Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தமிழை காக்க தமிழனாக வாழுங்கள்
3 posters
Page 1 of 1
தமிழை காக்க தமிழனாக வாழுங்கள்
""தமிழை காக்க தமிழனாக வாழுங்கள், வீழ்ச்சியை எண்ணாமல் தமிழனாக வாழ்ந்து,
தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டும்,'' என, தமிழ் ஆர்வலர்கள் பேசினர்.
கவிஞர் சிற்பி பவள விழா இரண்டாம் நாள் நிகழ்வு கோவை, கிக்கானி மேல் நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜன் அரங்கில் நேற்று நடந்தது. "சிற்பியின் படைப்புகள் - ஆய்வு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகித்து பேசியதாவது: கவிஞர்களுக்கு பெருமை சேர்த்த மண் தமிழகம். உயிருடன் இருக்கும் கவிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் பெருமை கொங்கு நாட்டுக்கு உள்ளது. அக்காலத்தில் அரசியல் காரணங்களால் சில கவிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்; சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது டில்லியிலுள்ள மகளிர் சங்கம் தங்களுக்கு சொந்த கட்டடம் வேண்டி பாகிஸ்தானை சேர்ந்த கவிஞர் அகமது பாயிஷ் அழைக்க முடிவு செய்தனர். இதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் அனுமதி கேட்டனர். அவர் உடனடியாக அப்போதைய பாக்., பிரதமர் ஆயுப்கானை போனில் தொடர்பு கொண்டு, விஷயத்தை சொன்னார். கவிஞர் இந்தியா வர தன்னால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்தார். டில்லியில் மூன்று கூட்டங்களில் கவிஞர் அகமது பாயிஷ் பேசினார். இதன் மூலம் மகளிர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி உதவி பெறப்பட்டது. இதே போன்று இங்கிலாந்து நாட்டில் ஜெர்மனியினர் குண்டு வீசிய தாக்கிய போது ஜெர்மனி நாட்டு கவிஞரின் நிகழ்ச்சி இங்கிலாந்தில் நடந்தது. கவிஞர்களுக்குள்ள மகத்துவத்தை இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. கவிதைத்துவம் இல்லையென்றால் அவை மக்களிடம் சரியான முறையில் போய் சேராது. கவிதையின் உட்பொருளை ரசிப்பவனே உண்மையான ரசிகன். "காவிரி நீர் நெல் வயல்களின் பச்சை ரத்தம்' என தன் கவிதையில் கவிஞர் சிற்பி சொல்லியிருப்பது கவிதை கொண்டுள்ள உட்பொருளுக்கு சிறந்த சான்றாகும். இவ்வாறு, அப்துல்ரகுமான் பேசினார். "மொழி என்னும் அரண்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் புலவர் கவுதமன் பேசுகையில் ""மொழி நமது அடையாளம். மொழியின் அழிவு, இனத்தின் அழிவுக்கு வித்திடும். பண்பாட்டின் உச்சகட்ட வடிவம் மொழி. பெயர் தமிழிலும், "இன்சியல்' ஆங்கிலத்திலும் எழுதும் கலாசாரம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. பெங்களூரு, ஒடிசா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களின் பெயர் அம்மாநிலத்தினர் ஆதரவால் மாற்றப்பட்டுள்ளதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்,'' என்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில்,""தமிழ் மொழியில் 10 லட்சம் சொற்கள் உள்ளன. 10 கோடி பேர் பேசும் மொழியாக தமிழ் உள்ளது. பிறமொழி கலப்பு தற்போது அதிகரித்து வருவதால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பது பழமொழி. இதை மாற்றி "வாழ்வது தமிழாக இருப்பினும்,வாழ்வதும் நாமாக இருக்க வேண்டும்' என்பதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்,'' என்றார்.இலங்கை கவிஞர் ஜெயபாலன் பேசினார். காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், கவிஞர் சிற்பி உள்பட கவிஞர்கள், தமிழ்மொழி ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டும்,'' என, தமிழ் ஆர்வலர்கள் பேசினர்.
கவிஞர் சிற்பி பவள விழா இரண்டாம் நாள் நிகழ்வு கோவை, கிக்கானி மேல் நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜன் அரங்கில் நேற்று நடந்தது. "சிற்பியின் படைப்புகள் - ஆய்வு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகித்து பேசியதாவது: கவிஞர்களுக்கு பெருமை சேர்த்த மண் தமிழகம். உயிருடன் இருக்கும் கவிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் பெருமை கொங்கு நாட்டுக்கு உள்ளது. அக்காலத்தில் அரசியல் காரணங்களால் சில கவிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்; சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது டில்லியிலுள்ள மகளிர் சங்கம் தங்களுக்கு சொந்த கட்டடம் வேண்டி பாகிஸ்தானை சேர்ந்த கவிஞர் அகமது பாயிஷ் அழைக்க முடிவு செய்தனர். இதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் அனுமதி கேட்டனர். அவர் உடனடியாக அப்போதைய பாக்., பிரதமர் ஆயுப்கானை போனில் தொடர்பு கொண்டு, விஷயத்தை சொன்னார். கவிஞர் இந்தியா வர தன்னால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்தார். டில்லியில் மூன்று கூட்டங்களில் கவிஞர் அகமது பாயிஷ் பேசினார். இதன் மூலம் மகளிர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்ட நிதி உதவி பெறப்பட்டது. இதே போன்று இங்கிலாந்து நாட்டில் ஜெர்மனியினர் குண்டு வீசிய தாக்கிய போது ஜெர்மனி நாட்டு கவிஞரின் நிகழ்ச்சி இங்கிலாந்தில் நடந்தது. கவிஞர்களுக்குள்ள மகத்துவத்தை இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. கவிதைத்துவம் இல்லையென்றால் அவை மக்களிடம் சரியான முறையில் போய் சேராது. கவிதையின் உட்பொருளை ரசிப்பவனே உண்மையான ரசிகன். "காவிரி நீர் நெல் வயல்களின் பச்சை ரத்தம்' என தன் கவிதையில் கவிஞர் சிற்பி சொல்லியிருப்பது கவிதை கொண்டுள்ள உட்பொருளுக்கு சிறந்த சான்றாகும். இவ்வாறு, அப்துல்ரகுமான் பேசினார். "மொழி என்னும் அரண்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் புலவர் கவுதமன் பேசுகையில் ""மொழி நமது அடையாளம். மொழியின் அழிவு, இனத்தின் அழிவுக்கு வித்திடும். பண்பாட்டின் உச்சகட்ட வடிவம் மொழி. பெயர் தமிழிலும், "இன்சியல்' ஆங்கிலத்திலும் எழுதும் கலாசாரம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. பெங்களூரு, ஒடிசா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களின் பெயர் அம்மாநிலத்தினர் ஆதரவால் மாற்றப்பட்டுள்ளதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்,'' என்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில்,""தமிழ் மொழியில் 10 லட்சம் சொற்கள் உள்ளன. 10 கோடி பேர் பேசும் மொழியாக தமிழ் உள்ளது. பிறமொழி கலப்பு தற்போது அதிகரித்து வருவதால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பது பழமொழி. இதை மாற்றி "வாழ்வது தமிழாக இருப்பினும்,வாழ்வதும் நாமாக இருக்க வேண்டும்' என்பதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்,'' என்றார்.இலங்கை கவிஞர் ஜெயபாலன் பேசினார். காந்திகிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், கவிஞர் சிற்பி உள்பட கவிஞர்கள், தமிழ்மொழி ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
Re: தமிழை காக்க தமிழனாக வாழுங்கள்
நல்ல தகவலுக்கு நன்றி சாதிக் தொடருங்கள் உங்கள் பதிவு வேட்டையை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழை காக்க தமிழனாக வாழுங்கள்
மற்ற மொழி ஆதிக்கம் நமக்குள் இருக்கும் பொது என்ன செய்ய!
அனைத்தும் மொழிகள் கற்பதில் தவறில்லை .ஆனால் அதையே
பெருமையாய் நினைப்பவனே தமிழன்!
இந்தியர்களில் இருவர் ஆங்கிலத்தில் பேசினால் ,நிச்சயமா அவர்கள் ,தமிழர்கள் என்று சொல்லாம்.
தங்கள் பிள்ளைகள் ,தங்களில் டாடி .மம்மி என்று கூறுவதை,
நடை முறை கொண்ட குடும்பம் அதிகமாய் தமிழர்களாய்,இருப்பது தான் மறுக்கமுடியா உண்மை .
அனைத்தும் மொழிகள் கற்பதில் தவறில்லை .ஆனால் அதையே
பெருமையாய் நினைப்பவனே தமிழன்!
இந்தியர்களில் இருவர் ஆங்கிலத்தில் பேசினால் ,நிச்சயமா அவர்கள் ,தமிழர்கள் என்று சொல்லாம்.
தங்கள் பிள்ளைகள் ,தங்களில் டாடி .மம்மி என்று கூறுவதை,
நடை முறை கொண்ட குடும்பம் அதிகமாய் தமிழர்களாய்,இருப்பது தான் மறுக்கமுடியா உண்மை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தமிழை காக்க தமிழனாக வாழுங்கள்
இது ரெம்ப நாளா பேசப் படுற விஷயம்தான் கலை ..என்ன செய்வது என்ன சொன்னாலும் சில ஜென்மங்கள் திருந்துவதில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» புன்னகைத்து வாழுங்கள்
» அன்புடன் வாழுங்கள்
» கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழுங்கள்!
» தொலைக்காட்சிகளில் தமிழை உயர்த்திப் பிடித்த ஆர்த்தி!
» தமிழை பேசாத தமிழருக்கு இது உரைக்கட்டும் படியுங்க இதை.
» அன்புடன் வாழுங்கள்
» கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழுங்கள்!
» தொலைக்காட்சிகளில் தமிழை உயர்த்திப் பிடித்த ஆர்த்தி!
» தமிழை பேசாத தமிழருக்கு இது உரைக்கட்டும் படியுங்க இதை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|