Latest topics
» மருந்துby rammalar Today at 9:28
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
2 posters
Page 1 of 1
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
கு.க., அறுவைக்குப் பின், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.1.08 லட்சம் இழப்பீடு வழங்க,
கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை, கோவை விரைவு கோர்ட் ரத்து செய்தது. பொள்ளாச்சி, கோட்டூரைச் சேர்ந்தவர் நடராஜ், 38; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 32. இரண்டாவது பிரசவத்துக்காக 1997, டிச., 22ல் கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே சுகப்பிரசவமாகி, பெண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார் சுமதி. பரிசோதனைகளுக்குப் பின், 1997, டிச., 25ல் சுமதிக்கு கு.க., அறுவை செய்யப்பட்டது. இதன்பின், 1999ல் சுமதி மீண்டும் கர்ப்பமானார். கு.க., செய்த பின்பும் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், கர்ப்பத்தை கலைக்கவில்லை. 2000, மார்ச் 3 அன்று அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
"கு.க., அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கர்ப்பம் அடைந்ததற்கு டாக்டரின் தவறான சிகிச்சையே காரணம். இத்தவறுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பொள்ளாச்சி சார்பு கோர்ட்டில் சுமதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக தலைமைச் செயலர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர், கு.க., அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் மாரியம்மாள் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
வழக்கை விசாரித்த கோர்ட், " கு.க., அறுவை சிகிச்சையில் தவறு நடந்துள்ளது. எனவே, மீண்டும் கர்ப்பம் அடைந்த சுமதிக்கு 1.08 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு, இரண்டாவது விரைவு கோர்ட் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அரசு பிளீடர் அருள்மொழி ஆஜராகி, "இரண்டாவது குழந்தைக்குப் பின் கு.க., அறுவை செய்து கொண்ட சுமதி, அரசு வழங்கிய ஊக்கத் தொகை மற்றும் பரிசுப் பொருள்களை பெற்றுள்ளார். இரு பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை 5,000 ரூபாயையும் பெற்றுள்ளார். மூன்றாவது குழந்தை தேவை இல்லை என அவர் முடிவு செய்திருந்தால், 20 வாரங்களில் கருவை கலைத்திருக்கலாம். இதற்கு சட்டம் இடம் கொடுக்கிறது. அதையும் செய்யவில்லை.
கு.க., சிகிச்சையில் 5 சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. உடலில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக, கு.க., அறுவைக்குப் பின்னும், கருக்குழாய் வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, டாக்டர்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. மெடிக்கல் போர்டுக்கு அனுப்பி முடிவு கிடைத்த பிறகே, வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் அந்த நடைமுறை காணப்படவில்லை. கு.க., செய்வதன் மூலம் அரசு தரும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, அரசு மருத்துவத்துறை மீது புகார் தெரிவிப்பது நியாயமில்லை' என, வாதிட்டார். நீதிபதி அலமேலு நடராஜன், இரு தரப்பு வாதத்தைக் கேட்டு, கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Re: குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
சரி தவறு நடந்து விட்டது விட்டு விட்டு அழகான ஆண் குழந்தை கிடைத்த தருணத்தை சந்தோசமாக எடுத்துக்கொள்ளட்டும் மூத்த இரு பெண் குளந்தைகளுக்கும் உதவியாக இருக்கட்டும்
தகவலுக்கு நன்றி சாதிக்
தகவலுக்கு நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|