Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சரக்கு வாகனங்களில் பயணம். சரியா?
Page 1 of 1
சரக்கு வாகனங்களில் பயணம். சரியா?
பொதுமக்கள் பழங்காலங்களில் நடைப் பயணமாகவே பல ஊர்களுக்குச் சென்று வந்தார்கள். வசதி உள்ளவர்கள் குதிரைகளிலும், மாட்டுவண்டிகளிலும் காட்டுவழிகளில் பயணித்தார்கள். பின் சைக்கிள்களும், மோட்டார் வண்டிகளும் வந்தன. இருசக்கர வாகனங்களும் வந்தன. அடுத்து பேருந்துகளும், புகை வண்டியும் தயாரிக்கப்பட்டு பயணம் எளிதாகியது. சரக்குகளைக் கொண்டு செல்ல லாரிகளும், சிறு சரக்கு வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்களும் (Autos, mini vans) தயாரிக்கப்பட்டன. உந்துவிசைக்கு பெட்ரோல், டீசல் என்றும் பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுலா, திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்குச் செல்ல கடந்த 20 - 30 ஆண்டுகளாக வசதியான சுற்றுலாப் பேருந்துகளும், சி்ற்றுந்துகளும், சிறிய வகை வேன்கள், கார்கள் என அவரவர் தேவைக்கேற்ப வாடகைக்குக் கிடைக்கின்றன.
ஆனால், தற்காலத்தில் ஒரு சிலர் செலவை எண்ணி, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என விழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சி, மாநாடு, பேரணிகளுக்கு திறந்த லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.
சில நேரங்களில் திருமணப் பெண், மாப்பிள்ளை உட்பட உறவினர் அனைவரும் பெருமளவில் திணிக்கப்பட்டு, நின்றபடியே இத்தகைய வாகனங்களில் கிராமங்கள், நகர்ப்பகுதி என வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்று திரும்புகின்றனர்.
இன்னும் ஒரு சில லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஓட்டுனர் பகுதிக்கு நேர் மேலே உள்ள சிறிய பகுதியில் நான்கைந்து பேர் பயணம் செய்கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 23 வயதுள்ள ஒரு ஆண் தன் நண்பரின் சரக்கு வாகனத்தில், ஓட்டுனர் இருப்பிடத்தின் மேல் பகுதியில் விளையாட்டாகப் பயணம் செய்தார். அது வினையாகி, வாகனம் இறக்கத்தில் செல்லும்போது, முன்பக்கம் கண்ணாடி மீது விழுந்து, கீழேயும் விழுந்து பலத்த காயமடைந்தார். விசாரணையில் அவர் மது அருந்தியிருந்தார் என்றும், நல்ல வேளை முட்டாள்தனமாக மேலே ஏறவில்லை என்றும் முடிவாயிற்று.
நம் தமிழகத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வது அறிவுடைமையா, அறியாமையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். தங்கள் மற்றும் உறவினர்கள் உடல் நலத்தின் மேலும், உயிரின் மீதும் அக்கறை இருந்தால், லாரி, வேன் போன்ற வாகனங்களில் இத்தகைய ஆபத்தான பயணத்தை செய்யமாட்டார்கள்.
இது போன்ற சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி, வேன் ஓட்டுனர்கள் தகுந்த ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களா, ஓரளவு படிப்பறிவும் ஆபத்து நேரங்களில் சமாளிக்க சமயோசிதமும் உள்ளவர்களா என்பதும் சந்தேகத்திற்கும், சர்ச்சைக்கும் உரியதே. ஏதாவது விபத்து நேரிட்டால் உயிரிழப்பும், காயம் அடைவோரும் அதிகமாக வாய்ப்புண்டு.
இத்தகைய போக்கு உள்ளவர்களிடம் விழிப்புணர்வை யார், எப்படி உண்டாக்குவது?
நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஓரளவு படித்தவர்களும், செய்தித்தாள் படிப்பவர்களும் இருப்பார்கள். அனேகமாக எல்லோர் வீ ட்டிலும் தொலைக் காட்சி வசதியும் உண்டு. எனவே தினந்தோறும் செய்திகளில் லாரி, வேன் விபத்துகள் பற்றியும், அதனால் ஏற்படும் காயங்கள், உயிர் இழப்புகள் பற்றியும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
காயப்படுவதையும், உயிரிழப்பையும் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதில் அரசியல்வாதிகள் இறந்தவரும், காயப்பட்டவரும் எங்கள் கட்சித் தொண்டர் என்று உரிமை கொண்டாடி, மருத்துவமனைக்குச் சென்று, பொருளுதவி செய்து விளம்பரம் தேடிக் கொள்வர். சட்டத்துக்குப் புறம்பாக சரக்கு வாகனங்களில் பயணம் செய்து, விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவ உதவி செய்யலாமேயன்றி, பொருளுதவி (இழப்பீடு) செய்வது சரியல்ல.
அவரவரின் தவறான செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வது தவறு என்று குடும்ப மற்றும் மக்களிடம் செல்வாக்குள்ள தலைவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தனித்தனியாகவும், இணைந்தும் பணியாற்றி திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வோரை வாகனத்தை நிறுத்தி, பயணிகளை பஸ்ஸில் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும். அப்படி சரக்கு வண்டி்களை பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் ஓட்டுனரையும், உரிமையாளரையும் கடுமையாகத் தண்டிக்கலாம். அபராதமாக நீதிமன்றம் பெருந்தொகையை சட்டபூர்வமாக வசூலிக்க வேண்டும். அந்த வண்டியின் தகுதிச் சான்றிதழையும், ஓட்டுனரின் உரிமத்தையும் ரத்துச் செய்யவேண்டும்.
ஆங்காங்கே வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்தாலும், பயம் சிறிதுமின்றி, சமாளித்துக் கொள்ளலாம் என்றோ, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியோ தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை மாறவேண்டும்.
உதாரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறு குழந்தை கூட சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு குழந்தை தற்செயலாக காரின் முன்புறத்தில் செல்ல நேர்ந்தது. சிறிது நேரத்தில் வழியில் ஒரு போலீசைப் பார்த்த அந்தக் குழந்தை, ' Cop, Cop' என்று சொல்லியபடி காருக்குள் பதுங்கியது. சட்டத்தின் முன் அந்த பயம் வேண்டும். அதிகாரிகளும் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடுமையான நடவடிக்கை எடுத்தாலன்றி, லாரி, வேன்களில் பயணத்தையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியாது.
வ.க.கன்னியப்பன்
- கீற்று
சுற்றுலா, திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்குச் செல்ல கடந்த 20 - 30 ஆண்டுகளாக வசதியான சுற்றுலாப் பேருந்துகளும், சி்ற்றுந்துகளும், சிறிய வகை வேன்கள், கார்கள் என அவரவர் தேவைக்கேற்ப வாடகைக்குக் கிடைக்கின்றன.
ஆனால், தற்காலத்தில் ஒரு சிலர் செலவை எண்ணி, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என விழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சி, மாநாடு, பேரணிகளுக்கு திறந்த லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.
சில நேரங்களில் திருமணப் பெண், மாப்பிள்ளை உட்பட உறவினர் அனைவரும் பெருமளவில் திணிக்கப்பட்டு, நின்றபடியே இத்தகைய வாகனங்களில் கிராமங்கள், நகர்ப்பகுதி என வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்று திரும்புகின்றனர்.
இன்னும் ஒரு சில லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஓட்டுனர் பகுதிக்கு நேர் மேலே உள்ள சிறிய பகுதியில் நான்கைந்து பேர் பயணம் செய்கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 23 வயதுள்ள ஒரு ஆண் தன் நண்பரின் சரக்கு வாகனத்தில், ஓட்டுனர் இருப்பிடத்தின் மேல் பகுதியில் விளையாட்டாகப் பயணம் செய்தார். அது வினையாகி, வாகனம் இறக்கத்தில் செல்லும்போது, முன்பக்கம் கண்ணாடி மீது விழுந்து, கீழேயும் விழுந்து பலத்த காயமடைந்தார். விசாரணையில் அவர் மது அருந்தியிருந்தார் என்றும், நல்ல வேளை முட்டாள்தனமாக மேலே ஏறவில்லை என்றும் முடிவாயிற்று.
நம் தமிழகத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வது அறிவுடைமையா, அறியாமையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். தங்கள் மற்றும் உறவினர்கள் உடல் நலத்தின் மேலும், உயிரின் மீதும் அக்கறை இருந்தால், லாரி, வேன் போன்ற வாகனங்களில் இத்தகைய ஆபத்தான பயணத்தை செய்யமாட்டார்கள்.
இது போன்ற சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி, வேன் ஓட்டுனர்கள் தகுந்த ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களா, ஓரளவு படிப்பறிவும் ஆபத்து நேரங்களில் சமாளிக்க சமயோசிதமும் உள்ளவர்களா என்பதும் சந்தேகத்திற்கும், சர்ச்சைக்கும் உரியதே. ஏதாவது விபத்து நேரிட்டால் உயிரிழப்பும், காயம் அடைவோரும் அதிகமாக வாய்ப்புண்டு.
இத்தகைய போக்கு உள்ளவர்களிடம் விழிப்புணர்வை யார், எப்படி உண்டாக்குவது?
நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஓரளவு படித்தவர்களும், செய்தித்தாள் படிப்பவர்களும் இருப்பார்கள். அனேகமாக எல்லோர் வீ ட்டிலும் தொலைக் காட்சி வசதியும் உண்டு. எனவே தினந்தோறும் செய்திகளில் லாரி, வேன் விபத்துகள் பற்றியும், அதனால் ஏற்படும் காயங்கள், உயிர் இழப்புகள் பற்றியும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
காயப்படுவதையும், உயிரிழப்பையும் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதில் அரசியல்வாதிகள் இறந்தவரும், காயப்பட்டவரும் எங்கள் கட்சித் தொண்டர் என்று உரிமை கொண்டாடி, மருத்துவமனைக்குச் சென்று, பொருளுதவி செய்து விளம்பரம் தேடிக் கொள்வர். சட்டத்துக்குப் புறம்பாக சரக்கு வாகனங்களில் பயணம் செய்து, விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவ உதவி செய்யலாமேயன்றி, பொருளுதவி (இழப்பீடு) செய்வது சரியல்ல.
அவரவரின் தவறான செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வது தவறு என்று குடும்ப மற்றும் மக்களிடம் செல்வாக்குள்ள தலைவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தனித்தனியாகவும், இணைந்தும் பணியாற்றி திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வோரை வாகனத்தை நிறுத்தி, பயணிகளை பஸ்ஸில் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும். அப்படி சரக்கு வண்டி்களை பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் ஓட்டுனரையும், உரிமையாளரையும் கடுமையாகத் தண்டிக்கலாம். அபராதமாக நீதிமன்றம் பெருந்தொகையை சட்டபூர்வமாக வசூலிக்க வேண்டும். அந்த வண்டியின் தகுதிச் சான்றிதழையும், ஓட்டுனரின் உரிமத்தையும் ரத்துச் செய்யவேண்டும்.
ஆங்காங்கே வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்தாலும், பயம் சிறிதுமின்றி, சமாளித்துக் கொள்ளலாம் என்றோ, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியோ தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை மாறவேண்டும்.
உதாரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறு குழந்தை கூட சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு குழந்தை தற்செயலாக காரின் முன்புறத்தில் செல்ல நேர்ந்தது. சிறிது நேரத்தில் வழியில் ஒரு போலீசைப் பார்த்த அந்தக் குழந்தை, ' Cop, Cop' என்று சொல்லியபடி காருக்குள் பதுங்கியது. சட்டத்தின் முன் அந்த பயம் வேண்டும். அதிகாரிகளும் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடுமையான நடவடிக்கை எடுத்தாலன்றி, லாரி, வேன்களில் பயணத்தையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியாது.
வ.க.கன்னியப்பன்
- கீற்று
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
» பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» வாகனங்களில் ஆங்கில எழுத்துக்களுடன் இலக்கத் தகடுகள் அறிமுகம்
» பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|