சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Khan11

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

5 posters

Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:01

நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?

o நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

o பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்

o நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது

o ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:02

நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து

கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?

கேள்வி : நோன்பு வைத்திருக்கின்ற கணவன் நோன்பு வைத்திருக்கின்ற மனைவியிடம் நடந்து கொள்ளக் கூடிய அனுமதிக்கப்பட்டவைகள் யாவை?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ஷெய்க் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதில் கூறினார் :
கடமையான நோன்பு வைத்திருக்கின்ற ஒருவர், தன்னுடைய விந்து வெளியாகும் அளவுக்கு தன்னுடைய மனைவியிடம் (நெருக்கம் கொள்வதற்கு) அனுமதிக்கப்பட்டவரல்ல. உச்சகட்டத்தை அடைவதென்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு உடனடியாகவும், இன்னும் சில நபர்களுக்கு மெதுவாகவும், தங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த நபிமொழியில், ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமையுள்ளவர்களாக இருந்தார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

சில நபர்களுக்கு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, விரைவாக விந்தினை வெளியேற்றி விடுவார்கள். இத்தகைய நபர்கள் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருக்கக் கூடாது, கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவளைத் தொடலாம், முத்தமிடலாம் இன்னும் இது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் அறிந்திருப்பாரென்றால், கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவன் அவளை முத்தமிடலாம், கட்டி அணைக்கலாம், ஆனால் உடலுறவு கொள்வதனின்றும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ரமளான் மாதத்தில் பகல் வேளைகளில் மனைவியிடம் உடலுறவு கொள்வது என்பது ஐந்து தவறுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது :

o பாவமானது

o நோன்பை முறித்து விடும்

o மீதி இருக்கின்ற பகல் காலங்களில் எதனையும் உண்ணாதிருத்தல் வேண்டும். இஸ்லாமிய சட்ட வரையறைகளுக்குள் தடை செய்யப்படாத நிலையில் நோன்பை முறித்து விட்டாலும், அவர் மீதமிருக்கின்ற பகல் காலங்களில் உண்ணாதிருத்தல் வேண்டும். மீண்டும் அந்த நோன்பை மறுபடியும் நோற்க வேண்டும்.

o கடமையாக்கப்பட்டதொரு கடமையை அவர் மீறி விட்டதன் காரணமாக, அந்த நாளை மறுபடியும் நோன்பு நோற்றாக வேண்டும்.

o அதற்குப் பரிகாரமும் செய்ய வேண்டும், இது அவருக்கு மிகவும் சுமையானதொரு பரிகாரமுமாகும். அவர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில் அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில், அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
அது கடமையான நோன்பாக இருந்து, ரமளான் அல்லாத நாட்களில் அதனை நோற்கிறீர்கள் என்றால் - அதாவது ரமளானில் விடுபட்ட நோன்பு அல்லது பரிகாரமாக நோற்கப்படும் நோன்பு போன்றவைகள், இதனை முறித்து விட்டால் அது இரண்டு விஷயங்களைக் கொண்டு முடியும்:

அதாவது பாவமானதும், இன்னும் மீண்டும் அதனை நோற்க வேண்டியதும் அவசியமாகும். இன்னும் அது விருப்பத்துடன் நிறைவேற்றப்படும் நஃபிலான நோன்பாக இருந்தால், இன்னும் அதனை நோற்றிருக்கின்ற நிலையில் உடலுறவில் ஈடுபட்டு விட்டால், அதனை மீண்டும் நோற்க வேண்டியதில்லை, பரிகாரமும் செய்யத் தேவையில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:02

நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய

மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

கேள்வி : நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?

எல்லாப் புகழும் வல்ல இறையோனுக்கே..!

ஆம், அனுமதிக்கப்பட்டதே. நோன்பிருக்கும் நிலையில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருந்து கொள்ள அனுமதியிருக்கின்றது, (அதாவது) அவர்கள் இருவரும்உடலுறவில் ஈடுபடாமலும் அல்லது விந்து வெளியாகாமலும் இருக்கும் வரையிலும் (இந்த அனுமதி பொருந்தும்). புகாரீ (1927) மற்றும் முஸ்லிம் (1106) ல் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்திருப்பதாவது, ''நோன்பிருக்கும் நிலையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை முத்திமிட்டார்கள்,
இன்னும் என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். இன்னும் உங்கள் அனைவரிலும் அவர்கள்

தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிகம் இயலுமானவர்களாக இருந்தார்கள்.''

அல் சிந்தி அவர்கள் கூறுகின்றார்கள் : மேற்கண்ட நபிமொழியில் இடம் பெற்றிருக்கின்ற வார்த்தையான 'யுபாஷிர்" (அதன் மொழி பெயர்ப்பு நெருக்கமாக) என்பதன் அர்த்தமானது, மனைவியின் தோல் கணவனையும் மற்றும் கணவனின் தோல் மனைவியையும் ஒட்டிக் கொண்டு நெருக்கமாக இருப்பது, அதாவது அவனுடைய கன்னத்தை இவளுடைய கன்னத்தோடு கன்னம் வைத்திருப்பது, இன்னும் இது போன்றவைகள். இங்கே குறிப்பாக தெரியவருவது என்னவென்றால் தோலோடு தோல் ஒட்டியிருப்பது தானே ஒழிய, உடலுறவில் ஈடுபடுவதல்ல.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:02

பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்

கேள்வி : நோன்பின் பொழுது ஒருவர் தன்னுடைய எச்சிலை தவிர்த்து, தன்னுடைய மனைவியினுடைய
எச்சிலை விழுங்குவதன் சட்டம் என்ன?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
மனைவியின் எச்சிலை விழுங்குவது சம்பந்தமாக, இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது: தன்னுடைய எச்சில் அல்லாத இன்னுமொருவரின் எச்சிலை விழுங்குவதைப் பொறுத்தவரை, அது நோன்பை முறித்து விடும், ஏனென்றால் அவரது வாயிலிருந்து ஊறக்கூடிய எச்சிலை அவர் விழுங்கவில்லை, மாறாக அவர் இன்னொரு பொருளை விழுங்குவதாக இருப்பது தான் காரணமாகும்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் அவர்களை முத்தமிட்டார்கள் என்றும், இன்னும் அவர்களது நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்'' என்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாக ஒரு ஹதீஸ் அபூதாவூது-ல் வந்துள்ளது. (அபூ தாவூது, 2386), இது அபூதாவூது-ல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியானதல்ல. இன்னும் மேற்கண்ட ஹதீஸில் வரக்கூடிய 'நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்" என்ற தொடர் பலவீனமானதாகும் என்று அல்பானி அவர்கள் தனது 'ழயீஃப் சுனன் அபீ தாவூது'-ல் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு குதாமா அவர்கள், இதனை ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதனை இருவழிகளில் நாம் அணுக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒன்று : இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதல்ல. அவர் கூறினார் :

நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) முத்தமிட்டிருக்கலாம் என்றும், இன்னும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நாக்கை(ப் பற்றி) உறிஞ்சியிருக்கலாம் என்ற நிலையில் இந்த ஹதீஸை அணுக முடியும்.இரண்டு : மேலும் இந்த ஹதீஸ் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

அவர்களின்) எச்சியை விழுங்கவில்லை, ஏனென்றால் அவர்களது நாக்கில் உள்ள ஈரப்பதம் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) வாய்க்குச் செல்லவில்லை. அல் முக்னீ 3-17. மேற்கண்ட முடிவுப்படி, தம்பதிகளில் ஒருவர் மற்றவரது எச்சிலை விழுங்கினாலும், நோன்பு முறிந்து விடாது.
ஆனால் இவ்வாறு செய்வது, பொதுவாகப் பார்க்குமிடத்து தம்பதிகளில் ஒருவர் மற்றவரது நாக்கைப் பற்றி உறிஞ்சும் நிலையானது அவர்களை உடலுறவின் பால் கொண்டு சென்றுவிடும், இன்னும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொள்வதும் உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும் என்றும் அதன் மூலம் விந்து வெளிப்பட்டு விடும் என்ற பயமிருக்குமென்றால், அது தடைசெய்யப்பட்டதாகும்.

ஆனால், அவர் தன்மீது நம்பிக்கை இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்றிருந்தால், அதன் சரியான முடிவுஎன்னவென்றால் அவ்வாறு முத்தமிடுவதும், மனைவி அல்லது கணவன் - ஒருவர் மற்றவரின் நாக்கைப் பற்றி உறிஞ்சுவது அனுமதிக்கப்பட்டதாகும், ஆனால் இது மக்ரூஹ் என்ற நிலையில் இருக்கும், ஏனென்றால் 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் தனது மனைவியை முத்தமிட்டிருக்கின்றார்கள்" என்பதனாலாகும். (Al-Bukhaari, 1927; Muslim, 1106) Al-Mumti’ 6/433.

ஆனால், அவர் தனது நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக இத்தகைய செயல்கள் நோன்பின் இரவுக் காலங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:03

நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப

விளையாட்டில் ஈடுபடுவது

கேள்வி : நோன்பைப் பற்றிய கேள்வி இது, நோன்பிருக்கும் நிலையில் கணவனைப் பார்த்து 'ஐ லவ் யு" என்று சொல்லலாமா, நோன்பிருக்கும் நிலையில் இவ்வாறு கூறுமாறு எனது கணவர் என்னைக் கேட்டுக் கொள்கின்றார், நான் இது அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறினால், அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர் கூறுகின்றார்? இதன் சட்டம் என்ன?

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடம் சல்லாபத்தில் ஈடுபடுவது ஒன்றும் தவறல்ல, அல்லது மனைவி கணவனிடமும் அவ்வாறு ஈடுபடுவதும் தவறல்ல, நோன்பிருக்கும் நிலையில் (ஐ லவ் யு என்று) இவ்வாறு கூறுவது, இருவரில் ஒருவர் உச்சகட்ட நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்படாத வரைக்கும் இது தடுக்கப்பட்டதல்ல.

இவ்வாறு விளையாடுவது உச்சகட்ட நிலைக்குத் தள்ளிச் செல்லும் என்றிருக்கும் பொழுது, ஈடுபடக் கூடிய இருவரில் ஒருவருக்கு அதிக காம உணர்வுகள் இருக்குமென்றால், அவ்வாறு விளையாடுவது விந்தணுவை வெளியேற்றக் காரணமாக அமைந்துவிடும் என்று பயப்படுவாரென்றால், அவ்வாறு செய்வது அவருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.

ஏனென்றால், நோன்பு முறிந்து விடும் ஆபத்தான நிலைக்கு அவர் சென்று விடுவதே இதன் காரணமாகும். மேலும், அவரிலிருந்து 'மதீ" (உணர்ச்சி மேலீட்டால் வெளியாகக் கூடிய திரவம்) வெளியாகி விடும் என்ற அச்ச நிலை இருந்தாலும் மேற்கண்ட விதி பொருந்தும். (al-Sharh al-Mumti’, 6/390).

யாருக்கு உச்சகட்ட நிலையை அடைய மாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கு இது ஆகுமானதாகும். (புகாரீ, 1927) முஸ்லிம் (1106), ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியர்களை) முத்தமிட்டும், இன்னும் தொட்டும் இருக்கின்றார்கள், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.''

ஸஹீஹ் முஸ்லிம் (1108) ல் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (தனது மனைவியை) நோன்பிருக்கும் மனிதன் முத்தமிட முடியுமா? என்று கேட்டதற்கு, ''உம்மு ஸலமா"வைக் கேளும் என்றார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவ்வாறே செய்தார்கள்" என்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பதில் கூறினார்கள்.

ஷெய்க் உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : முத்தமிடுவதன்றி மற்ற காரணங்கள் ஒருவரை உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும், கட்டிப் பிடிப்பதும் இன்னும் இதைப் போன்றதும், முத்தமிடுவதற்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும், இவற்றிற்கிடையே வேறுபாடு இல்லை. (al-Sharh al-Mumti’, 6/434). மேற்கண்ட விளக்கங்களின்படி, உங்களது கணவரைப் பார்த்து, 'ஐ லவ் யு" என்றோ அல்லது அவர் அவ்வாறு கூறுவது, நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது. இறைவன் மிக அறிந்தவன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:03

ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா),

அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?

கேள்வி : நோன்பு நேரத்து இரவில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்கின்ற ஒருவர், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா? அதைப் போலவே மாதாந்திரத் தீட்டு நீங்கிய பெண், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
அதிகாலை பஜ்ர் நேரத்திற்கு முன்பதாக தான் சுத்தமான நிலையில் இருப்பதாக ஒரு பெண் கருதினால், அவள் அந்த நாளைய நோன்பை நோற்க ஆரம்பிக்க வேண்டும், இன்னும் பொழுது புலரும் வரை அவள் குளிப்பதைப் பிற்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் கண்டிப்பாக அவள் சூரியன் உதயமாகும் வரை பிற்படுத்தலாகாது.

இதே சட்டம் ஜுனுபாளியாக, அதாவது தனது மனைவியுடன் உடலுறவு கொண்டவருக்கும் பொருந்தும், இன்னும் சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் தனது குளிப்பைப் பிற்படுத்தக் கூடாது, ஆண்களைப் பொறுத்தவரை - அவர்கள் குளித்து விட்டு அன்றைய ஃபஜ்ர் - அதிகாலைத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றுவதற்காக பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக தயாராகி விட வேண்டும். Fataawa al-Shaykh Ibn Baaz

Source : Islam Q&A (www.islam-qa.com)

''Jazaakallaahu khairan'' Fatimatu Al-Zzahra


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by முனாஸ் சுலைமான் Mon 1 Aug 2011 - 18:21

##* ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 19:13

முனாஸ் சுலைமான் wrote: ##* ://:-: :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 19:53

##* ##*


நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:01

:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by jasmin Mon 1 Aug 2011 - 22:40

அழகான விளக்கங்கள் ரமழானில் உங்கள் சேவை மகத்தானது என் முத்தே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 23:00

jasmin wrote:அழகான விளக்கங்கள் ரமழானில் உங்கள் சேவை மகத்தானது என் முத்தே
@. @. @.
நான் என்ன சொல்ல நான் சொல்ல வந்ததை இவர் சொல்லி விட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் Empty Re: நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum