சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி Khan11

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

3 posters

Go down

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி Empty சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:19

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி 4ca6695b-bf8a-443c-8775-7b09a60bd54d_S_secvpf
நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றினார். அவருடைய மனைவி மரகதம், கிராம சுகாதார ஊழியராக பணியாற்றினார். அவர்களுடைய மகள், 12 வயது (2002-ம் ஆண்டில்) சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

மகன், மணிகண்டன் (10). ராமலிங்கத்தின் அண்ணன் மகள், சங்கீதா (12). கடந்த 3.10.02 அன்று சங்கீதா தனது சித்தப்பா ராமலிங்கத்தின் வீட்டுக்கு வந்திருந்தார். மறுநாள் சர்மிளா, மணிகண்டன், சங்கீதா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு, ராமலிங்கமும், மரகதமும் வெளியே சென்றுவிட்டனர்.

அவர்கள் வெளியே சென்ற சிறிது நேரத்தில், கொத்தனார் வேலை செய்து வந்த ஸ்டீபன் குமார் என்ற `லெப்டு' குமார் (34) அந்த வீட்டுக்கு வந்து அழைப்பு மணி அடித்தார். கொத்தனார் தொழிலுக்கான சாமான்கள் அந்த வீட்டுக்குள் இருப்பதாகவும், அவற்றை எடுத்துச் செல்வதற்காக கதவை திறந்துவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவருக்கு கதவை திறந்துவிட மறுத்த மணிகண்டன், தங்களுடைய பெற்றோர் வந்த பிறகு வரும்படி கூறி விட்டான். ஆனால் மணிகண்டனின் அக்காள் சர்மிளா, "நமது வீட்டின் முதல் தளத்தில் கட்டுமானம் நடந்தபோது கொத்தனாராக இருந்தவர் குமார். எனவே அவருக்காக கதவைத் திறந்துவிடலாம்'' என்று கூறி, கதவை திறந்துவிட்டாள்.

குமார் உள்ளே வந்ததும், மணிகண்டனையும், சங்கீதாவையும் அங்கிருந்த பூஜை அறைக்கு அரிவாள் முனையில் கொண்டு சென்றார். அவர்களை சேலையை வைத்து ஜன்னலோடு சேர்த்து கட்டினார். பின்னர் படுக்கை அறைக்கு குமார் வந்தார். பயந்து போன சர்மிளா, அங்கு ஒரு மூலையில் மறைந்திருந்தாள். வீட்டில் இருந்த டி.வி.யை குமார் சத்தமாக வைத்தார்.

பின்னர் சிறுமி சர்மிளாவின் கையையும், காலையும் கட்டிப்போட்டு அவளை குமார் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது சேலையின் கட்டில் இருந்து விடுவித்துக்கொண்டு மணிகண்டன் வெளியே வந்தான். படுக்கை அறையில் தனது அக்காள் சர்மிளா பலாத்காரம் செய்யப்படுவதைக் கண்டு அலறினான்.

பின்னர் போன் செய்து பெற்றோருக்கு தகவல் சொல்ல முயற்சித்தான். இதைக் கண்ட குமார், அறையை விட்டு வெளியே வந்து, மணிகண்டனை கழிவறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு மணிகண்டனை அரிவாளால் கழுத்தை அறுத்து குமார் கொலை செய்தார். சேலையால் கட்டப்பட்டிருந்த சங்கீதாவும் கட்டை அவிழ்த்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மணிகண்டன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதைக் கண்டு சங்கீதா அலறினாள். உடனே சங்கீதாவையும் அரிவாளால் கழுத்தில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த சங்கீதா அங்கேயே விழுந்துவிட்டாள். பின்னர் மீண்டும் படுக்கை அறைக்கு குமார் சென்றார். அங்கு துணிகளை உடுத்திக்கொண்டபடி சர்மிளா நின்றுகொண்டிருந்தாள்.

அவளை கழுத்தில் வெட்டி, அவளிடம் இருந்த நகைகளை கொள்ளை அடித்தார். பின்னர் பீரோவில் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு குமார் தப்பி ஓடிவிட்டார். காயத்தோடு கிடந்த சர்மிளாவும் சங்கீதாவும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தனர்.

அந்த நேரத்தில் ஸ்கூட்டரில் கண்ணன் மற்றும் ராஜா ஆகியோர் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் காப்பாற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டனர். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல ஆண்டுகளாக குற்றவாளி பிடிபடவில்லை.

எனவே சென்னை ஐகோர்ட்டில் ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு, குமாரை சீர்காழி பஸ் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கைது செய்தனர்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்கை நாகப்பட்டினம் செசன்சு கோர்ட்டு விசாரித்து, கொத்தனார் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 8.12.08 அன்று இந்த தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குமார் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சி.நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். குமாருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

இந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி நுழைதல்), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), கற்பழித்தல், கொலை, கொலை முயற்சி, தாக்கி கொள்ளையடிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் குமாருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. காயம்பட்ட சிறுமிகள் 2 பேரும் பேசமுடியாமல் போனதால், எழுத்துமூலம் புகார் கொடுத்துள்ளனர். கொலை செய்ததும் குமார் அங்கிருந்து சென்னைக்கு வந்து இருக்கிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு குமார் விழுந்து கிடந்ததாகவும், அவரைப் பற்றி விசாரித்தபோது, தான் ஒரு அனாதை என்று கூறியதாகவும், அமைந்தகரை தேவன் என்பவர் சாட்சி அளித்தார். குமாருக்கு கிரானைட் தொழிற்சாலை ஒன்றில் தேவன் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர் 2007-ம் ஆண்டு ஜெசுராஜ் என்பவரின் மகள் சுசிலாவை குமார் திருமணம் செய்திருக்கிறார்.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவியை விட்டு விட்டு குமார் சேலத்துக்கு ஓடிவிட்டார். இதன் பிறகுதான் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு, குமார் மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளாக குமார் தலைமறைவாக இருக்கிறார்.

குமார் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த சாட்சியம், குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போகிறது. ஒன்றும் அறியாத பள்ளிச் சிறுமியை கற்பழித்த கொடூர செயலில் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த செயலுக்கு வருந்தவில்லை.

மனித குலத்தினால் செய்யப்படும் அரிதிலும் அரிதான, மற்றவர்களின் மனச்சாட்சியை உலுக்கும் இதுபோன்ற கொடூர குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இவரைப் போன்றவர்களை எல்லாம் சீர்திருத்தவே முடியாது. சமுதாயத்தில் மனித குலத்தோடு வாழ அவர் தகுதியற்றவர்.

மறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் வாழத் தகுந்தவராக குமாரை கருத முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட மரண (தூக்கு) தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி Empty Re: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:26

மறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் வாழத் தகுந்தவராக குமாரை கருத முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட மரண (தூக்கு) தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறோம்.
@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி Empty Re: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:21

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி Empty Re: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டக்ளஸ் தேவானந்தாவை சரண் அடையும்படி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு: டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum