சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அவர்களும் இவர்களும் - Avarkalum Ivarkalum Khan11

அவர்களும் இவர்களும் - Avarkalum Ivarkalum

Go down

அவர்களும் இவர்களும் - Avarkalum Ivarkalum Empty அவர்களும் இவர்களும் - Avarkalum Ivarkalum

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 2:03

அவர்களும் இவர்களும் - Avarkalum Ivarkalum Avarkalum-ivarkalum-638

காதலர்களின் வாழ்க்கையை சாதி-மத சுனாமி புரட்டிப்போட்டாலும், காதல் அவர்களை நிமிரச்செய்து, நம்பிக்கை கொடுத்து வழி நடத்துகிறது என்பதை சொல்லும் கதை.
விமல் நடராஜன், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன். இவருக்கும், அந்த ஊரிலேயே பெரும்புள்ளியான மாணிக்க விநாயகத்தின் மகள் சுப்ரஜாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிந்ததும், சுப்ரஜாவின் அண்ணன்கள் கொலைவெறியுடன் காதலர்களை துரத்துகிறார்கள்.
காதல் ஜோடி ரெயிலில் தப்பிச் செல்கிறார்கள். இந்த ஜோடியும், இவர்களைப்போலவே ஊரைவிட்டு ஓடிவந்த சதீஷ்-ஐஸ்வர்யாவும் அதே ரெயிலில் சந்தித்துக்கொள்கிறார்கள். இரண்டு ஜோடிகளும் நாகர்கோவிலில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த சுப்ரஜாவின் அண்ணன்கள் மறுபடியும் துரத்துகிறார்கள்.
ஒரு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காதல் ஜோடிகள் மீது ரெயில் மோதுகிறது. இந்த விபத்தில் சதீஷும், சுப்ரஜாவும் பலியாகிறார்கள். விமல் நடராஜனும், ஐஸ்வர்யாவும் உயிர் தப்புகிறார்கள். இரண்டு பேரின் எதிர்காலமும் என்ன ஆகிறது? என்பது மீதிக்கதை.
விமல் நடராஜன்-சுப்ரஜா ஜோடியில் குட்டிப் பெண் சுப்ரஜாவின் அழகு மிகவும் எடுபடுகிறது. ஆனால் செருப்பு தைக்கும் விமல் நடராஜனுக்கும், ஊரில் பெரிய பணக்கார அப்பாவும், சின்னத்தம்பி அண்ணன்களும் உள்ள சுப்ரஜாவுக்குமான காதல் வளர்ந்ததில் டெப்த் இல்லாததால் நாடகத்தனம் அதிகம். அவ்வப்போது இயக்குநர் வேறு சம்மந்தமேயில்லாமல், விமல் நடராஜனின் தங்கையின் மூலம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் பற்றியும், உயர்ஜாதி, கீழ் ஜாதிப் பற்றியெல்லாம் அப்பாவின் கேரக்டர் புரட்சி பற்றி பேசுவது படு அபத்தம். பணம் சம்பாதித்து செட்டிலாகி விட்டு திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று திருட்டுத்தனமாய் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது காதல் ஜோடிகள் மாட்டுவதும், அதன் பொருட்டு தப்பித்து ஓடுவது அருமை. ஆனால் அதே நேரத்தில் லெதர் டெக்னாலஜி படித்துவிட்டு சிங்கப்பூரில் வேலைக்கு சேரும் அளவிற்கு வளர்ந்திருக்கும் விமல் நடராஜன், நாகப்பட்டினம் வந்து, கல்யாண வேலைக்கு செல்வது, என்பதெல்லாம் கற்பனை வறட்சி.
இன்னொரு ஜோடி சதீஷ்-ஐஸ்வர்யா, பணக்காரப்பெண் அவளின் ட்ரைவர் காதல் ஜோடிகள். இவர்கள் தொலைந்ததிலிருந்து ஐஸ்வர்யாவின் அப்பா இவர்களைப் பற்றி தேடியதாகவே காட்சிகள் ஏதுமில்லை. க்ளைமாக்ஸில் கூட அவர் ஐஸ்வர்யா கூப்பிட்டுத்தான் வருகிறார். 'அழகி' படத்தில் சிறு வயது பார்த்திபன் கேரக்டரில் வந்தவர்தான் இந்த சதீஷ், இந்த கேரக்டருக்கு நன்றாக சூட் ஆகிறார். இருந்தாலும் இவர் கேரக்டருக்கு விமல் நடராஜனை போட்டிருக்கலாம். இன்னும் கொஞ்சம் மெச்சூர்டாக இருந்திருக்கும்.
அடர்ந்த காடுமேடுகளில் காதலர்கள் ஓட, வில்லன்கள் துரத்த-விறுவிறுப்பாக தொடங்குகிறது, படம். நாகர்கோவிலில் மறைந்து வாழும் காதல் ஜோடி, டி.வி.யில் முகம் காட்டுவது, ஏற்கக்கூடியதாக இல்லை. டி.வி.யில் முகம் காட்டினால் நம்மை கண்டுபிடித்துவிடுவார்கள் என்று படித்த காதலர்களுக்கு தெரியாதா என்ன?
அடிபட்டு படுக்கையான தன்னை மருந்து மாத்திரைகளால் கவனித்துக்கொள்ளும் விமல் நடராஜன் மீது ஐஸ்வர்யா ஈர்ப்பாவது கவித்துவம். காதலர்களுக்கு உதவும் சார்லி அழுத்தம் பதிக்கிறார். செருப்பு தைக்கும் தொழிலாளியாக வரும் ஜி.எம்.குமார் பணத்தை சம்பாதிச்சிட்டு யாரை வேணும்னாலும் திருமணம் செய்து கொள் என்று மகனுக்கு உபதேசம் செய்யும் போது பாசமான தந்தையாய் பளிச்சிடுகிறார்.

முரட்டு அண்ணனாக வரும் தயாரிப்பாளர் கேப்டன் காமராஜுக்கு வலுவான பாத்திரம். இயக்குநர் அகத்தியன் டாக்டராக வருகிறார். சார்லி, மாணிக்க விநாயகம் கேரக்டரும் கச்சிதமாய் செதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் இசையும், அகர் செங்குட்டுவனின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம்! பின்னணி இசையும், பழைய பாணி இயக்கமும் பலவீனம்! மற்றபடி ரயிலிலேயே தொடங்கி, ரயிலிலேயே முடியும் இந்த படத்திற்கும் ஒரு ரயில் விபத்தே திருப்புமுனையாக அமைந்திருப்பதும், இயக்குநரின் அனுபவ அறிவை பறைசாற்றுகின்றன.
அவர்களும் இவர்களும் - விபத்து!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum