Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இலவச பார் ஆகும் மெரினா கடற்கரை
2 posters
Page 1 of 1
இலவச பார் ஆகும் மெரினா கடற்கரை
மெரினா, உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை என்ற சிறப்பை பெற்றது.
சென்னை என்றாலே மெரினாதான் நினைவுக்கு வரும். எந்த நேரத்திலும் இங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இரவும் பகலும் வெளிச்சத்தில் மிதக்கும் இந்த அழகிய கடற்கரையின் சிறப்பை உணர்ந்து, கடந்த ஆட்சியில் பல கோடி செலவில் புல் தரைகள், நடை மேடை, பறவை வடிவ மின்விளக்குகள், தியான மேடை, சறுக்கு விளையாட்டு மைதானம், கழிவறைகள் அமைக்கப்பட்டன.
கடற்கரை அழகை பாதுகாக்கும் வண்ணம், மாநகராட்சி சார்பில் குப்பை அள்ளும் இயந்திரங்கள், கடற்கரை மணலை தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்கள் போடவும், கடற்கரை ஓரங்களில் சிறுகடைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இவை கடுமையாக அமல்படுத்தப்பட்டதுடன் மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடுமையான சட்டத் திட்டங்கள் காரணமாக, புதுப்பிக்கப்பட்ட பின்னர் சில காலத்திற்கு மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் மெரினா திகழ்ந்தது. இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சென்னைவாசிகளும் கடற்கரையின் அழகை கண்டு மகிழ்ந்தனர். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதுடன், கடற்கரையும் குப்பை மேடாக மாறி வருகிறது.
Re: இலவச பார் ஆகும் மெரினா கடற்கரை
மணல் பரப்பில் சில இடங்களில் தோண்டினால் உப்புல்லாத நல்ல தண்ணீர் கிடைக்கும். சிலர் ஊற்று தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வந்தனர். சுகாதாரமற்றது என்பதால், இதற்கு மாநகராட்சி தடை விதித்தது. இப்போது ஊற்று தண்ணீர் விற்பனை களை கட்டியுள்ளது. 1 லிட்டர் தண்ணீர் ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரையில் புல்தரைகள் அமைக்கப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. சில இடங்களில் புல் தரைகளில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல் தரைகளில் அமர்வதற்கும், நீரூற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தடையை யாரும் மதிப்பதில்லை. புல் தரைகளில் அமர்வதுடன் படுத்து தூங்கவும் செய்கின்றனர். மேலும், நீரூற்றில் குளித்து குத்தாட்டம் போடுகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து உருவாக்கப்பட்ட புல் தரைகள் நாசமாகி வருகிறது. மெரினாவில் விற்கப்படும் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. உதாரணமாக 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ஸி 20க்கும், தண்ணீர் பாக்கெட்டுகள் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
Re: இலவச பார் ஆகும் மெரினா கடற்கரை
அதேபோல அரை லிட்டர் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் அனைத்தும் ரூ.28 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இரவு வேளைகளில் வீடுகள் இல்லாதவர்கள், கடற்கரை பகுதியை சுற்றியுள்ளவர்கள், பிச்சைகாரர்கள் என ஏராளமானவர்கள் வந்து படுத்து விடுகின்றனர். கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதையிலும் இவர்கள் படுத்து கொள்வதால் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு வேளைகளில் சிலருக்கு இலவச பார் ஆகவும் கடற்கரை மணல்வெளி பயன்படுகிறது.
Re: இலவச பார் ஆகும் மெரினா கடற்கரை
அக்கறை அவசியம்
பொழுதுபோக்க குடும்பத்துடன் மெரினா வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களின் மீதி, பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் போன்றவற்றை மணற்பரப்பில் வீசிச் செல்கின்றனர். கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்டினாலே மெரினா சுத்தமாகி விடும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|