சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Khan11

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

3 posters

Go down

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Empty குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 22 Jun 2011 - 20:54

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Muthu+no
பெண்களிடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின்
எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உணவாக மட்டுமின்றி, சிறந்த மருந்தாகவும் இருப்பது தாய்ப்பால்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள் அடங்கியிருப்பதால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. ஒரு தாயிடம் நாளொன்றுக்கு 100 மி.லி., முதல் 1.5 லிட்டர் வரை பால் உற்பத்தியாகிறது. உணவு விகிதத்துக்கு ஏற்ற கலவை அதில் இருக்கும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணம் பெரும்பாலான பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால், கருப்பை பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், 6 முதல் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் குறைகிறதாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருப்பதுடன், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

தாய்ப்பாலின் அவசியம் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குழந்த பிறந்த சில நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவில் பேசக்கூடிய பிரச்னையாக உள்ளது. தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து பல நாடுகளில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டவை, பிறக்கும் போதே தாயை இழந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் குழந்தை பெறுவதும், அவற்றை வளர்ப்பதும் என குடும்ப பொறுப்புகளையே கண்கண்ட தெய்வமாக பெண்கள் கருதினர். ஆனால், இப்போது குடும்ப சுமைகளை பொறுத்து வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது அரிதாகிறது. இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தாய்ப்பால் கொடுப்பதை முக்கிய பணியாக கருத வேண்டும்.

இதுபோன்ற பல காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 2.6 கோடி பெண்களில் 2 கோடி பெண்கள் 6 மாத கால அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் படி 24.5 சதவீதத்தினர் மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். இது 90 சதவீதமாக உயர்ந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் குழந்தைகள் இறப்பது தடுக்கப்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தாய்ப்பால் விழிப்புணர்வால், தேசிய சராசரியை (24.5 சதவீதம்) விட இருமடங்கு உயர்ந்து 58.8 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ தமிழகத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து டாக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் தான் அதிக குழந்தைகள் பிறக்கிறது. பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க கூறுகிறோம்.

குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிவுரையின் போது, 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்புகிறோம். அதையும் மீறி சில பெண்கள் தண்ணீர் கலந்த புட்டிபாலை கொடுக்கின்றனர். அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையை சுட்டிக்காட்டி தாய்ப்பாலின் அவசியத்தை புரிய வைக்கின்றனர். கிராமப்புற தாய்மார்களை சமூகநலத்துறையின் விழிப்புணர்வு வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது‘‘ என்றார்.

30 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவை

தாய்ப்பால் கொடுக்க தவறும் பட்சத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48 சதவீதமும், தமிழகத்தில் 30.9 சதவீதத்தினரும் உள்ளனர். அதேபோல், எடை குறைவான குழந்தைகள் தேசிய அளவில் 42.5 சதவீமும், தமிழகத்தில் 29.8 சதவீதமும் உள்ளனர். இந்த தகவல் தேசிய குடும்ப சுகாதார சர்வேயில் தெரியவந்துள்ளது.

தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அடுத்து உருவாகும் குழந்தை பிறப்பை தள்ளி போடுகிறது. குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால் ரத்தபோக்கு கட்டுப்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். சொல்லப்போனால் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகிறது.

எய்ட்ஸ் பாதித்தவர்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்

எஸ்ட்ஸ் நோய் பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதன் மூலம் நநோய் பரவுமா என்ற கேள்விகுறி இருந்து வந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், எஸ்ட்ஸ் பரவுவது தடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் கொடுக்கும் முன்பு ‘அன்ட்டிரேட்ரோஹைல்‘ என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதை பின்பற்றி தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைகிறதாம்.குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Breastfeeding-mom
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Empty Re: குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

Post by நண்பன் Wed 22 Jun 2011 - 23:47

மிக முக்கியமான தெளிவான கட்டுரைக்கு நன்றி தல நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Empty Re: குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 23 Jun 2011 - 11:15

ஆம் நண்பன் நன்றி


குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Empty Re: குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

Post by *சம்ஸ் Thu 23 Jun 2011 - 13:25

பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்  Empty Re: குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum