சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

வேதனை சொல்வேன் தோழி... Khan11

வேதனை சொல்வேன் தோழி...

+4
jasmin
நேசமுடன் ஹாசிம்
Atchaya
அப்துல்லாஹ்
8 posters

Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty வேதனை சொல்வேன் தோழி...

Post by அப்துல்லாஹ் Wed 27 Jul 2011 - 17:51

வேதனை சொல்வேன் தோழி... Sadlady

நிழல்தரா மரமுண்டோ தோழி விண்ணில்
நீரில்லா மேகமும்தா னுண்டோ சொல்
விதைமுளைக்கா வெட்டை வீதியாக்கி இறைவன்
விதியாலே சதிசெய்தான் பார்

மென்மலர் பிஞ்சுஒன்று மேன்மையாய் என்வயிற்றில்
வந்துயென்வாட்டம் போக்கி வளர்ந்துயென்செல்வம் காக்கும்
என்றுநான் எண்ணியெண்ணி ஏமாந்து நொந்தேன் தோழி
இன்றுநான் வாழ்வதேன் சொல்

மல்லிகைப் பந்தலிட்டேன் மலருக்குப் பஞ்சமின்றி
அல்லியும் ஆம்பலும் என் அகத்திடை அணிவகுக்க
மலர்க்கூட்டம் மங்கையென்னை மனம்சேர மகிழ்வித்தாலும்
மழலையில்லை என்மடியில் காண்

பிள்ளையில்லையென்றதொரு பெருந்துயர் தவிர்த்து என்னில்
கொள்ளைநோய் ஏதுமில்லை கொடியறுந்து வீழ்வதற்க்கு
வெள்ளையாய் உள்ளம் உண்டு வேதனை சிந்தச்சிந்த
கிள்ளை மொழியாளே பார்

குழலினும் இனிதுயென்பர் குழவியின் கன்னல்மொழி
கழல்தனில் கொலுசு பூட்டி களிக்கவே குதித்துஓடும்
அழல்வண்ணச்சிறுவாய் சிந்தும் புன்னகை காணாதின்று
விழலாச்சுதே என் வாழ்வு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by Atchaya Wed 27 Jul 2011 - 19:09

குழலினும் இனிதுயென்பர் குழவியின் கன்னல்மொழி
கழல்தனில் கொலுசு பூட்டி களிக்கவே குதித்துஓடும்

://:-: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 19:16

மலர்க்கூட்டம் மங்கையென்னை மனம்சேர மகிழ்வித்தாலும்
மழலையில்லை என்மடியில் காண்


வேதனைகள் நிறைந்த வாழ்க்கையில் எதிர்நீச்சல் கொண்டு வென்றிடத்துணிகிறது மனங்கள்
தோழரின் அத்தனை வரிகளும் அருமை கருவுக்கு ஆறுதலாய் அமைந்திடட்டு்ம்
நீண்ட இடைவெளியில் தோழரின் அழகிய வரிகள் மனதுக்கு மகிழ்வை தந்தது தொடருங்கள் தோழரே


வேதனை சொல்வேன் தோழி... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by jasmin Wed 27 Jul 2011 - 19:27

அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by *சம்ஸ் Wed 27 Jul 2011 - 20:32

அனைத்து வரிகளும் அருமை
வலி நிறைந்த வரிகள் வாழ்த்த வார்த்தை இல்லை எனக்கு .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 21:53

உங்கள் மனதில் என்ன கவிலையோ
ஏக்கம் நிறைந்த வரிகள் அனுபவித்து
எழுதியுள்ளீர்கள் ஆறுதலான வாழ்த்துக்கள்
தொடர்ந்து வாருங்கள் மனம் குளிர தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by அப்துல்லாஹ் Wed 27 Jul 2011 - 22:28

அன்பின் நல் உறவுகாள்
அல்லாஹ்வின் அருட்கொடையால் சுகமே

அடைக்கலம் தந்த சேனை
அதனுடன் இணைந்தேன் நானும்
ஆசை தான் நானும்மோடு
அதிக நேரம் இணைய
ஆயினும் பணிச்சுமையால்
ஆயிற்று ஓர் பிரிவு

எனக்கென்ன பிணக்கு இங்கே
யாருடன் பினங்குவேன் நான்
கணக்கிட்டுப் பார்த்தால் என்னை
அரவணைத்த உறவே எல்லாம்...

என்னையும் மதித்து இங்கே
எனக்குமது கல்பிலே இடமும் தந்தீர்
அத்தகு நல்லோர் நீவிர்
காட்டும் நல் அன்பிற்கீடாய்
பொன்னையும் பொருளையும் வைத்துப்
பொருத்தினாலும் பொருந்தாதய்யா...

:flower: :flower: :flower:
அன்பன் அப்துல்லாஹ்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:33

abdullah wrote:அன்பின் நல் உறவுகாள்
அல்லாஹ்வின் அருட்கொடையால் சுகமே

அடைக்கலம் தந்த சேனை
அதனுடன் இணைந்தேன் நானும்
ஆசை தான் நானும்மோடு
அதிக நேரம் இணைய
ஆயினும் பணிச்சுமையால்
ஆயிற்று ஓர் பிரிவு

எனக்கென்ன பிணக்கு இங்கே
யாருடன் பினங்குவேன் நான்
கணக்கிட்டுப் பார்த்தால் என்னை
அரவணைத்த உறவே எல்லாம்...

என்னையும் மதித்து இங்கே
எனக்குமது கல்பிலே இடமும் தந்தீர்
அத்தகு நல்லோர் நீவிர்
காட்டும் நல் அன்பிற்கீடாய்
பொன்னையும் பொருளையும் வைத்துப்
பொருத்தினாலும் பொருந்தாதய்யா...

:flower: :flower: :flower:
அன்பன் அப்துல்லாஹ்


மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோசம்
உங்கள் வேலைப்பழுக்கள் அனைத்தையும்
இறைவன் இலகுவாக்கித்தர வேண்டுகிறேன்
என்றும் உங்கள் வரவிலும் வரிகளிலும்
ஆனந்தம் அடைகிறேன் இணைந்திருப்போம்
நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 23:18

கருவை தேடிய நிலையில்
ஒரு கருவானது கவிதைக்கு !

கருவுற இறைவன் துணை!
ஆறுதல் கூற நண்பர்கள் துணை!
கண்ணீர் துடைக்க கணவன் துணை!

தொடருங்கள் உறவே!உங்கள் கவிதையை காண,
சேனையில் உறவுண்டு !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by முனாஸ் சுலைமான் Wed 27 Jul 2011 - 23:20

பிள்ளையில்லையென்றதொரு பெருந்துயர் தவிர்த்து என்னில்
கொள்ளைநோய் ஏதுமில்லை கொடியறுந்து வீழ்வதற்க்கு
வெள்ளையாய் உள்ளம் உண்டு வேதனை சிந்தச்சிந்த
கிள்ளை மொழியாளே பார்

://:-: ://:-: :!@!: :!@!:
வாழ்த்துக்கள் தோழருக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வேதனை சொல்வேன் தோழி... Empty Re: வேதனை சொல்வேன் தோழி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum