Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
பித்தம் தணிக்கும் இலந்தை!
Page 1 of 1
பித்தம் தணிக்கும் இலந்தை!
எனக்கு இலந்தைப் பழமும் பேரீச்சம் பழமும் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றின் மருத்துவகுணங்கள் தெரியவில்லை. அவை பற்றிய ஆயுர்வேத கருத்துகள் எவை?
சீமை இலந்தை (ராஜபதரம்), நாட்டு இலந்தை (பதரம்), காட்டு இலந்தை (க்ஷýத்ர பதரம்) என்று பழத்தின் உருவத்தைக் கொண்டு இலந்தைப் பழம் மூன்று வகையில் கிடைக்கின்றது. உருவத்தில் பெரிதான சீமை இலந்தை இரான், ஆப்கானிஸ்தான், சீனா , இந்தியாவில் காஷ்மீர், பாகிஸ்தானில் பலுசிஸ்தானம் ஆகிய இடங்களில் நிறைய விளைகிறது. வெளிநாடுகளிலிருந்து வருவதால் அதற்குச் சீமை இலந்தை என்று பெயர். ருசியில் நல்ல இனிப்பானது.
புளிப்புத் தூக்கலான இனிப்புடன் கூடியது நாட்டு இலந்தை. துவர்ப்பும் புளிப்பும் மிக்கது காட்டு இலந்தை. அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், உணவாக அதிகம் பயன்படுவதில்லை.
பிடித்திருக்கிறது என்ற காரணத்தினால் இலந்தைப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும். அதற்குக் காரணம் அதிலுள்ள நெய்ப்பும் பிசுபிசுப்பும்தான். காய் கனிந்து பழமாகிவிட்டால் அதன் சுவை கூடிவிடும். அதைச் சாப்பிட்டால் பித்தம் தணிந்துவிடும். நன்றாகப் பழுத்திருந்தால் அதிலுள்ள விதையை நீக்கிவிட்டு, தோலையும் பழச் சதையையும் உலர்த்தி வைத்துக் கொண்டு, தொண்டை நுரையீரல் பகுதிகளில் கபம் உறைந்து வெளியே வராமல் வறட்டிருமல் ஏற்படும் போது இதைச் சாப்பிட கபம் இளகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்.
தொண்டை எரிச்சல் குறையும். விக்கலைப் போக்கி, பசியை நன்றாகத் தூண்டிவிடும், நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், அடிக்கடி போகும் சிறுநீரின் அளவைக் குறைக்கவும் இது உதவும். குடலில் தேங்கும் மலத்தை இளக்கி வெளியேற்றிக் குடலுக்கு வலுவூட்டும்.
சிலருக்குப் பசி மந்தமாகி ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அந்த நிலையில் இலந்தை வற்றலுடன் மிளகும் இந்துப்பும் சேர்த்துத் தூளாக்கி, சிறிது சூடான தண்ணீருடன் காலையில் சாப்பிட, பசி மந்தம் நீங்கி, ஜீரண சக்தி அதிகமாகும். பொதுவாக புளிப்பு கெடுதல். ஆனால் புளிப்பான இலந்தை வற்றலைச் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் களைப்பை நீக்கி, உடலுக்குப் புஷ்டி, பலமளிப்பதில் சீமை இலந்தைப் பழம் நல்ல உணவாகும்.
பேரீச்சம்பழம், சிற்றீச்சை (கர்ஜுரம்), பேரீச்சை (பிண்டகர்ஜுரம்) என இரண்டு வகை. இதில் பேரீச்சையில் பழமாகப் பாடம் செய்யப்பட்டது பேரீச்சம் பழமென்றும், உலர வைத்து பேரீச்சங்காய் என்றும் கிடைக்கிறது.
நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடிய பேரீச்சம் பழத்தில் பிசுபிசுப்பும் இனிப்பும் உண்டு. பலம் புஷ்டி, பசி தரக்கூடியது. மலத்தை இளக்கி வெளியாக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். தொண்டை மார்பில் கட்டிள்ள கபத்தை இளக்கி, வெளியே கொண்டுவரும்.
பேரீச்சங்காய் வாயில் அதிகமாக ஊறும் எச்சிலைத் தடுக்கும். பேதி, சீதபேதி, ரத்த பேதி போன்றவற்றை நிறுத்தும். காயைச் சாப்பிட்டுவிட்டுப் பால் அருந்தலாம்.
பேரீச்சங்காய் கஷாயம் சாப்பிட கபஜ்வரம், பிதற்றலுடன் கூடிய காய்ச்சல், வறட்டிருமலால் விலாவலி, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, விந்தணுக்கள் வளரும். ரத்தத்தையும் பித்தத்தையும் தெளிவாக்கும்.
நன்றி தினமணி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது..!
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் தனிக்கும் கொத்தமல்லி.
» வெப்பத்தை தணிக்கும் வெட்டி வேர்
» உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்.
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் தனிக்கும் கொத்தமல்லி.
» வெப்பத்தை தணிக்கும் வெட்டி வேர்
» உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|