Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
2 posters
Page 1 of 1
ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் 25-ம் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு சரணடைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்த 32 பேரை விரட்டிவிட்டுவிட்டு அவர்களது வீடுகளை வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அபகரித்ததாக புகார் உள்ளது.
அதே போல சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரிமியர் ரோலர் மாவு மில் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும் இன்னொரு புகார் உள்ளது.
இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (கொலை வழக்குகளிலும் சிக்கியவர் இவர்), கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, மற்றும் ஜிம்.ராமு. மகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிகடை பெருமாள், கொண்டலாம்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ. பாலகுரு மூர்த்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ், கறிக்கடை பெருமாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வியாழன் அன்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பில் வழக்கறிஞர் ஐ. சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடுகையில், "மனுதாரர் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை எளிதில் கலைத்துவிடுவார். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்றார்.
இந்த நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டவை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது:
முன்ளாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்குள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும். போலீசார் அவரை தங்கள் காவலில் எடு்த்து விசாரிக்கலாம்.
வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் போலீசார் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு அவரை 5-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அப்போது ரூ. 25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து வீரபாண்டி ஆறுமுகம் வெளி வரலாம்.
பின்னர் தினமும் சம்பந்தப்பட்ட போலீசில் அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
தட்ஸ் தமிழ்
மேலும், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்த 32 பேரை விரட்டிவிட்டுவிட்டு அவர்களது வீடுகளை வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அபகரித்ததாக புகார் உள்ளது.
அதே போல சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரிமியர் ரோலர் மாவு மில் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும் இன்னொரு புகார் உள்ளது.
இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (கொலை வழக்குகளிலும் சிக்கியவர் இவர்), கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, மற்றும் ஜிம்.ராமு. மகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிகடை பெருமாள், கொண்டலாம்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ. பாலகுரு மூர்த்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ், கறிக்கடை பெருமாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வியாழன் அன்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பில் வழக்கறிஞர் ஐ. சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடுகையில், "மனுதாரர் அரசியல் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை எளிதில் கலைத்துவிடுவார். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்றார்.
இந்த நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டவை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது:
முன்ளாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்குள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும். போலீசார் அவரை தங்கள் காவலில் எடு்த்து விசாரிக்கலாம்.
வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் போலீசார் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு அவரை 5-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அப்போது ரூ. 25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து வீரபாண்டி ஆறுமுகம் வெளி வரலாம்.
பின்னர் தினமும் சம்பந்தப்பட்ட போலீசில் அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» காகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி
» சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
» 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு
» விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
» காகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி
» சிங்கள பாடசாலையில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் அனுமதி
» 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு
» விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|