Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.
Page 1 of 1
பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.
மாதத்திற்கு “பிங்க் மாதம்” என்று பெயரிட்டு, மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மாதமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பான கட்டுரை.
“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?
- எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.
புற்று நோய் ஏன் வருகிறது?
மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.
மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.
மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?
- எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.
புற்று நோய் ஏன் வருகிறது?
மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.
மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.
மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.
எந்த வயதில் இந்த நோய் அதிகம் தாக்கும்?
30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?
முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?
வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!
சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.
30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?
முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?
வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!
சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.
இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா?
உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.
சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.
பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.
***
நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.
நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.
நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.
நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.
நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.
நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.
நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்.
உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.
சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.
பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.
***
நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.
நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.
நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.
நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.
நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.
நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.
நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு..
» புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு!
» மார்பக புற்று நோயை தடுக்க
» புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு!
» மார்பக புற்று நோயை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|