சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்! Khan11

தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்!

Go down

தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்! Empty தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்!

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 8:47

தமிழினப் படுகொலைகளைத் தடுக்க 'பொறி' முறைகளை அமைப்போம்! Sivalingham
இலங்கையில்
'தமிழீழம்' என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள் தொடக்கி இன்றுவரை
நடந்தேறிவரும் இனப்படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் எண்ணிக்கையில்
அடக்கமுடியாது. நியாயம் பேசுகின்ற, சமாதானக் கோபுரங்கள் என தம்மைத் தாமே
தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் உலகின் பல நாடுகள்,
இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே
இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ் மக்களின்
பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம்
கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும்
அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித
நேயத்தோடும் ஈழத்தமிழரின் படுகொலைகளையும், அனர்த்தங்களையும் காண்பவர்கள்
உள்ளார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒட்டுமொத்தமாக முழு சிங்கள இனமும்
தமிழருக்கெதிரான அரசின் பாதகத்திற்கு சார்பாக நிற்கின்றார்கள் என்ற
முடிவுக்கு தமிழர்கள் வந்துவிடக் கூடாது.
அவுஸ்திரேலியாவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரையன்
செனிவிரட்ன, செஞ்சிலுவைச் சங்க ஆரியரட்ன, தமிழரின் இன்றைய நிலைபற்றி
இந்தியத் தமிழ்நாட்டில் நூல் வெளியிட்ட நிமல்கா பெர்னாண்டோ, சமாதான சக
வாழ்வை வலியுறுத்தும் குமார் ரூபசிங்க, சம அந்தஸ்து உடைய பிரஜைகளாக
தமிழர்கள் வாழவேண்டுமென கூறும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற பலரை மீட்டிப்
பார்த்தல் அவசியம். இருப்பினும் இவர்களின் குரல்கள் எப்படித்தான் ஓங்கி
ஒலித்தாலும் கடலில் கரைத்த உப்பாக சிங்களப் பேரினவாதத்துக்குள் மறைந்து
போகின்றது.
மெளனங்களும், மந்த கதிகளும், பாராமுகங்களும் தமிழின அழிப்பை அதிகரிக்கவே
செய்யும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறையை உடனடியாக கண்டறிய
வேண்டியது தமிழரின் கடமையாகும். அதற்கமைவாக சில நிபந்தனைகள் தமிழ்
மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனைத் தளமாகக் கொண்டோ அல்லது
மாற்றியமைத்தோ செயற்திறன் மிக்கதான ஒரு 'பொறி' முறையை ஆக்கவேண்டிய பொறுப்பு
புத்திஜீவிகளிடம் விடப்படுகிறது.
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கு சர்வதேசத்தினூடாக இலங்கை அரசைக் கோரும் நிபந்தனைகள்:-
* இலங்கையில் தமிழர் என்ற காரணத்தினால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால்
அவரது அடுத்த வாரிசுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுப்
பணமாக இலங்கை அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு தலா இருபத்து ஐந்து
இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு
கற்கை முடியும்வரை செலவீனங்கள் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் தொழில் வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
* இதன் நிர்வாகங்கள் அனைத்தும் அவ்வவ் கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச
செயலாளர், அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில்
பரீட்சைக்குத் தோற்றுமிடத்து, அவர்களுக்கான சலுகையாக
வெட்டுப்புள்ளியிலிருந்து இருபத்தி மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டு சித்தி
வழங்கப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் பல்கலைக்கழகத் தெரிவின்போது
வெட்டுப்புள்ளியிலிருந்து முப்பத்தியிரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டு
உள்வாங்கப்பட வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுட்காலம் வரை அரச
போக்குவரத்து சாதனங்கள் யாவும் இலவசமாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளிற்கு
இருபத்தி ஐந்து வயது வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் முழுமையாக
இலவசமாக்கப்படல் வேண்டும்.(புகையிரதப் பயணத்திற்கு முதலாம் வகுப்பு
பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்)
* கொல்லப்பட்டவரின் பெண்பிள்ளைக்கு அவரின் வதிவிட சூழலுக்குள்
(முடிக்குரிய காணி) ஐந்து ஏக்கர் குடியிருப்பு அடங்கிய (விவசாய) நிலம்
அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் சார்பாக பதினாறு புலம்பெயர்வாழ் பிள்ளைகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.
* குறிக்கோள் மாறாமல் மேற்குறித்த நிபந்தனைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக செழுமைப்படுத்த எவருக்கும் உரிமையுண்டு.
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum