சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

"ஸ்பெக்ட்ரம்' ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு Khan11

"ஸ்பெக்ட்ரம்' ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு

Go down

"ஸ்பெக்ட்ரம்' ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு Empty "ஸ்பெக்ட்ரம்' ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு

Post by *சம்ஸ் Tue 21 Dec 2010 - 6:37

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. நிரா ராடியாவுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ள விவகாரம், நாட்டை உலுக்கியுள்ளது. முறைகேடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.கடந்த 8ம் தேதி டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. டில்லியில் உள்ள ராஜா அலுவலகம், தமிழகத்தில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், நண்பர்களின் அலுவலகங்கள், வீடுகள் என ஒரே நேரத்தில் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சோதனை நடந்த ஒரு வாரத்திற்கு பின், இரண்டாவது முறையாக கடந்த வாரம் மீண்டும் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. டில்லியில் அரசியல் தரகர் நிரா ராடியாவுக்குச் சொந்தமான, "வைஷ்ணவி கம்யூனிகேஷன்' அலுவலகம், "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா ஏஜன்டுகள் அலோக் ஜெயின், மகேஷ் ஜெயின் வீடுகள், அலுவலகங்கள் என ஏழு இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, பெரம்பலூர், நெல்லை, விழுப்புரம் என 27 இடங்களிலும் காலையில் இருந்து மாலை வரை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்கள், விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் நேற்று, "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், சி.பி.ஐ., விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமையகத்தில் ஆஜரான பிரதீப் பைஜாலிடம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். விசாரணை மூன்றரை மணி நேரம் நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த பைஜால் நிருபர்களிடம் பேசுகையில், "சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எனது விளக்கத்தை அளித்தேன்' என்று மட்டும் தெரிவித்தார்.

ராஜாவுக்கு சம்மன்: இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிற்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. ராஜா தற்போது சென்னையில் இருப்பதால், டில்லியில் அவர் வசிக்கும் வீட்டில் சம்மன் அளிக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை விதி 160 பிரிவின் கீழ், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகி, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கோரப்பட்டுள்ளார்.இதே போல், அரசியல் தரகர் நிரா ராடியாவுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது.டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் அடுத்ததாக விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

"முன்ஜாமீன் கேட்க மாட்டேன்' : "மாஜி' அமைச்சர் ராஜா பேட்டி :தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக, தற்போது சம்மன் அழைப்பு சி.பி.ஐ.,யால் தரப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.

அப்போது அவர் பதிலளித்ததாவது:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum