சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

எண்ணங்கள்  Khan11

எண்ணங்கள்

Go down

எண்ணங்கள்  Empty எண்ணங்கள்

Post by Atchaya Sat 30 Jul 2011 - 5:49

ஒளவைப்பாட்டி தமிழ் வளர்த்த புலவர்களில் சிறந்தவர். அவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்புடையாதாக நீதியை ஒழுக்கத்தை எளிமையாக கூறுகிறார்.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என பலபாடற் தொகுப்பினை எமக்களித்துள்ளார். அவர் இளமையை அழகை வெறுத்து முதுமை வரம் வேண்டிப் பெற்றவர். இறையன்பு நிரம்பப்பெற்ற அவர் முருகன் மீது மாறாத பக்தியும் அன்பும் கொண்டு முருகனுக்கே, 'ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவன் இல்லை' எனக்கூறினார். 'ஞானப்பழமே' என்று அழைத்து, 'தமிழ் ஞானப்பழம் நீ' என உரைத்து அம்மையப்பன் உனது உயிர்ப்பிரம்மம் எனத்தெளிவித்தவர்.

தாயும், தந்தையும் குழந்தைகளுக்கு முதலில் தெரியும் உயிர்கள் ஆவார்கள். ஒளவையார் எமக்களித்த நீதி நூற்பாடலாகிய கொன்றை வேந்தனில் இக்கருத்துப்பட முதற்பாடலில் 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று ஒருபடி மேலே அவர்களை உயர்த்திச் சொல்கிறார்.

எமக்கு உயிர்கொடுத்து கருவாக்கி சுமந்து உருவாக்கி பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள் எம் பெற்றோர், அதனால் முதலில் அறிந்து வணங்க வேண்டியவர்கள் மாதாவும், பிதாவும் எனக்கூறியுள்ளார். ஆத்திசூடி பாடலில் ஒருவரி, 'தந்தை தாய் பேண்', இதற்கு அவரது கருத்து தாய்தந்தையரை எப்பொதும் போற்றிக் காக்க வேண்டும் என்கிறார்.



அடுத்ததாக மூதுரையில் எம்மைக்கவர்ந்த பாடல் ஒன்று

"சந்தனமென்குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று"

சந்தனக்கட்டை எவ்வளவு தான் தேய்ந்து சிறுத்து போனாலும் சுகந்த மனம் தருவதில் குறைந்து போவதில்லை. அதுபோல் நாடாளும் மன்னர் செல்வம் இழந்து வறுமையில் அகப்பட்டாலும், தன் கொடையில் குறைய மாட்டார்கள். எந்நிலையிலும் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து வாழ்வை வளம் படுத்த மனது சுருங்காதவராய் இருப்பர். அது போல் தாய்தந்தையர் சந்தனக்கட்டை தேய்ந்தாலும் வாசம் வீசுவது போல், பாசம் காட்டி வளப்பர்.

தாம் வருந்தி உழைத்து குழந்தைகள் மீது கருணையும் அன்பும் குறையாது வழங்கி, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வர். அதிலும் தந்தை பங்கு அளப்பரியது. தன்னிலும் அறிவு நிரம்பப் பெற்றவராய் அதிக பொருளீட்டக்கூடிய நல்ல தொழில் செய்யத் தெரிந்தவராய் அதன் மூலம் கிடைக்கக்கூடிய இன்பத்தை பெறவேண்டும், என்பிள்ளை என தந்தை உள்ளம் விரும்பும். ஒரு அன்பு நிறைந்த தந்தையால்தான் அதை நிறைவேற்றமுடியும்.

தந்தை தனது வருமானம் போதாது இருந்தாலும் வறுமையில் வாடினாலும் பிள்ளைகள் தேவையை நிறைவேற்றுவார்கள். எப்பாடுபட்டாலும் தமது சக்திக்கு மீறி எதையும் இழக்கவும் தயாராகுவார்கள். தந்தை தாய் பாசம் இல்லாதவர்க்கு புரியும். இருப்பவர்க்கு அருமை தெரியாது. நாடாளும் மன்னன் ஆனாலும் வீடாளும் குடிமக்களானாலும் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர்களாக எக்குறையும் இன்றி காத்திடுவர்.

வாசமும் பாசமும் வீசுதலில் ஒப்புயர்வானவர்கள் சந்தனமரத்திற்கு ஒப்பிட்டு தாய்தந்தையர்களை கூறுகிறார்கள். அதுதான் சுவாமி சிலைகளுக்கு சந்தன அலங்காரம் அபிஷேகம் எல்லாம் செய்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. குளிர்ச்சியும் வாசமும் தரும் சந்தனம். அதுபோல் குளிர்ந்த பாசம் அது அன்னை தந்தையிடம் பெறலாம்.

அடுத்து நல்வழிப்பாடலிலும் எம்மைக் கவர்ந்த பாடல்

"உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண்புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துனையும் சஞ்சலமே தான்"

ஒருவேளையில் உண்ண முடிந்தது நாழி அரிசி சோறு மட்டுமே. உடுப்பது நான்கு முழ ஆடை மட்டுமே. ஆனால் எண்பது கோடி செயல்களை பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான மனிதர்களின் வாழ்க்கை சுடாத மண்பாத்திரம் குழைந்து வடிவம் மாறுவதுபோல், வடிவம் மாறி மாறி இறக்கும் வரை துன்புற்றுக் கொண்டே இருக்கிறது.

எமது எண்ணங்களை எம்மால் கட்டுப் படுத்த முடியாது, சஞ்சலமடைகிறோம். ஆகவே நல்லெண்ணங்களை மனதில் நினைந்து ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு முதல் இடம் அளித்து, வாழ்வை வளம் பெறச்செய்வோம்.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum