சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வானம் - Vaanam Khan11

வானம் - Vaanam

Go down

வானம் - Vaanam Empty வானம் - Vaanam

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:50

வானம் - Vaanam Vaanam-646

தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய 'வேதம்' படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இந்த 'வானம்'.
முதல் காட்சி பெங்களூரிலிருந்து துவங்குகிறது. ராப் பாடகராக பரத்தும், அவரது காதலியாக வேகாவும் வருகிறார்கள். ஆரம்பமே 'ஹு ஆம் ஐ...' என்ற ராப் பாடலோடு படம் துவங்குகிறது. இவர்களிருவரும் ரவுடி கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இது முதல் சம்பவம்.
தூத்துக்குடியில் சரண்யாவும், அவரது மகனும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வாங்கிய கடனுக்காக, சரண்யா தனது கிட்னியை விற்று, கடனை அடைத்து, தனது மகனை படிக்க வைக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவரது பணம் திருட்டு போய்விடுகிறது. இது இரண்டாவது சம்பவம்.
தமிழக - ஆந்திர எல்லையோரம் உள்ள சூலூர் பேட்டையில், விபச்சாரத் தொழில் நடத்தி வருகிறார் அனுஷ்கா. அந்த பாத்திரத்திற்கேற்றபடி, படு கவர்ச்சியாக வந்து ரசிகர்களை ஜொள்ளிட வைக்கிறார். இவரிடம் ஒரு போலீஸ் அதிகாரி அசிங்கமாகப் பேசிவிட, அவரை மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து விடுகிறார். இந்த விவகாரம் வெளியே தெரியவர, இவர் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். இது மூன்றாவது சம்பவம்.
கோவையில் பிரகாஷ் ராஜ் - சோனியா அகர்வால் தம்பதியினர் வசித்து வருகினறனர். பிரகாஷ் ராஜின் தம்பி தகாத காரியங்களைச் செய்து விட்டு தலைமறைவாகி விட, சந்தேகத்தின் பேரில் பிரகாஷ் ராஜ் கைது செய்யப்படுகிறார். இது நான்காவது சம்பவம்.
சென்னையில் கேபிள் ராஜாவாக சிம்புவும், அவரது நண்பராக சந்தானமும் வருகிறார்கள். சிம்பு குப்பத்தில் வாழ்ந்தாலும், தான் பணக்காரனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு திரிகிறார். இவரது பணக்காரக் காதலியாக புதுமுகம் ஜாஸ்மின் பாஸின். அழகால் நம்மை வளைக்கிறார்.
விடிந்தால் நியூ இயர். அதனைக் கொண்டாட பணம் வேண்டும். அதற்காக சிம்பு சில்லறை திருட்டில் ஈடுபட முயற்சிக்கிறார். முயற்சி தோல்வியுறவே போலீஸிடம் சிக்குகிறார். இது ஐந்தாவது சம்பவம்.
அடுத்து என்ன என்று பார்க்கையில் வருகிறது இடைவேளை...
இந்த ஐந்து கேரக்டர்களும் பஞ்ச பூதங்களின் அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாம். ஒவ்வொருவரும் தங்களது பாத்திரம் உணர்ந்து கலக்கியிருக்கிறார்கள். இந்த ஐந்து கேரக்டர்களும் படத்தின் இறுதியில் ஒரு மருத்துவமனையில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களுக்காக சில வேலைகளைச் செய்கிறார்கள். மருத்துவமனையில் சந்தித்துக்கொள்ளும் வேளையில் அங்கே திடீர் திருப்பம் நிகழ்கிறது. அங்கே தீடீரென்று வரும் தீவிரவாதிகள் மருத்துவமனையை சூறையாட முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரும் தப்பினார்களா இல்லையா என்பதை க்ளைமாக்ஸாக்கியிருக்கிறார்கள்.
தீவிரவாதம், பகட்டு, அதிகார வெறி, சுயநலம், அறியாமை, இயலாமை போன்று இந்த உலகத்தில் ஊடுறிவிப்போன விஷயங்களை நன்றாக சொல்லி இருக்கிறார். தற்கால சினிமாவில் ஒரு சிறிய விஷயத்தை எடுத்து அதை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் மனித முதிர்ச்சிக்கு இதுவரை கிட்டாத விஷயங்களை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குநர்.. அதை நெஞ்சுருகும் விதத்தில் கொடுத்தும் உள்ளார்.
ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தை, அனுஷ்கா கூட வரும் அரவாணி, லாரி ஓட்டுற சிங், கடைசியாக டிராக்டர் நம்பர் பிளேட்டில் கணக்கு போடும் சிறுவன் என்று ஒவ்வொரு விஷயங்களையும் நன்றாக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் இயக்குநர்.
நடிப்பு சொல்லவே தேவையில்லை.. சிம்பு, பரத். பிரகாஷ்ராஜ், சரண்யா, அனுஷ்கா என்று எல்லாரும் கதைக்குள்ள ஒன்ற வைத்துவிட்டனர். தமிழ் சினிமாவின் மசாலா பாணி பல இடங்களில் தெரிந்தாலும், அது நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.
படம் முழுக்க சிம்பு தெரிவதுதான் சிம்பு பட வழக்கம். ஆனால் இதில எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கு.. இப்படி ஒரு கதையை தனக்காக தேர்ந்தெடுத்த சிம்புவின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்! சிம்பு மாறிவிட்டார் என்பதே எத்தனை பெரிய சந்தோஷம்...
இசையில யுவன் பிச்சிட்டாரு. அதுவும் 'வானம்...' பாட்டு ஒவ்வொரு முறை ஒலிக்கும் போது அது மனசை தொடுகிறது. நீரவ் ஷாவின் கேமராவைக் கவனிக்க முடியாத அளவிற்கு கண்கள் சில நேரம் கலங்கி போகிறது. அதிலயும் திருடிட்டு போன காசை சிம்பு மறுபடியும் கொடுக்கிற காட்சி அற்புதம்...
பிள்ளைய காணாம்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தா பொண்டாட்டியையும் தொலைச்சுட்டு போற இடம்டா இது என்று போலீஸ் ஸ்டேஷன் பற்றி தயாரிப்பாளர் விடிவி கணேஷ் கொடுக்கும் வர்ணனை அபாரம். (படம் ஹிட்டுன்னா வசனகர்த்தாவுக்கு ஒரு மோதிரம் போடுங்கப்பா..) அப்புறம் இன்னொரு வசனம்... டீ யை விட கப்பு சூடா இருக்கு!?
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு நச். முக்கியமாய் ஆரம்ப சேசிங்க் காட்சியில் எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் போட்டிப் போடுகின்றன. 'எவன்டீ உன்னை பெத்தான்...' பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். யுவனின் இசையில் எவன்டீ பாடலும், இன்னொரு பாடலும், ஒரு குத்துப் பாட்டும் அதிர வைக்கிறது. பின்னணியிசை ஓகே.
படத்தில் குறைகள் இருக்குது... ஆனால் அதை க்ளைமாக்ஸிற்காக கண்டுக்காம விடலாம். 'அன்பே சிவம்', 'ரங் டீ பஸந்தி' (ஹிந்தி) போன்ற படங்களின் கிளைமாக்சிற்கு நிகரான நெஞ்சைத்தொடும் க்ளைமாக்ஸ்...
வானம் - வானவில்!

நன்றி கூடல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum