சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

பதினாறு - Pathinaru Khan11

பதினாறு - Pathinaru

2 posters

Go down

பதினாறு - Pathinaru Empty பதினாறு - Pathinaru

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 2:15

பதினாறு - Pathinaru Pathinaru-623


காதல் என்றால் பொய், ஏமாற்று வேலை என ஒரு வாதம் இருந்து கொண்டே இருக்கும். இன்னொரு வகையில், காதல் என்றால் உண்மை, கடவுள் போன்ற வாதமும் இருக்கும். உண்மைக் காதல் என்றுமே தோற்காது என ஒரு சாரார் கூறுவார்கள். காதலர்கள் தோற்றாலும், காதல் என்றுமே தோற்காது என ஆண்டாண்டு காலமாகக் கூறுவார்கள். இவை எல்லாவற்றையும் மையப்படுத்தி தமிழ் சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்து போயிருக்கின்றன. அப்படியான கதைக் களத்துடன் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'பதினாறு'.
சிவா - மது ஷாலினி காதலர்கள். சாதாரண பள்ளி, கல்லூரி காதல் தான். தனியாகச் சந்திப்பது, சுற்றுவது என அவர்களது கல்லூரி நாட்கள் கழிகின்றன. பெண்ணின் பெற்றோர்களுக்கு இவர்கள் காதல் பிடிக்கவில்லை. காதல் பொய்யானது என்ற கருத்தை எடுத்துரைத்து மனதை மாற்ற முயல்கிறார்கள். முடியாது போகவே 'பதினாறு' என்ற ஒரு கதைப் புத்தகத்தை (டைரி) இருவருக்கும் வாசிக்க கொடுத்து, 'இப்படித் தான் காதல் இருக்கும்' என தெளிவு படுத்துகிறார்கள்.
டைரியில் இருக்கும் கதை ஒரு அழகான கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத்தின் பெரும்பகுதி அங்கேயே நகர்ந்து விடுகின்றது. அந்த கிராமத்திலும் ஒரு அழகான காதல் கதை உண்டு. அந்த கதையை படித்த பின்பும் மனம் மாறாத சிவா, அந்த கதையில் இடம்பெற்ற பாத்திரங்களைத் தேடிப் புறப்படுகிறார். அவ்வாறு புறப்பட்ட சிவாவிற்கு கிடைத்த விடை என்ன? எத்தனையோ காதல் கதைகள் இருந்தும் பதினாறு கதையை மது ஷாலினியின் அம்மா இந்த ஜோடியிடம் படிக்கக் கொடுக்க காரணம் என்ன? சிவா - மது காதல் கடைசியில் கைகூடியாதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இனிமையாகவும், இளமையாகவும் விடையளிக்கிறது படத்தின் மீதிக்கதை!
'சிவா என்றாலே சிரிப்பு' என்று சொல்லும் அளவுக்கு பேர்வாங்கிய அதே சிரிப்பு கதாநாயகன் சிவாதான் இதே படத்திலும் பிரதிபலிக்கிறார். மச்சான் மச்சான் என்று காதலியை செல்லமாக அழைக்கும் சிவாவுக்கு ஆங்காங்கே அவருக்கே உரித்தான நையாண்டித்தனமும், நக்கலும் வெளிப்பட்டாலும் படத்தின் இயல்பு மாறாமல் நகரத்து காதலராக நடித்திருக்கிறார். சிவா-மது ஷாலினியின் காதல் இனிப்பு என்றால், கிராமத்து காதல் கோடியான வினிதா, கிஷோர் காதல் ஆந்திர காரத்தையே மிஞ்சும் அளவுக்கு அமைந்திருக்கிறது.
மது ஷாலினியின் நடிப்பும், முகமும் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பிடிக்க தேவையான தகுதிகள்.
அப்புறம் அந்த ப்ளாஷ்பேக்.. (புதுமுகங்கள் வினிதா, கிஷோர்) டென்த் படிக்கிற வயசு. மனசு முழுக்க கிளைடாஸ்கோப் கொட்டி ரசிக்கிறார்கள் இருவரும். இளவரசிக்கு ஐ, கோபிக்கு ஜி என்று அடையாளம் கொள்ளும் கோபி, சுவர் முழுக்க 16... 16 என்று எழுதிவைக்க, இந்த 6 என்பது ஆங்கில எழுத்தான ஜி என்பதே அப்புறம்தான் விளங்குகிறது! ஒரு காட்சியில் முறைப் பையனோடு பைக்கில் போகும் வினிதா தென்னை மரங்களில் எழுதப்பட்டிருக்கும் நம்பர்களில் ஒன்றான 16 ஐ பார்த்து பரவசப்படுவது விசிலடித்து ரசிக்க வேண்டிய விஷூவல்!
கோபத்தில் கடுகடுப்பாகும் வினிதா, தன் குடும்பத்தையே எதிர்த்துக் கொண்டு செய்கிற அட்டகாசங்கள் ஒவ்வொன்றும் பயங்கரம். நேரில் பார்க்கிற ரசிகர்கள் நாலு அறை விட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. அவன் சம்பாத்தியத்துல ஒரு துணி மணி கூட வாங்கி தர முடியாது என்ற ஒற்றை வார்த்தைக்காக கோவிலுக்குள் புகுந்து கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்துப்போடும் அவளது கோபம் இவள் பெண்ணா, பேயா என்றே கலங்க வைக்கிறது.
வினிதாவின் காதல் தாண்டவத்தை பார்த்து படபடக்கும் அப்பாவாக நடித்திருக்கும் பத்திரிகையாளர் குணாவின் நடிப்பு சிறப்பு. எல்லை மீறி அட்டகாசம் செய்யும் பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கி தவிப்பதை தனது பாடிலேங்குவேஜ் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பலே வாங்கிச்செல்கிறார்.
சின்னத்திரை நடிகர், இயக்குநர் அபிஷேக், 'கனாக்காணும் காலங்கள்' புகழ் பாண்டி உள்ளிட்ட சிலரும் வருகிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும் கஸ்தூரியின் கதாபாத்திரம் பலமாக மனதில் நிற்கிறது.
இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?
பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.
அச்சு அசலான கிராமம். அங்கு அச்சுவெல்லத்தை விளைய வைத்த மாதிரி வசனங்கள் என்று கவனிக்க வைத்திருக்கிறார் வசனகர்த்தா மகாலிங்கம்! கிராமம், நகரம் என்று எல்லா திசைகளிலும் நமது கையை பிடித்துக் கொண்டு நடக்கிறது யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை. பாடல்களும் இனிமை. அருள்தாசின் ஒளிப்பதிவில் கிராமம் குளுமை.
ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டாரே!
பதினாறு - பருவக் கோளாறு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பதினாறு - Pathinaru Empty Re: பதினாறு - Pathinaru

Post by Atchaya Fri 29 Jul 2011 - 2:25

@.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum