Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அவன் இவன்' - ஹாட் விமர்சனம்
Page 1 of 1
அவன் இவன்' - ஹாட் விமர்சனம்
‘சேது’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலா.அதன் பிறகு அவரது ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய படைப்புகள். கடைசியாக இவர் இயக்கிய ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார். அப்படிப்பட்ட பாலாவின் இயக்கத்துக்கு, மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் தமிழகத்தில் உண்டு.இயக்கம் பாலா என்று திரையில் எழுத்துக்கள் விரியும்போது, விசிலடித்து கரவொலி எழுப்பும் தனது ரசிகர்களை, முதல்முறையாக முழுமையாக திருப்திப்படுத்த தவறிவிட்டார் பாலா.இப்படியொரு கதைக்களம் நம்ம மூளைக்கு எட்டாமல் போச்சே! என்று சக இயக்குனர்கள் பொறாமை கொள்ளும்படி புதிய கதைக்களங்களை தேடிபோவதில் பாலாவை அடித்துக் கொள்ள கோடம்பாக்கத்தில் யாருமில்லை. இந்தமுறையும் புதிய கதைக்களம்தான்! திருடுவதை நிறுத்தினால் தெய்வக்குத்தமாகிவிடும் என்று நம்பி, அதையே குழத்தொழிலாக செய்து வாழும் மக்கள் நிறைந்த ஒரு தேனி மாவட்ட கிராமம். எக்காரணம் கொண்டும் குற்றப்பரம்பரை வரலாறுக்குள் நுழைந்து ரசிகர்கள் முதுகில் டின் கட்டிவிடக் கூடாது என்று நினைத்த பாலா, நல்லவேளையாக அந்த வியாக்கியனங்கள் எதற்குள்ளும் புகுந்துவிடவில்லை. ஆனால் கதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டிருகிறார்.
பாலா எப்போதுமே கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி கதையை இரண்டாவது இடத்தில் வைக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவர். இதனால் சின்ன காதாபாத்திரம் என்றால் கூட, இவர் அளவுக்கு டீடெயில் பண்ண ஆள் இல்லை அல்லது யாரும் விரும்புவதில்லை. பாலாவின் ஆகச்சிறந்த பலமே இந்த ‘கேரக்டரேஷேசன் டீடெயிலிங்’தான்.
மலைகளும், மரங்களும், பசுமையும் போர்த்திக்கிடக்கும் மேற்படி கிராமத்தில்தான் அவன் இவன் படத்தின் கதையின் மூன்று நாயகர்கள் வாழ்கிறார்கள். முதலாமவர் வால்டர் காதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கும் விஷால். நாடகக்கலைஞரான இவருக்கு பிறவியிலேயே மாறுகண். இரண்டாவது நாயகன் ‘கும்புடுறேன் சாமி’. இந்தக் காதாபாத்திரத்தில் கொச்சையான, அழுக்கான வார்த்தைகளால் ரசிகனின் காது கிழிகிற அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்கும் சில்லறைத் திருடன் ஆர்யா. இவர் விஷாலின் தம்பி.
தம்பியென்றால் விஷால் அம்மாவின் சக்களத்தி மகன்.( புதிய தலைமுறைக்கு சக்களத்தி மகன் என்றால் புரியுமா தெரியவில்லை?) மூன்றாவது நாயகன், குடி, குழந்தைத்தனம், கருணை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்த, மனிதம் நிறைந்த ‘ஹைனஸ்’ என்ற அறுபது வயது ஜமீன்தாராக வரும் ஜீ.எம்.குமார்.
இந்த மூன்று காதாபாத்திரங்களுக்கும் இடையில் நேரடி ரத்த சம்பந்தம் என்றால் விஷால் ஆர்யா இருவருக்கும் இடையில் மட்டும்தான்.
ஆனால் எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத அந்த ஊரின் ஹைனெஸுக்கும் இவர்களுக்கும் இடையில், நண்பனைப் போன்ற ஒரு அப்பாவுக்கும் மகன்களுக்குமான ஒரு உலகத்தை தனது படைப்பாளுமை வழியாக விரித்து காட்டுகிறார். அதில் வெற்றியும் பெருகிறார் பாலா. இதற்கு முதல்பாதி நெடுக நகைச்சுவை வசனத்தெறிப்புகளின் துணையை நாடியிருக்கும் பாலா, இரண்டாவது பாதியில்தான் கதையிலேயே கை வைக்கிறார். இது திரைக்கதையில் பாலாவின் பலகீனத்தைக் காட்டுகிறதே தவிர ஆளுமையை அல்ல.
பொதுவாக சோதனை முயற்சி என்று சொல்லப்படும் மாற்று வகை சினிமாக்களில் கூட, முக்கிய கதைச் சரடின் அடையாளங்களை அல்லது பிரச்சனையின் தொடக்கத்தை படம் தொடங்கிய 30 நிமிடத்துக்குள் ரசிகனின் மண்டையில் திணித்து விடுவார்கள். ஆனால் பாலா இந்த விஷயத்தில் ஓவன் காண்பிடண்டாக இருந்து, ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டதுதான் அவன் இவன் படத்தின் மிகப்பெரிய பலகீனம்.
முதல் பாதி முழுக்க, முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் தினசரி வாழ்க்கைப் பாட்டை காட்டுவதிலேயே லயித்தவர், கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான சில்லறைச் சிக்கல்களை காட்டி அதை தீர்ப்பதிலேயே காட்சிகளையும், நேரத்தையும் செலவிட்டு விடுகிறார். இரண்டாவது பாதியில்தான் முக்கிய கதாபாத்திரம் ஒன்று தேடிபோய் சிக்கிக்கொள்ளும் பிரச்சனையை நோக்கிய நகர்வும், அந்தப் பிரச்சனையில் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இறுதி நிலையையும் மிகக்குறைவான நேரத்தில் சித்தரித்திருக்கிறார்.
இப்போதான்பா கதையே சூடு பிடிக்குது என்று நிமிர்ந்து உட்காரும் ரசிகனிடம் படம் முடிந்தது போய் வா என்கிறார். இதனால் மரபார்ந்த சினிமா பார்வையாளனுக்கு இது புதிய கதை சொல்லும் முறை என்று விவாதித்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அவனை வசீகரிக்க தவறி விடுகிறது படம்.
ஒட்டுமொத்தமாக படத்தில் மிஞ்சியிருப்பது வால்டர் கதாபாத்திரத்துக்கு விஷால் எடுத்துக்கொண்டிருக்கும் கடும் உழைப்பும், பாத்திரப்படைப்பின் தேவை கருதி வெற்றுடம்புடன் நடித்திருக்கும் ஜி.எம்.குமாரும் மொத்த படத்துக்கும் மகத்தான பங்களிப்பை செய்திருகிறார்கள்.
முக்கியமாக தனது பிரதான கதாபாத்திரங்களை டீடெயில் செய்வதில் பாலா காட்டும் நேர்த்தியை, வால்டர், ஹைனெஸ் ஆகிய இரண்டுபேரிடமும் பார்க்கமுடிக்கிறது. தம்பி திறமையான திருடனாக இருக்கிறான். வால்டரோ திறமையான நாடகக் கலைஞன். ஆனால் திருட்டுத் தொழிலில் தம்பி சம்பாதிக்கிறான். வால்டர் அதில் தோற்றுப் போகிறான். ஒரு கட்டத்தில் அம்மாவின் இம்சைக்கு பயந்து திருடபோகும் விஷால் அப்போது கூட ஒரு கலைஞனாக பெண் வேடமிட்டு செல்வதும், அப்பாவை இழந்த சிறுமியிடமிருந்து திருடக் கூடாது என்று எத்திக் பார்ப்பதும் என்று வால்டர் பாத்திரத்தை நுனுக்கி நுனுக்கி நுட்பமாக செய்திருகிறார்.
ஒரு கட்டத்தில் சினிமா நாயகன் சூர்யா பங்குக்கொள்ளும் விழாவில் மேடையில் நவரச நடிப்பையும் நிகழ்த்திக் காட்டும் வால்டர் விஷால்… கையை நிலத்தில் ஊணி ரவுண்ட் டிராலி ஷாட்டில் வில்லன் ஆட்களை பந்தாடும் மாஸ் ஹீரோ விஷால்தானே என்ற சந்தேகத்தை உண்டு பண்ணி விடுகிறார். இவையெல்லாவற்றையும் விட, மாறு கண் கொண்டவானாக இருந்தால் என்ன…! அவன் கலைஞன் என்றால் அந்தக் கண்களை வைத்துக்கொண்டே அவனால் நவரசரங்களையும் வெளிபடுத்த முடியும் என்று யாதார்த்தம் நம்பும் பாலாவை ஒரு ஆளுமையான இயக்குனராக இந்தக் காட்சியில் பார்க்கமுடிகிறது. இதே காட்சியில் சூர்யாவை பாராட்டுகிறாரா அல்லது இப்படி விளம்பரம் தேடிக்கொள்ளாதே என்று கூப்பிட்டு வைத்து திட்டுகிறாரா என்பது தேர்ந்த ரசிகனுக்கு நன்றாகவே விளங்கும்.
அடுத்து ஹைனெஸ் தீர்த்தபதி ஜமீனாக ஒரு பழைய அரண்மனை, ஒரு இம்பாலா கார் தவிர வேறு எதுவுமில்லாத ஆனால் வெள்ளை மனதோடு வாழ்ந்திருக்கும் ஜி.எம்.குமார் அந்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி விடுவதிலேயே அவரது காதாபாத்திரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அவரது ஆகசிறந்த நடிப்பை வெற்றுடம்புக் காட்சியிலும், பிணமாக நடித்திருக்கும் கணங்களிலும் பார்க்க முடியும்.
படத்தின் பொழுதுபோக்குத் தன்மையை தூக்கிபிடிக்கும் நோக்கத்தோடு கு.சாமியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பாலா, ஆர்யாவின் அதீதமான நடிப்பை பல காட்சிகளில் கட்டுப்படுத்த தவறி விட்டாரோ என்று தோன்றுகிறது. துணைக்கதாபாத்திரங்களில் ஆர்யாவின் நண்பன் பேத்தையாக நடித்திருக்கும் மாஸ்டர் விக்னேஷ், எஸ்.ஐ.யாக நடித்திருக்கும் காமராஜ் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
அவன் இவன் திரைக்கதையின் மிகப்பெரிய ஃப்ளா எங்கே ஒளிந்திருகிறது என்றால் படத்தின் பிரதான எதிர்மறை கதாபாத்திரமான அடிமாட்டு மொத்தவியாபாரி ஆர்.கேவை சித்தரிப்பதில் பல்ளிக்கிறது. ஆர்.கே.வின் தோற்றத்தை மட்டும் காட்டி மிரட்டும் பாலா, அவன் செய்யும் தொழிலின் குரூரத்தையோ, அல்லது அவனது அடிமாட்டுத்தனத்தையோ ஒன்றிரண்டு காட்சிகளில் ரசிகனுக்கு உஷ்னம் ஏற்றுகிற ரேஞ்சுக்கு காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லாதது போல ஒரு அழுக்கான மாயவி போல அவனை சித்தரிப்பதில் அந்த கதாபாத்திரம் மீதான எந்த அதிர்ச்சியும் ரசிகனுக்குள் கடந்து செல்லாமல் அடம்பிடிக்கிறது.
இதனால் ஹைனஸ் காதாபாத்திரத்தின் முடிவை சகிக்க மாட்டாத வால்டர், கு.சாமி இருவரும் கொதித்தெழுவது பாலாவின் பிதாமகனை மறுபடியும் நினைவுபடுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக க்ளைமாக்ஸில் அவர் தரும் திருப்பம் அதிர்ச்சி அளிக்கவில்லை. மொத்தத்தில் க்ளைமாக்ஸை முதலில் யோசித்து விட்டு பிறகு அதற்கான திரைக்கதையை யோசிப்பதால் வரும் ஆபத்து அவன் இவனுக்கு நேர்ந்து விட்டது. மற்றபடி. பாலா படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸை முதல்முறையாக இழந்திருகிறார் பாலா. அவன் இவனை ஒருமுறை பார்க்கும் ரசிகர்களுக்கு, பாலாவின் பிதாமகன் டிவிடியை இலவசமாகக் கொடுத்து அவர்களை அறுதல் படுத்தலாம்.
நன்றி தமிழ்மீடியா
பாலா எப்போதுமே கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி கதையை இரண்டாவது இடத்தில் வைக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவர். இதனால் சின்ன காதாபாத்திரம் என்றால் கூட, இவர் அளவுக்கு டீடெயில் பண்ண ஆள் இல்லை அல்லது யாரும் விரும்புவதில்லை. பாலாவின் ஆகச்சிறந்த பலமே இந்த ‘கேரக்டரேஷேசன் டீடெயிலிங்’தான்.
மலைகளும், மரங்களும், பசுமையும் போர்த்திக்கிடக்கும் மேற்படி கிராமத்தில்தான் அவன் இவன் படத்தின் கதையின் மூன்று நாயகர்கள் வாழ்கிறார்கள். முதலாமவர் வால்டர் காதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கும் விஷால். நாடகக்கலைஞரான இவருக்கு பிறவியிலேயே மாறுகண். இரண்டாவது நாயகன் ‘கும்புடுறேன் சாமி’. இந்தக் காதாபாத்திரத்தில் கொச்சையான, அழுக்கான வார்த்தைகளால் ரசிகனின் காது கிழிகிற அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்கும் சில்லறைத் திருடன் ஆர்யா. இவர் விஷாலின் தம்பி.
தம்பியென்றால் விஷால் அம்மாவின் சக்களத்தி மகன்.( புதிய தலைமுறைக்கு சக்களத்தி மகன் என்றால் புரியுமா தெரியவில்லை?) மூன்றாவது நாயகன், குடி, குழந்தைத்தனம், கருணை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்த, மனிதம் நிறைந்த ‘ஹைனஸ்’ என்ற அறுபது வயது ஜமீன்தாராக வரும் ஜீ.எம்.குமார்.
இந்த மூன்று காதாபாத்திரங்களுக்கும் இடையில் நேரடி ரத்த சம்பந்தம் என்றால் விஷால் ஆர்யா இருவருக்கும் இடையில் மட்டும்தான்.
ஆனால் எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத அந்த ஊரின் ஹைனெஸுக்கும் இவர்களுக்கும் இடையில், நண்பனைப் போன்ற ஒரு அப்பாவுக்கும் மகன்களுக்குமான ஒரு உலகத்தை தனது படைப்பாளுமை வழியாக விரித்து காட்டுகிறார். அதில் வெற்றியும் பெருகிறார் பாலா. இதற்கு முதல்பாதி நெடுக நகைச்சுவை வசனத்தெறிப்புகளின் துணையை நாடியிருக்கும் பாலா, இரண்டாவது பாதியில்தான் கதையிலேயே கை வைக்கிறார். இது திரைக்கதையில் பாலாவின் பலகீனத்தைக் காட்டுகிறதே தவிர ஆளுமையை அல்ல.
பொதுவாக சோதனை முயற்சி என்று சொல்லப்படும் மாற்று வகை சினிமாக்களில் கூட, முக்கிய கதைச் சரடின் அடையாளங்களை அல்லது பிரச்சனையின் தொடக்கத்தை படம் தொடங்கிய 30 நிமிடத்துக்குள் ரசிகனின் மண்டையில் திணித்து விடுவார்கள். ஆனால் பாலா இந்த விஷயத்தில் ஓவன் காண்பிடண்டாக இருந்து, ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டதுதான் அவன் இவன் படத்தின் மிகப்பெரிய பலகீனம்.
முதல் பாதி முழுக்க, முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் தினசரி வாழ்க்கைப் பாட்டை காட்டுவதிலேயே லயித்தவர், கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான சில்லறைச் சிக்கல்களை காட்டி அதை தீர்ப்பதிலேயே காட்சிகளையும், நேரத்தையும் செலவிட்டு விடுகிறார். இரண்டாவது பாதியில்தான் முக்கிய கதாபாத்திரம் ஒன்று தேடிபோய் சிக்கிக்கொள்ளும் பிரச்சனையை நோக்கிய நகர்வும், அந்தப் பிரச்சனையில் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இறுதி நிலையையும் மிகக்குறைவான நேரத்தில் சித்தரித்திருக்கிறார்.
இப்போதான்பா கதையே சூடு பிடிக்குது என்று நிமிர்ந்து உட்காரும் ரசிகனிடம் படம் முடிந்தது போய் வா என்கிறார். இதனால் மரபார்ந்த சினிமா பார்வையாளனுக்கு இது புதிய கதை சொல்லும் முறை என்று விவாதித்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அவனை வசீகரிக்க தவறி விடுகிறது படம்.
ஒட்டுமொத்தமாக படத்தில் மிஞ்சியிருப்பது வால்டர் கதாபாத்திரத்துக்கு விஷால் எடுத்துக்கொண்டிருக்கும் கடும் உழைப்பும், பாத்திரப்படைப்பின் தேவை கருதி வெற்றுடம்புடன் நடித்திருக்கும் ஜி.எம்.குமாரும் மொத்த படத்துக்கும் மகத்தான பங்களிப்பை செய்திருகிறார்கள்.
முக்கியமாக தனது பிரதான கதாபாத்திரங்களை டீடெயில் செய்வதில் பாலா காட்டும் நேர்த்தியை, வால்டர், ஹைனெஸ் ஆகிய இரண்டுபேரிடமும் பார்க்கமுடிக்கிறது. தம்பி திறமையான திருடனாக இருக்கிறான். வால்டரோ திறமையான நாடகக் கலைஞன். ஆனால் திருட்டுத் தொழிலில் தம்பி சம்பாதிக்கிறான். வால்டர் அதில் தோற்றுப் போகிறான். ஒரு கட்டத்தில் அம்மாவின் இம்சைக்கு பயந்து திருடபோகும் விஷால் அப்போது கூட ஒரு கலைஞனாக பெண் வேடமிட்டு செல்வதும், அப்பாவை இழந்த சிறுமியிடமிருந்து திருடக் கூடாது என்று எத்திக் பார்ப்பதும் என்று வால்டர் பாத்திரத்தை நுனுக்கி நுனுக்கி நுட்பமாக செய்திருகிறார்.
ஒரு கட்டத்தில் சினிமா நாயகன் சூர்யா பங்குக்கொள்ளும் விழாவில் மேடையில் நவரச நடிப்பையும் நிகழ்த்திக் காட்டும் வால்டர் விஷால்… கையை நிலத்தில் ஊணி ரவுண்ட் டிராலி ஷாட்டில் வில்லன் ஆட்களை பந்தாடும் மாஸ் ஹீரோ விஷால்தானே என்ற சந்தேகத்தை உண்டு பண்ணி விடுகிறார். இவையெல்லாவற்றையும் விட, மாறு கண் கொண்டவானாக இருந்தால் என்ன…! அவன் கலைஞன் என்றால் அந்தக் கண்களை வைத்துக்கொண்டே அவனால் நவரசரங்களையும் வெளிபடுத்த முடியும் என்று யாதார்த்தம் நம்பும் பாலாவை ஒரு ஆளுமையான இயக்குனராக இந்தக் காட்சியில் பார்க்கமுடிகிறது. இதே காட்சியில் சூர்யாவை பாராட்டுகிறாரா அல்லது இப்படி விளம்பரம் தேடிக்கொள்ளாதே என்று கூப்பிட்டு வைத்து திட்டுகிறாரா என்பது தேர்ந்த ரசிகனுக்கு நன்றாகவே விளங்கும்.
அடுத்து ஹைனெஸ் தீர்த்தபதி ஜமீனாக ஒரு பழைய அரண்மனை, ஒரு இம்பாலா கார் தவிர வேறு எதுவுமில்லாத ஆனால் வெள்ளை மனதோடு வாழ்ந்திருக்கும் ஜி.எம்.குமார் அந்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி விடுவதிலேயே அவரது காதாபாத்திரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அவரது ஆகசிறந்த நடிப்பை வெற்றுடம்புக் காட்சியிலும், பிணமாக நடித்திருக்கும் கணங்களிலும் பார்க்க முடியும்.
படத்தின் பொழுதுபோக்குத் தன்மையை தூக்கிபிடிக்கும் நோக்கத்தோடு கு.சாமியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பாலா, ஆர்யாவின் அதீதமான நடிப்பை பல காட்சிகளில் கட்டுப்படுத்த தவறி விட்டாரோ என்று தோன்றுகிறது. துணைக்கதாபாத்திரங்களில் ஆர்யாவின் நண்பன் பேத்தையாக நடித்திருக்கும் மாஸ்டர் விக்னேஷ், எஸ்.ஐ.யாக நடித்திருக்கும் காமராஜ் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
அவன் இவன் திரைக்கதையின் மிகப்பெரிய ஃப்ளா எங்கே ஒளிந்திருகிறது என்றால் படத்தின் பிரதான எதிர்மறை கதாபாத்திரமான அடிமாட்டு மொத்தவியாபாரி ஆர்.கேவை சித்தரிப்பதில் பல்ளிக்கிறது. ஆர்.கே.வின் தோற்றத்தை மட்டும் காட்டி மிரட்டும் பாலா, அவன் செய்யும் தொழிலின் குரூரத்தையோ, அல்லது அவனது அடிமாட்டுத்தனத்தையோ ஒன்றிரண்டு காட்சிகளில் ரசிகனுக்கு உஷ்னம் ஏற்றுகிற ரேஞ்சுக்கு காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லாதது போல ஒரு அழுக்கான மாயவி போல அவனை சித்தரிப்பதில் அந்த கதாபாத்திரம் மீதான எந்த அதிர்ச்சியும் ரசிகனுக்குள் கடந்து செல்லாமல் அடம்பிடிக்கிறது.
இதனால் ஹைனஸ் காதாபாத்திரத்தின் முடிவை சகிக்க மாட்டாத வால்டர், கு.சாமி இருவரும் கொதித்தெழுவது பாலாவின் பிதாமகனை மறுபடியும் நினைவுபடுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக க்ளைமாக்ஸில் அவர் தரும் திருப்பம் அதிர்ச்சி அளிக்கவில்லை. மொத்தத்தில் க்ளைமாக்ஸை முதலில் யோசித்து விட்டு பிறகு அதற்கான திரைக்கதையை யோசிப்பதால் வரும் ஆபத்து அவன் இவனுக்கு நேர்ந்து விட்டது. மற்றபடி. பாலா படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸை முதல்முறையாக இழந்திருகிறார் பாலா. அவன் இவனை ஒருமுறை பார்க்கும் ரசிகர்களுக்கு, பாலாவின் பிதாமகன் டிவிடியை இலவசமாகக் கொடுத்து அவர்களை அறுதல் படுத்தலாம்.
நன்றி தமிழ்மீடியா
Similar topics
» அவன் இவன் - Avan Ivan
» அவன் இவன் பாலாவின் காமெடி படம்
» புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்
» அவன் இவன் புகழ் பாடும் சமீரா
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
» அவன் இவன் பாலாவின் காமெடி படம்
» புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவன் இவன்
» அவன் இவன் புகழ் பாடும் சமீரா
» கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் 'அவன் இவன்' விஷால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|