெடுத்தனர். குளித்தனர். திடீரென்று கன்னத்தில் அடிவாங்கிய நண்பனானவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் சற்றுமுன் அவனை அடித்த நண்பன் இவனைக் காப்பாற்றிவிட்டான்.


உயிர்போகி உயிர் வந்தது நீரில் மூழ்கிப் பிழைத்தவனுக்கு. பிறகு அவன் அந்த நீர்க்கரையில் இருந்த ஒரு பாறையில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்”.

அவனைக் கன்னத்தில் அடித்தவனும், நீரில் இருந்து காப்பாற்றியவனும் கேட்டான் - “நான் உன்னை அடித்தவுடன் அந்த நிகழ்ச்சியை நீ மணலில் எழுதினாய். ஆனால் உன் உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை பாறையில் எழுதிவிட்டாயே?”.

உயிர்பிழைத்தவனும் அடிவாங்கியவனுமாகிய நண்பன் சொன்னான் - “யாராவது நமது மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டால் நாம் அதை மனதில் எழுதிக்கொள்ளக் கூடாது. மணலில்தான் எழுத வேண்டும். மன்னிப்பு என்கிற காற்றானது மணலில் எழுதியவற்றை அழித்துவிடும்”.

“ஆனால் யாராவது நமக்கு உண்மையிலேயே நன்மை செய்திருந்தால் அதை மனம் என்கிற கல்லில்தான் எழுத வேண்டும். காற்று அதை எக்காலத்திலும் அழித்து விடாது. அப்போதுதான் பிறர் செய்த நன்மையானது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.”

நீதி : உங்களிடம் உள்ள செல்வங்களால் உங்கள் மதிப்பு எடை போடப்படுவது இல்லை. உங்களுக்கு உதவ முன்வருபவர்களைக் கொண்டே உங்களுடைய மதிப்பு எடை போடப்படும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:05

முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?
---------------

எட்டுவயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

அன்னையின் பதில் : “கடவுள் ஆதாம், ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இப்படியே மனித உலகம் உருவானது”.

இரண்டு தினங்களுக்குப் பிறகு அவள் தன் தந்தையிடம் கேட்டாள் : ”முதன் முதலில் மனிதன் உருவான விதம் எப்படி?”

தந்தையின் பதில் : “குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குரங்காக இருந்தவர்கள் நாம்”.

சிறுமிக்குக் குழப்பம் அதிகரித்தது. ”ஒரே கேள்விக்கு தாயின் பதிலும், தந்தையின் பதிலும் வேறுவேறாக இருக்கிறதே” என்று.

அடுத்த நாள் தன் தாயிடம் கேட்டாள் “இது எப்படிச் சாத்தியம்? நீங்கள் ஆதாமும், ஏவாளுமே மனிதன் உருவாகக் காரணம் என்றீர்கள். ஆனால் அப்பா சொன்னார் - குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று. இரண்டில் எது உண்மை”.

சுதாரித்துக்கொண்ட தாய் சொன்னாள் -

1) “இது மிக எளிது. என் பரம்பரை அதாவது (உன் அம்மாவின் பரம்பரை) வந்த விதம் ஆதாம், ஏவாளின் சந்ததி வாயிலாக உருவானது”

2) “உன் தந்தையின் பரம்பரை வந்த விதம் குரங்குகளின் சந்ததி வாயிலாக உருவானது. இரண்டுமே சரிதான்” என்றாள்.

இதைக்கேட்ட சிறுமி ‘ஙே’ என விழித்தாள்.

நீதி : மட்டம் தட்டியே பழக்கப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:07

பழசும் புதுசும் - இது என்ன சத்தம்?
------------------
எண்பது வயதான முதியவர் நன்கு படித்த தனது மகனுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

மகனுக்கு 45 வயதிருக்கும். வெளிநாடு சென்று மேற்படிப்புப் படித்து தற்போது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிக்கிறார். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மாடியில் ஒரு காகம் ‘காகா’ எனக் கரைந்தது.

மகனிடம் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

“காகம் கரையும் சத்தம்”

சில நிமிடம் கழித்து மீண்டும் அவர் கேட்டார் “இது என்ன சத்தம்?”.

”அப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னேனே - காகம் கரையும் சத்தம் இது”.

மீண்டும் சில நிமிடங்களுக்குப் பிறகு தந்தை கேட்டார் - “இது என்ன சத்தம்?”.

மகன் கத்தியே விட்டார். ”ஏம்பா இப்படிக் கேட்ட கேள்வியையே மறுபடி மறுபடி கேட்டு உசிரை வாங்குறீங்க. இது காக்கை கரையும் சத்தம்னு எத்தனை தடவை சொல்லிட்டேன். வயசானாலே உசிரை எடுக்கிறீங்களே”.

மூன்றுமுறை அவர் “இது என்ன சத்தம் என்று கேட்டதற்கே” மகனுக்கு tension தலைக்கேறிவிட்டது.

உடனே வயதில் முதிர்ந்த தந்தை தனது அறைக்குள் சென்று ஒரு பழைய நாட்குறிப்பேடு (diary) ஒன்றைக் கொண்டு வந்தார்.
அவர் பிறந்ததில் இருந்து நடந்த சுவையான சம்பவங்களை அவர் அதில் பதிவெழுதி வந்திருக்கிறார்.

அதில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்து மகனிடம் காண்பித்தார். “மகனே இந்தப் பக்கத்தை சற்று சத்தமாக உரக்கப் படிக்கவும்” - என்றார்.

மகன் படித்துக்கொண்டிருந்தார் :

அந்த நாட்குறிப்பேடில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டு இருந்தது.

“இன்று என் இனிய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். ஒரு காகம் மாடியின் ஜன்னலின் அருகே அமர்ந்தது. என் பையன் 23 முறை அப்பா அது என்ன? அப்பா அது என்ன? எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். நானும் அவனுக்குப் பொறுமையாக அன்புடன் - அது காகம் - அது காகம் என திரும்பத் திரும்ப அவன் கேள்வி கேட்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவனை அன்புடன் தழுவிக்கொண்டே அவன் ஒவ்வொருமுறையும் அது என்ன என்று கேட்கையில் நான் பதில் சொன்னேன்.
ஒரே கேள்வியை 23 முறை கேட்கிறானே என்று எனக்குத் தோணவில்லை. அவன் மேல் இருந்த அன்பே பெரிதாக இருந்தது.”.

இதைச் சத்தமாகப் படித்த மகனுக்கு பழைய Flash back ஓடியது. தற்போது மூன்றுமுறை தனது தந்தையார் “அது என்ன என்று கேட்டதற்கே - தன்னால் பொறுமையாகப் பதில் சொல்ல இயலவில்லையே. தந்தையின் அன்பு எங்கே தான் எங்கே!” என வெட்கித் தலைகுனிந்தார்.

நீதி : ஊருக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாமல்ல. அனைவருக்கும் ஒரே நியாயம்தான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:09

மிஸ்டர் எக்ஸின் அரேபியப் பயணம்
----------------------

ஒரு மிகப் பெருமை வாய்ந்த குளிர்பானக் (soft drinks) கம்பெனியில் மிஸ்டர். எக்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அரேபிய நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் அந்தக் கம்பெனியின் Marketing பிரிவு முடுக்கிவிடப்பட்டிருந்தது.

அரேபியாவின் Marketஐப் பிடிப்பதற்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.

அவர்களின் எந்த ஒரு முயற்சியும் அங்கே வெற்றியடையவில்லை. வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டு வீடு திரும்பினர்.

வீட்டில் மிஸ்டர். எக்ஸின் மனைவி கேட்டாள் “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. என்ன விசயம். இப்படி நீங்க கவலைப் பட்டு நான் பார்த்ததில்லையே”.

மிஸ்டர் எக்ஸ் - “அரேபிய நகரத்தில் என் குழுவினருடன் Marketing செய்வதற்காகச் சென்றேன். அங்கே பாலைவனப் பகுதியாயிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் வெற்றிநடை போட்டுச் சென்றேன். ஆனால் அங்கே அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. நான் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. அதற்காக நான் ஒரு உபாயம் சொன்னேன். நகரின் முக்கியமான இடங்களில் எல்லாம் மூன்று படங்களை வைத்தோம். ஒரே மனிதனின் மூன்று தோற்றங்களை விளக்கும் வகையில் அந்தப் படங்கள் அமைந்திருக்கும்.

முதல் படம் : பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டுப் பயணிக்கிறான் ஒருவன். நீர் குடிக்கும் ஆவலில் வறட்சியுடன் நிற்பான் அவன்.

இரண்டாம் படம் : அவனே நம் கம்பெனியின் குளிர்பானத்தைக் குடிப்பான்

மூன்றாம் படம் : முற்றிலும் உற்சாகமானவனாக அவனே காட்சியளிப்பான்.

இந்த மூன்று படங்களையும் நகரின் அனைத்துத் தெருக்களிலும் காட்சிக்கு வைத்துக் காத்திருந்தோம். அப்படி இருந்தும் எல்லோரும் படங்களை உற்று நோக்கிச் சென்றனரே தவிர யாரும் குளிர்பானங்களை வாங்கி அருந்தவில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு நொந்துபோகி வீடு வந்தேன்” என்றார்.

மிஸ்டர் எக்ஸின் மனைவி தன் தலையில் மெல்ல அடித்துக்கொண்டாள்.

”ஏங்க உங்க Idea எல்லா இடத்திலும் Work out ஆகிடாதுங்க. எல்லா நாடுகளிலும் இடமிருந்து வலமாகத்தான் (Left to Right) படிப்பாங்க எழுதுவாங்க. ஆனால் அரேபியாவில் வலமிருந்து இடமாக (Right to left) எழுதுவாங்க. படிப்பாங்க.

இது உங்களுக்குத் தெரியாமல் போயிருச்சு. மொழி தெரியாமல் நடந்த தப்பு இது.

அதே படங்களை வலமிருந்து இடமாக (Right to left) யோசிச்சுப் பாருங்க

1. மிக உற்சாகமாக ஒரு இளைஞன் காட்சியளிக்கிறான்
2. உங்கள் கம்பெனி பானத்தைக் குடிக்கிறான்.
3. மிகக் கலைத்துப் போகி கஷ்டப்படும் முகத்தைக் காண்பிக்கிறான்.

இதுதான் நீங்கள் செய்த தவறு.” என்றாள்


நீதி : யானைக்கும் அடி சருக்கும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Dec 2015 - 9:11

கருமியின் மனைவி
----------------
ஒரு தேசத்தில் ஒரு உலக மகாக் கஞ்சன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு பணத்தின் மேல் கொள்ளை ஆசை.

உலக மகாக் கருமி அவன். வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கிடைத்த பணம் அனைத்தையும் பத்திரப்படுத்தி வந்தான்.

அவன் சாகும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னான் - “நான் இறந்த பிறகு, எனது வாழ்நாளில் நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் உடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆதலால் அனைத்துப் பணத்தையும் ஒரு சிறு பெட்டியில் போட்டு எனது சவப்பெட்டிக்குள்ளேயே வைத்துவிடவும்.”.

இவ்வாறு செய்தே தீரவேண்டும் என தனது மனைவியிடம் உறுதிமொழியும் சத்தியமும் பெற்றுவிட்டான். மனைவியும் கணவன் மேல் உள்ள பாசத்தினால் சத்தியமும் செய்துவிட்டாள்.

அவனும் அவன் நினைத்தமாதிரியே விரைவில் இறந்துவிட்டான்.
அனைத்து மதச்சடங்குகளும் முடிந்தபிறகு சவப்பெட்டியை மூடத் தயாராகினர். அந்த நேரத்தில் துக்கத்துக்கான கருப்பு நிற ஆடை அணிந்த அவனது மனைவியானவள் ஒரு சிறிய கையடக்கப் பெட்டியைக் கொண்டு வந்தாள். “ஒரு நிமிடம். பெட்டியை மூடாதீங்க. இதை உள்ளே வைச்சுருங்க”

அவள் கொடுத்த சிறிய பெட்டியை கருமியுடன் வைத்துச் சவப்பெட்டியை மூடிவிட்டனர்.
பின் ஒரு வழியாக அவனுடைய சவ அடக்கமும் முடிந்தது.

அவன் மனைவியின் நண்பி ஒருத்தி வந்தாள். “ஏண்டி உனக்கு எதாவது அறிவிருக்கா?. அவந்தான் ஒரு கூறுகெட்ட மனுசன். பணம் பணம்னு அழைஞ்சான். பத்துக் காசு செலவழிக்காம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சு அழகு பாத்தான். செத்தபிறகாவது நிம்மதியா இருக்க விடாம. எல்லாப்பணத்தையும் தன்னுடன் எடுத்துப் போகணும்னு சத்தியம் கேட்டான். சத்தியத்தைப் பண்ணிப்புட்டு இப்போ எல்லாத்தையும் பொட்டியில போட்டு அவங்கிட்டயே கொடுத்திட்டியே” என்றாள்.

மனைவி சொன்னாள் - “என் கணவர் எவ்வளவு மகாக் கருமியா இருந்தாலும், அவர் மேலே எனக்குக் கொள்ளைப் பிரியம். என் மனசு முழுவதும் நிறைந்திருப்பவர் அவர். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றாவிட்டால் எனது கட்டை வேகாது. அவர் விருப்பத்துக்கு இணங்கி அவருடைய பணத்தையெல்லாம் அவருடனேயே வைத்துவிட்டேன்”.

“என்னடி சொல்றே. எல்லாப் பணத்தையும் அவனோட அனுப்பிட்டியா?!@#$$%%^#”

“ஆமாம். அப்படித்தான் செய்தேன்”. “அவருடைய பணம் எல்லாத்தையும் எனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு, அவருடைய பெயருக்கு ஒரு செக் எழுதி அந்த செக்கை ஒரு சிறு பெட்டியில் வைத்து அவருடன் அனுப்பிவிட்டேன். அவரால் அந்தச் செக்கைப் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள இயலுமெனில் மாற்றிக்கொண்டு செலவழிக்கட்டுமே” - என்றாள் மனைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 7:20

அரசர்
-----
ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை
இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம்
இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.


யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர்.
யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது
மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக்
கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்
மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை
நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை
ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர்
நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து
இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து
வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள்
ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான்
அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது
புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை
ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக்
கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல
எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில்
விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச்
சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு
செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத்
திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 7:22

யாருக்கு இது பிடிக்கும்?

----------------

200 பேர்கள்கூடியிருந்தஅரங்கத்தில்ஒருபேச்சாளார்ஒரு 500 ரூபாய்நோட்டைக்காட்டி ”யாருக்குஇதுபிடிக்கும்?” எனக்கேட்டார்.

கூடியிருந்தஅனைவரும்தமக்குப்பிடி...க்குமெனகையைத்தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில்ஒருவருக்குஇந்த 500 ரூபாயைத்தருகிறேன். ஆனால், அதற்குமுன்” எனச்சொல்லிஅந்த 500 ரூபாயைக்கசக்கிசுருட்டினார். பிறகுஅதைசரிசெய்து “இப்போதும்இதன்மீதுஉங்களுக்குஇன்னும்விருப்பம்இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும்கையைத்தூக்கினர்.

அவர்அந்தரூபாய்நோட்டைதரையில்போட்டுகாலால்நசுக்கிஅந்தஅழுக்கானநோட்டைகாட்டி “இன்னும்இதன்மேல்உங்களுக்குவிருப்பம்இருக்கிறதா? என்றார். அனைவரும்இப்போதும்கைகளைத்தூக்கினர்.

அவர்தொடர்ந்தார் “கேவலம்ஒரு 500 ரூபாய்தாள்பலமுறைகசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும்அதன்மதிப்பைஇழக்கவில்லை. ஆனால்மனிதர்களாகியநாம்அவமானப்படும்போதும், தோல்விகளைசந்திக்கும்போதும்மனமுடைந்துபோய்நம்மைநாமேதாழ்த்திக்கொள்கிறோம் . நம்முடையமதிப்புஎன்றைக்கும்குறைவதில்லை. நீங்கள்தனித்துவமானவர்.

நீதி: இவ்வுலகில்உள்ளஒவ்வொருவருக்கும்ஒவ்வொர்ருத்தனித்தன்மைஇருக்கும். அதன்மதிப்புஎன்றைக்கும்குறைவதில்லை. வாழ்கைஎன்றபயிர்க்குதைரியமும்தன்னம்பிக்கையும்தான்உரமும்பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால்தன்னம்பிக்கையைஇழக்காமல்வாழுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 7:24

யார் டாப்?
----------------
ஒரு
குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும்
குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர்.


என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன்
கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி
நின்றான். அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன்
சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையில
ேயே வைத்துக் கொண்டான்.

இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது,
எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அவன் தன் மனம்போன போக்கில்
எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான்.
அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது,
அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான்.

அந்த அறுசுவை உணவைத்
தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக்குப் பின்னால்
அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல்
அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம்
உதவியாளராகச் சேர்ந்து கொண்டான்.
அவனைப் பிடித்துப் போனதால் சமையல்
கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.

மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான்
அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த
வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அமைந்தது போல ஒரு
குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து
கொண்டான்.

ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை
அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய
வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ
முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு.

குரு அடிக்கடி சொல்லும் உபதேசம்
ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன்
செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை
வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும்
என்பதுதான் அந்த உபதேசம்.

உடனடியாக, அந்தச் சீடன், அச்
சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச்
சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க
ஆரம்பித்தான்.
அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர்.

அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான்.
சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத்
திகழ்ந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன்
சீடர்களைக் காண விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக்
கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும்
மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை
செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர்.
ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர்.

அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல்
முக்கியத்துவம் தந்தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச்
செய்தது.

ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார்.

பின்னர் முதலாமவனைப் பார்த்துச் சொன்னார். “நீ அரசவைப் புலவன்! சிறந்த
இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி
தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான்
மறுக்கவில்லை!’என்றார்.

பின்னர், இரண்டாமவனைப் பார்த்து, “நீ
சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு
ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற
குரு மேலும் தொடர்ந்தார்.

“ஆனால், அறியாமையில் இருக்கும்
ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது
போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும்
கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள்
இருவரையும்விட மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம்
கொடுத்துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திருக்கக்கூடாதுதான்! உங்கள்
மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்… என்னை மன்னித்துவிடுங்கள்…’
என்றார் குரு.

“அகங்காரம் எங்கள் கண்களை மறைத்துவிட்டது. எங்கள்
இருவரைக் காட்டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது
தெளிவாக உணர்ந்து கொண்டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண்டும்’ என்றனர்
சீடர்கள் இருவரும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 7:26

வக்கீல் வாதம்
-------------
ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன்
அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு
போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக்
குழப்ப முயன்றார்.


வக்கீல் : கேட்ட கேள்விக்கு மட்டும் உண்டு இல்லை என்று
பதில் சொல்... இதற்குமுன் இவன் யாரென்று உனக்குத் தெரியுமா?

விவசாயி : தெரியாது..

வக்கீல் :
இவன் உன் தோட்டத்தில் அனுமதியின்றி நுழைந்ததை நீ
பார்த்தாயா...?

விவசாயி : இல்லை பார்க்கவில்லை


வக்கீல்
: இவர் யாரென்று தெரியாது...
அனுமதியின்றி தோட்டத்தில் நுழைந்தது தெரியாது... உன் காடைகளைச் சுட்டது மட்டும்
எப்படித் தெரியும்...?

விவசாயி
: நான் அவர்தான் சுட்டார் என்று
கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறேன்.

வக்கீல் :
சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?

விவசாயி :
நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என்
நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய
இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.அவ்வளவுதான். ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை
செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Dec 2015 - 7:28

தவறும் தண்டனையும்



ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று
திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு
மன்னிப்புக் கேட்டான்.

பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு
தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.

அவனும்,'என் முதலாளியை நாயே,என்று நான் சொன்னது
தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.

ஒரு தடவை நாயே என்று
சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 9 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum