சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கண்மணி ராசாவின் கவிதை  Khan11

கண்மணி ராசாவின் கவிதை

+2
முனாஸ் சுலைமான்
Atchaya
6 posters

Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty கண்மணி ராசாவின் கவிதை

Post by Atchaya Wed 27 Jul 2011 - 15:43

நன்றி

குறுக்கும், நெடுக்குமாய்
அலைபாயும்
”செல்’’ கதிர் வீச்சுகளில் சிக்கி
சின்னாபின்னாமாயிருக்குமோ...?

விளைநிலங்கள் எல்லாம்
வீட்டு மனைகளான போது
மூடப்பட்ட கிணறுகளில்
மொத்தமாய் புதையுண்டதோ...?

மரங்களெல்லாம்
வெட்டப்பட்டதால்
மறைவிடம் இல்லாது
மாண்டு போயிருக்குமோ...?

கதை சொல்லும் பாட்டி இடத்தில்
கார்ட்டூன்கள்
வந்துவிட்டதால்
ஒளிந்து கொள்ள கதைகளின்றி
ஒழிந்து போயிருக்குமோ...?

பிஞ்சுகள்கூட தமக்கு
அஞ்சுவதில்லையென
பேதலித்துப் போய்
தற்கொலை பண்ணியிருக்குமோ...?

என்னதான் ஆயின...?
எங்கேதான் போயின...?
நம் பேய்கள்.

2
பள்ளிப் பேருந்தில்
இருந்து
பறக்கும் முத்தம்
விட்டது குழந்தை.
சட்டென
வசந்த மழைத்துளி
ஆனந்தமாய்
வாங்கிக் கொண்டது...
அம்மாவிற்கு முன்னே.
இன்னமும்
முத்தங்களை வேண்டியபடி
இரையத் தொடங்கியது
பெருமழை.
முத்தம் அருந்திய
முதல் துளி மட்டும்
பின்னொரு
நாள் ஆகும்.
செடியில் பூவாய்.
சிப்பியில் முத்தாய்.

3

நகரத்து வீதிகளில்
நடந்து, நடந்து மகிழ்கிறான்...
சேரியிலிருந்து வந்தவன்
செருப்பணிந்த கால்களோடு.

4
புழுக்கமாய்
இருந்தாலும் பரவாயில்லை...
பூட்ஸ்-ஐ காலில்
போட்டுக்கொள்.
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை...
மேலத்தெரு வழியே
பள்ளிக்குப் போ...!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து உதைத்தார்கள்
உன் பாட்டனை.

5

”இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று
சொல்லுவதில்லை”
பாடியபடியே
ரயிலில் ஏறினான்...
பார்வையற்ற யாசகன்.
அங்கு
யாருமே இல்லையென்பதை
யாருமே சொல்லவில்லை.

6
”பிளாஸ்டிக் பூவொன்றை
பற்களால் கடித்தபடியே
உறங்கிப் போனாள்...
லட்சுமிக் குட்டி.
எப்போதும்
வாடியபடியே திரும்பிப் போகும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இனிமேல்
கிடைக்கும்... தேன்.

7
உணவருந்தும்...
உதவிகள் செய்யும்...
ஆசீர்வதிக்கும்...
அரவணைக்கும்...
கைகுலுக்கும்...
கவிதைகள் எழுதும்...
வரவேற்கும்...
வழியனுப்பும்...

வரிசையாய்
சொல்லிவிட்டு
ஆசிரியர் கேட்டார்

வலது கை
வேறென்ன செய்யும்...?

வகுப்பறையே
மௌனமாய் யோசிக்க
இயல்பாய் சொன்னான் அவன்.

”மலம் அள்ளும்’’


8
இந்தக் கவிதையிலிருக்கும்
எல்லாச் சொற்களும்
நீங்கள் அறிந்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
எல்லாப் பொருளும்
நீங்கள் உணர்ந்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
துயரச்சம்பவம்
நீங்கள் பார்த்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
ஓயாத அழுகுரல்
நீங்கள் கேட்டவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
ஆயுதங்கள்
நீங்கள் தெரிந்தவைதான்

பின்னெப்படி...?
பின் எப்படி...?

இந்தக் கவிதைக்கு
வந்த கோபம் மட்டும்
உங்களுக்கு வராமல் போனது...,



9
நீ
முள்வேலிக்குள் கிடந்தாய்
நான்
சொல்வேலிக்குள் கிடந்தேன்.

செந்நீர் காயாத
உன் பொழுதுகள் பற்றி
இன்னமும்
சேதிகள் வரத்தான் செய்கின்றன...

இருந்தும்...

கண்ணீர் கசியும் - இக்
கவிதையொன்றைத் தவிர
உன்னிடம்
கையளிக்க வேறெதுவுமில்லை
என்னிடம்.

ஆனாலும் சோதரனே...!

நாளை எழும்
உன் வரலாறு.
அதில்...
தோட்டாக்களால்


நீ வீழ்ந்ததைப் போலவே
துரோகத்தினால்
நான் வீழ்ந்ததைப் பதிவு செய்...

ஏனெனில்
நீ இறையாண்மைக்காக போராடினாய்
நான் இறையாண்மையோடு போராடினேன்.

10

மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அடிபணிவதால் வரும்
ஆதாயங்கள் பற்றி
அறியாதவன் நக்கீரன்...
ஆகவே
பாடிவிட்டான்
"குற்றம் குற்றமே'' என
மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அதிகார உறவின்
அனுகூலங்கள் பற்றி
அறியாதவன் கம்பன்...
ஆகவே
பாடிவிட்டான்
"மன்னவனும் நீயோ
வளநாடும் உனதோ'' என.

மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அனுசரித்துப் போவதன்
பலன்கள் அறியா
பைத்தியக்காரன் பாரதி
ஆகவே
பாடிவிட்டான்
"அச்சமில்லை
அச்சமில்லை'' என

ஆனால்... பிரபோ!

அடியேன் அப்படியல்ல

கடைக்கண் பார்வை போதும்
உங்கள்
காலடியில் கவிழ்ந்து கிடப்போம்
நானும்
என் கவிதைகளும்.

11

அநீதி நடந்தால்
கண்களை மூடு
அவலக்குரல் கேட்டால்
காதுகளை மூடு
பொதுப்பிரச்சனையா...?
பஜனையைத் தொடங்கு
போராட்டமா...?
பூசையில் மூழ்கு

தேசமே எரிந்தாலும்
திரும்பிப் பார்க்காதே
மயானமாய் போகட்டும்
தியானம் கலையாதே...!

சாதிக் கொடுமையா... சாட்சாத் பகவான் செயல்
சமூக ஏற்றத்தாழ்வா... ஐயோ! முன்வினைப்பயன்
இனப்படுகொலையா... இரங்கல் தீர்மானம் போதும்

ஏனிந்த கொடுமையென எதற்கும் பதறாதே
"ஆனந்த அலை'' அம்புட்டும் உனக்கே

பாழும் சமூகம் பாழாய் போகட்டும்
"வாழும் கலை'' இது அறிவாய் குழந்தாய்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by முனாஸ் சுலைமான் Wed 27 Jul 2011 - 15:46

அனுசரித்துப் போவதன்
பலன்கள் அறியா
பைத்தியக்காரன் பாரதி
ஆகவே
பாடிவிட்டான்
"அச்சமில்லை
அச்சமில்லை'' என



அநீதி நடந்தால்
கண்களை மூடு
அவலக்குரல் கேட்டால்
காதுகளை மூடு
பொதுப்பிரச்சனையா...?
பஜனையைத் தொடங்கு
போராட்டமா...?
பூசையில் மூழ்கு



அழகு வரிகளும் ஆர்வம் தரும் சொற்களும் ஆனந்தமே வாழ்த்துக்கள் தோழருக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by Atchaya Wed 27 Jul 2011 - 16:27

நன்றி....முனாஸ்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 18:20

எல்லாமே அருமை தோழரே .
தொடரட்டும் உங்கள் பதிப்புக்கள்.
சேனையை அலங்கரிக்கட்டும்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by Atchaya Wed 27 Jul 2011 - 19:01

நன்றி கலை.... :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 19:36

அசத்தலான கவிதைப்பகிர்வு நன்றி தொடருங்கள் உங்கள் அபாரமான பதிவினை


கண்மணி ராசாவின் கவிதை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by jasmin Wed 27 Jul 2011 - 22:33

உணர்ச்சியில் எழுந்த உள்ளக்குமுறலோடு ஆரம்பித்த கவிதை மழையாய் பொழிந்து பனியாய் உ்றைந்து அருவியாய் வீழ்ந்து ஆறாய் ஓடி ..ஆதங்கக்கடலில் கலந்தது அருமை ... நண்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:37

மிகவும் அருமையாக உள்ளது
கண்மணி ராசா அனுபவித்து
அருமையாக எழுதியுள்ளார்
தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்மணி ராசாவின் கவிதை  Empty Re: கண்மணி ராசாவின் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum