சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இன்றய ஹதிஸ் (31-07-2011) Khan11

இன்றய ஹதிஸ் (31-07-2011)

Go down

இன்றய ஹதிஸ் (31-07-2011) Empty இன்றய ஹதிஸ் (31-07-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 31 Jul 2011 - 6:50

“புராக்”1 எனக்காக கொண்டுவரப்பட்டது. (“புராக்” என்பது) வெண்மையானதாகவும், கழுதையைவிட பெரியதாக - நீண்டதாகவும், கோவேறு கழுதையைவிட சிறியதாகவும் உள்ள ஒரு பிராணியாகும். அதன் (மறு) ஓரம் முடிவடைகின்ற இடத்தில் அதன் பாதத்தை வைக்கும். அதன்மீது நான் ஏறி (அமர்ந்து) பைத்துல் முகத்தஸை வந்தடைந்தேன். நபிமார்கள் தங்கள் வாகனங்களை எந்த வளையத்தில் கட்டுவார்களோ அந்த வளையத்தில் கட்டினேன். அதன்பின்னர் அப்பள்ளியினுள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு வெளியேறினேன். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதுவை ஒரு பாத்திரத்திலும் பாலை ஒரு பாத்திரத்திலும் என்னிடம் கொண்டு வந்தனர். நான் பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இயற்கையை 2தேர்ந்தெடுத்தீர் எனக் கூறினார்கள். பிறகு நம்மை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தின் பால் உயர்த்தினார். வானத்தை அடைந்த அவர் (கதவை) திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். என்னை (ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) வரவேற்று எனக்காக நல்லவைகளுக்காக பிராத்தித்தனர்.

அதன்பிறகு எங்களை இரண்டாவது வானத்தின் பால் அவர் உயர்த்தினார். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திறக்குமாறு வேண்டினார். “நீ யார்? ” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் சிறிய தாய்வழி மக்களாகிய ஈசாபின் மரியம், யஹ்யாபின் ஜக்கரியா அவர்களுடன் இருக்கிறேன். அவ்விருவரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காக பிராத்தித்தனர்.

அதன் பிறகு எங்களை மூன்றாவது வானத்தின் பால் உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கேட்டார்கள். “நீர் யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனவும் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களின் பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அப்போது நான் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். உலகத்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட அழகில் சரிபாதியை கொடுக்கப்பட்டவராக இருந்தார். எனக்கு வரவேற்பு கூறி எனக்காக-சிறந்தவைகளுக்காக-பிராத்தித்தனர்.

அதன்பிறகு நம்மை நான்காவது வானத்தின் பால் அவர் (ஜிப்ரீல்) உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனவும் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். அவர்களின் பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி அனுப்பபட்டது என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அப்போது நான் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக-சிறந்தவைகளுக்காக-பிராத்தித்தனர். வல்ல அல்லாஹ் “உயர்வான ஸ்தானத்திற்கு அவரை (இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை) உயர்த்தி இருக்கின்றோம்” எனக் கூறினாhன்.

நம்மை ஐந்தாவது வானத்தின் பால் உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக சிறந்தவைகளுக்காக பிராத்தித்தனர்.

அதன்பிறகு ஆறாவது வானத்தின் பால் நம்மை உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “இவர் யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” என்றார். “அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கூறி நன்மைக்காக பிராத்தனை செய்தார்கள்.

அதன்பிறகு ஏழாவது வானத்தின் பால் அவர் எங்களை உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “இவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவருக்காக அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அழைப்பு(அனுமதி) வழங்கப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். பைத்துல் 3மஃமூரின் பால் அவர்கள் முதுகை சாய்த்தவர்களாக இருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டினுள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்கு (அமரர்கள்) நுழைகிறார்கள். அதன்பால் ஒரு தடவை நுழைந்தவர் மீண்டும் நுழைவதில்லை. ( அவர்கள் திரும்புவதில்லை). பிறகு சித்தரத்துல் 4முன்(த்)தஹா வின்பால் என்னை கொண்டு சென்றார். அப்போது அதன் இலைகள் யானையின் காதுகளை போல் இருந்தது. அதன் பழங்கள் பெரிய பானைகள் போன்று இருந்தன. அல்லாஹ்வின் கட்டளையின் நிமித்தம் அதைச் சூழ வேண்டியது சூழ்ந்து கொண்டபொழுது அது மாறிவிட்டது. அதன் அழகைப்பற்றி அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் வர்ணித்து சொல்ல சக்தி பெற மாட்டார்.

என்பால் எதை அறிவிக்க வேண்டுமோ அதை அல்லாஹ் அறிவித்தான். ஒவ்வொரு இரவிலும், பகலிலும் ஐம்பது தொழுகைகளை என்மீது அவன் கடமையாக்கினான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பால் நான் இறங்கினேன் “உமது உம்மத்தினர் மீது உமது இரட்சகன் எதைக் கடமையாக்கினான்?” எனக் கேட்டார்கள். (ஒவ்வொரு இரவுபகலுக்கும்) ஜம்பது தொழுகைகள் என்றேன் (அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) “உமது இரட்சகனின் பால் திரும்பிச் சென்று குறைக்குமாறு கேட்பீராக!. நிச்சயமாக உமது உம்மத்தவர் அதற்கு சக்தி பெறமாட்டார்கள். காரணம் நிச்சயமாக நான் இஸ்ரவேலர்களின் மக்களை சோதித்தேன். அதில் நான் தோல்வியடைந்தேன்” எனக் கூறினார்கள். எனது இரட்சகன்பால் திரும்பி எனது இரட்சகா! எனது உம்மத்தவர்களுக்காக குறைப்பாயாக! எனக் கூறினேன். எனக்கு ஐந்தைக் குறைத்தான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பால் திரும்பி “எனக்கு ஐந்து குறைக்கப்பட்டது” என்றேன். “நிச்சயமாக உமது உம்மத்தவர் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்” எனக் கூறி “உமது இரட்சகனின் பால் திரும்பிச் சென்று குறைக்குமாறு கேளுங்கள்” என்றார்.

உயர்வான அபிவிருத்திகளை நல்கும் எனது இறைவனுக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மத்தியில் திரும்ப திரும்பச் சென்றேன். இறுதியாக அவன் (மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்) முஹம்மதே! நிச்சயமாக ஒவ்வொறு பகலிலும், இரவிலும் ஐந்து தொழுகைகள் ஆகும். ஓவ்வொறு தொழுகைக்கும் பத்து உண்டு அதுதான் ஐம்பது. யாராவது ஒரு நன்மையை(நன்மையான காரியத்தை) எண்ணி, அதை செய்யாவிட்டாலும் கூட அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். அதை அவர் செய்துவிட்டால் அதற்காக அவருக்கு பத்து (நன்மைகள்) எழுதப்படும். ஒருவர் ஒரு தீமையை நாடி (பின்னர்) அதை செய்யாமல் விட்டுவிட்டால் அவர்மீது எதையும் எழுதப்பட மாட்டாது. அவர் அதை (அத்தீமையை) செய்து விட்டால் ஒரு தீமை மட்டுமே எழுதப்படும் எனக் கூறினான். அதைப்பெற்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இறங்கினேன். அவர்களிடம் விஷயத்தை கூறினேன். அதற்கவர், “மீண்டும் உங்கள் இரட்சகனிடத்தில் சென்று குறைக்க கேளுங்கள்” என்றார்கள். “எனது இரட்சகனிடத்தில் வெட்கப்படும் அளவுக்கு நான் திரும்பிவிட்டேன்” என்பதாக அவரிடம் கூறினேன் என்பதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

1. “புராக்” என்னும் சொல் “பர்க்” என்பதிலிருந்து ஈண்டு எடுக்கப்பட்டதாகும். பர்க் என்றால் மின்னல் என்பது பொருளாகும். இவ்வாகனம் மின்னல் போன்று மிகத் துரிதமாக பாய்ந்து செல்லக்கூடிய நிலையை அல்லாஹ் அதற்கு நல்கி இருந்தான். மக்கள் மத்தியில் படம் பிடித்து வைக்கப்பட்டுள்ளதைப் போன்றதல்ல.

2. இஸ்லாமிய மார்க்கத்தையும், அதன்மீது நிலைத்து இருப்பதையும் என்ற கருத்தே “ஃபித்ரத்” இயற்கை என்பதற்குரியதாகும். ஷரஹ்நவவீ பாகம் 2, பக்கம் 212

3. பைத்துல் மஃமூர்: ஏழாவது வானத்தில் பூமியில் உள்ள திருக்கஃபாவை போன்ற ஒரு வீடு உள்ளது. அதன் பெயர் “பைத்துல் மஃமூர்” ஆகும்.

4. சித்ரத்துல் முன்(த்)தஹா சித்ரத் என்பதற்கு இலந்தை மரம் என்பது பொருளாகும். முன்(த்)தஹா என்பதற்கு கடைசி எல்லை - முடிவு - என்பது பொருளாகும்.

நபிமார்கள் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது பற்றி பாடம்

ஹதீஸ் எண் : 77

“மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பள்ளத்தாக்கிற்கு அருகாமையில் நடந்து கொண்டிருந்தோம். “இது என்ன பள்ளத்தாக்கு?” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நீல நிறப்(அஜ்ரக்) பள்ளத்தாக்கு என நாங்கள்(ஸஹாபாக்கள்) கூறினோம். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிறம், அவர்களின் முடியைப்பற்றிக் கூறினார்கள். (தாவூத் என்ற ஹதீஸ் அறிவிப்பவர் அதை மனனம் செய்யவில்லை) அல்லாஹ்வின் பால் “தல்பிய்யா” கூறுவதனால் உயர்ந்த சத்தம் உடையவர்களாகவும், அவரது இரு விரல்களை தனது காதில் வைத்தவராகவும் இந்த பள்ளத்தாக்கில் நடப்பவராக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிச்சயமாக நான் உற்று நோக்குபவனை போன்று இருக்கிறேன். எனக் கூறினார்கள்.

அதன் பிறகு ஒரு கீழப்பகுதிக்கு வந்தோம். இது எந்த கீழ்ப்பகுதி என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்க ஹர்ஷா என்ற ( மதீனாவுக்கும், ஷாம் நாட்டுக்கும் இடையிலுள்ள) ஒரு மலைப்பகுதி என்றோம். அல்லது “லஃப்து” என்றோம்.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக கம்பளி ஜிப்பா அவர்கள் மீ(தனிந்)திருக்க, அவர்களின் ஒட்டகக்கயிறு ஈச்சம்பாளை நார் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க, அது தொய்வாக விடப்பட்ட நிலையில், இந்தப் பள்ளத்தாக்கில் “தல்பிய்யா” கூறியவர்களாக நடந்து கொண்டிருக்க, நான் உற்றுநோக்குபவனை போன்று இருக்கிறேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum