சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இன்றைய ஹதீஸ் (23-07-2011) Khan11

இன்றைய ஹதீஸ் (23-07-2011)

Go down

இன்றைய ஹதீஸ் (23-07-2011) Empty இன்றைய ஹதீஸ் (23-07-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Jul 2011 - 7:54

வஹீயின் நிமித்தம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதோ அது தூக்கத்தில் வரும் உண்மையான கனவாக இருந்தது. அது நிஜவாழ்க்கையில் காலைபொழுது (வருவது எவ்வளவு உறுதியோ அது) போன்று நடந்தேறிய தவிர எந்தக்கனவையும் அவர்கள் காண்பதில்லை. அதன்பிறகு தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாக்கப்பட்டது. ஆகவே ஹிராகுகையில் தனித்திருந்து வழிபாடு செய்து வந்தனர். தன் குடும்பத்தினர்பால் திரும்புமுன் எண்ணிக்கையுள்ள பல இரவுகளை வணக்க வழிபாட்டில் கழித்து வந்தனர். அதற்காக தங்களை தயார் செய்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர். அதன்பிறகு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்பால் திரும்பி வந்து அதுபோன்ற (பலநாட்களுக்குரிய) உணவை தயார் செய்து கொள்வர். ஹிராகுகையில் (இவ்வாறாக) இருந்து வந்த போது திடீரென(ஒரு நாள்) இறையறிவிப்பு வந்துவிட்டது (அதன்காரணமாக) அவரிடம் அமரர்(மலக்கு) வந்து ஓதுவீராக! எனக்கூறினார். அதற்கு நபி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் ஓதக்கூடியவன் அல்லன்! என்றனர். (ஆகவே) அவர் (மலக்கு) என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு ஓதுவீராக! என்றனர். நான் ஓதக்கூடியவன் அல்லன்! என்று நான் கூறினேன். (அதன்பிறகு) அவ(அமர)ர் இரண்டாம் முறையாக என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு ஓதுவீராக! என்றனர். அதற்கு நான் ஓதக்கூடியவன் அல்லன்! எனக்கூறினேன் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு மூன்றாம் முறையாக என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு

“படைத்தவனாகிய உமது இரட்சகனின் பெயர் கொண்டு ஓதுவீராக! (அவன்) மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். மிகுந்த கண்ணியம் வாய்ந்தவன் உமது இரட்சகன் (என) ஓதுவீராக! அவனே எழுதுகோலின் மூலம் கற்றுத் தந்தான் அவனே (மனிதனுக்கு) அவனுக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுத் தந்தான்” என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இறை அறிவிப்பாகிய) அதைப்பெற்றுக்கொண்டு அவர்களது தோல்புஜங்களுக்கும் கழுத்துக்கும் இடையில் உள்ள சதைப்பகுதி நடுங்க, அங்கிருந்த திரும்பி கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களது (வீட்டில்) வந்து நுழைந்தனர். (நுழைந்த அவர்கள்) என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! எனக்கூறினர். நடுக்கம் நீங்குகின்ற வரையில் (கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போர்த்தினர். அதன்பிறகு கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களைப்பார்த்து கதீஜாவே! எனக்கு என்ன நேர்ந்தது? எனக்கூறிவிட்டு அவர்களுக்கு (நடந்த) செய்தியை தெரிவித்துவிட்டு “நான் நிச்சயமாக என்னைப்பற்றியே பயந்து விட்டேன்” என்றனர் அதைக்கேட்ட கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பார்த்து (விஷயம்) அவ்வாறல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். நிச்சயமாக நீங்கள் ரத்த சொந்தத்தை சேர்த்து (அரவணைத்துக்) கொள்கீறீர்கள்! செய்தியில் உண்மையே பேசுகிறீர்கள்! (அனாதைகள், விருந்தினர், குடும்பத்தார் ஆகியோர்க்கு பொறுப்பேற்று அவர்களுக்காக செலவு செய்து, அவர்களது) சுமையைதாங்கிக் கொள்கிறீர்கள். மற்றவர்களால் இயலாத அளவுக்கு பெரும் பொருளை ஈட்டி (அவற்றை நன்மையானவற்றில் மனிதர்களுக்காக) செலவு செய்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். உண்மையான கஷ்டத்திலிருப்பவருக்கு உதவியும் செய்கிறீர்கள். எனக்கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்துக் கொண்டு வராகபின் நவ்பல்பின் அஸத் பின் அப்துல் உஜ்ஜாவிடம் வருகின்றனர்.

(வரகா எனக்கூறப்படும்) இவர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது தந்தையின் உடன் பிறந்த சகோதரரின் மகனாவார். அவர் அறியாமை காலத்தில் கிறிஸ்தவராக இருந்தார். அரபியில் நூல் எழுதும் திறமை மிக்கவராக இருந்தார். உயர்வான அல்லாஹ் அவர் எந்த அளவு எழுத வேண்டுமென நாடியிருந்தானோ, அந்த அளவு அரபி மொழியில் இன்ஜீலை எழுதினார். அவர் அப்போது வயது முதிர்ந்தவராகவும், கண்பார்வையிழந்தவராகவும் இருந்தார்.

இவரிடம் வந்தடைந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், எனது மரியாதைக்குரியவரே! உமது சகோதரரின் மகனிடமிருந்து (அவர் கூறுவதைக்) கேட்பீராக! என்றனர். அதற்கவர் என் சகோதரரின் மகனாரே! என்ன கண்டிர்? எனக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கண்டார்களோ? அதை அவருக்கு தெரிவித்தனர். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு (இறையறிவிப்பைக் கொண்டு) வந்த, இந்த ஜிப்ரில் தான் மூஸாபின் இம்ரான் அவர்களுக்காக (வானத்திலிருந்து அறிவிப்பைக் கொண்டு) இறக்கப்பட்டவர். (அந்த நபித்துவத்தை மக்களுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யும் காலத்தில்) அப்போது நான் முறுக்கான வாலிபனாக இருக்க வேண்டுமே! உமது சமூகத்தவர் உம்மை (பிறந்த மண்ணிலிருந்து) வெளியேற்றுகின்ற போது நான் உயிரோடு இருக்க வேண்டுமே எனக் கூறினார். (இதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

“அவர்கள் என்னை (ஊரைவிட்டு) வெளியேற்றி விடுவார்களா?” எனக்கேட்க, வரகா அவர்கள் ஆம்! நீங்கள் கொண்டு வந்ததை எந்த மனிதரும் கொண்டுவரவில்லை: அவர் பகைக்கப்பட்டே தவிர!. உம்முடைய (அந்த) நாள் என்னை அடைந்துவிட்டால் (நான் அதுவரை உயிரோடு இருப்பின்) மிகக் கடுமையான உதவியாக உங்களுக்கு நான் உதவுவேன்!, எனக் கூறினார்.

இந்தச் செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் அறிவித்ததாக உர்வாபின் ஜுபைர் அவர்கள் அறிவித்தார்கள்.

ஒரு முக்கிய குறிப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் கிடைக்கும் முன்பு ஹிராமலையின் குகையினுள் சென்று தனித்திருந்து சிந்தித்தனர், என்பது மிகச்சரியான உண்மை. ஆனால் நபித்துவம் கிடைத்தபின் மக்களை விட்டுப் பிரிந்து எந்த மலையின் குகைக்கோ, அல்லது தனிப்பட்ட இடத்திற்கோ சென்று பல நாட்கள் அல்லது பல இரவுகள் இருந்துவிட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. உண்மை நிலைமை இவ்வாறு இருக்க: அல்லாஹ் இருபத்து மூன்று வருட காலம் இப்புனிதமான மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் அவர்கள் மூலம், சொல்லாக, செயலாக, சம்மதமாகத்தான் அல்லாஹ் கற்றுத்தந்தான். ஆனால் நபித்துவத்திற்குப்பிறகு எந்த மலையையும் எந்த குகையையும் தேடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லவில்லை என்பதை மிகத் தெளிவாக நாம் விளங்கிகொள்ள வேண்டும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum