Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
_
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம், முதலமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம் என்று தகவல் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 11ஆம் திகதி அன்று சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது.
அந்த தகவலில், `செப்டம்பர் 15ஆம் திகதி அண்ணா பிறந்த நாளன்று கோட்டைக்கு வரும்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து கொல்வோம்' என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்ததும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கமிஷனர் திரிபாதிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இதுபற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவுதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
பொலிஸ் விசாரணையில், குறிப்பிட்ட செல்போன் `சிம்' கார்டு கல்லூரி முதல்வர் ஒருவரது பெயரில் இருந்தது. உடனே தனிப்படை பொலிசார் குறிப்பிட்ட கல்லூரி முதல்வரிடம் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தது. அவரது பெயரில் செல்போன் சிம் கார்டை வாங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளி எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டது.
உடனே பொலிசார் கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது உண்மையான குற்றவாளி கல்லூரி பேராசிரியர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் யோகேஸ்வரன் (36) என்றும் தெரிய வந்தது. அவர் அச்சரப்பாக்கம் மேற்குமாட வீதியில் வசித்து வந்தார். திருமணமாகியுள்ள அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். அவரை கைது செய்து நேற்று காலையில் தனிப்படை பொலிசார் சென்னை அழைத்து வந்தனர்.
சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தற்போது வேலையில் இல்லை என்று தெரியவந்தது.
குறிப்பிட்ட கல்லூரி முதல்வர், அவரது வேலை பறிபோவதற்கு காரணமாக இருந்தார் என்றும், இதனால் அவரை பொலிசில் மாட்டிவிடுவதற்காக அவரது பெயரில் செல்போன் சிம்கார்டு வாங்கி, அந்த செல்போனில் இருந்து மிரட்டல் தகவலை அனுப்பினேன் என்றும் கைதான யோகேஸ்வரன் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவர்மீது கொலைமிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் எம்.ஏ.எம்.பிஎல். பட்டம் பெற்றவர். தமிழ் பேராசிரியரான அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொலிசார் சிறையில் அடைத்தனர். _
Similar topics
» நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினரை நஞ்சூட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டல்!
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|