சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு Khan11

எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு

Go down

எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு Empty எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 4:34

எடியு+ரப்பா பதவி விலகியதையடுத்துமுதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு
எடியூரப்பாவின் ஆதரவு பெற்ற சதானந்த கவுடாவை, பா. ஜ., எம். எல். ஏ. க்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்கள் சட்ட சபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இவர் கர்நாடகத்தின் 20வது முதல்வராக பொறுப்பேற்றார். சுரங்க மோசடி குறித்து லோக் ஆயுக்தா அறிக்கையால் முதல்வர் எடியூரப்பா, கடந்த 31 ஆம் திகதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவியது. ஆகஸ்ட் 3 ஆம் திகதி பா.ஜ., எம். எல். ஏ. க்கள் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்தது. எடியூரப்பா ஆதரவு பெற்ற சதானந்த கவுடா எம்.பி.யும் ஈஸ்வரப்பா - அனந்த குமார் ஆதரவு பெற்ற அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரும், முதல்வர் பதவிக்காக களம் இறங்கினர். கடந்த மூன்று நாட்களாக இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் கூறி வந்தனர்.

இரு அணியினரும் தங்கள் ஆதரவு எம். எல். ஏ.க்களை ஹோட்டலில் தங்க வைத்தனர். எடியூரப்பா ஆதரவு சதானந்த கவுடாவுக்கு 60 க்கும் மேற்பட்ட எம். எல். ஏ. க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்த ரெட்டி சகோதரர்கள், கடைசி நேரத்தில் அணி மாறி ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவு தெரிவித்தனர். புதிய முதல்வர் தேர்வு கூட்டம் விதான் சவுதா அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது.

தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த எம். எல். ஏ. க்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அணி அணியாக வந்தனர். மேலிட தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் வருகை தந்தனர். புதிய முதல்வரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவித்தனர்.

இதற்கும் எடியூரப்பா அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு மூலமே தேர்தல் நடந்தது. அரங்கிலிருந்த பா.ஜ. எம். எல். ஏ. க்களை தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சுயேச்சை எம். எல். ஏ. வர்த்தூர் பிரகாஷ் நியமன எம். எல். ஏ. டொர்க் ஆகியோரும் வெளியேறினர். ஹோட்டலுக்குள், பத்திரிகையாளர்களு க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்த போதிலும் எம். எல். ஏ.க்கள் கூட்டத்தில் இரு அணியினரும் கூச்சல் எழுப்பியதாக தெரிகிறது.

இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச் சீட்டு முறை அமுல்படுத்தப்பட்டது. வாக்குச் சீட்டில் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் பெயரும் வாக்களிப்பவரின் பெயரும், அவரது கையெழுத்தும் குறிப்பிடப்பட்டி ருந்தது. ஒவ்வொரு எம். எல். ஏ. வாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. வாக்குகள் மேலிட தலைவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் சதானந்த கவுடாவுக்கு 63 வாக்குகளும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. பின்னர் கர்நாடக சட்டசபை பா. ஜ. தலைவராக சதானந்த கவுடா தேர்வு பெற்றார் என்று மேலிட தலைவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மேலிட தலைவர்களும் கர்நாடக தலைவர்களும் சதானந்த கவுடாவுக்கு போட்டி போட்டு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

சதானந்த கவுடா கூறுகையில், ‘கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. தற்போது நடந்து வரும் திட்டங்களும், பல்வேறு புதிய திட்டங்களையும் அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். எடியூரப்பா கொண்டு வந்துள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும். நல்ல நிர்வாகத்தை கொண்டு வருவேன்’ என்றார்.

தோல்வியை தழுவிய ஜெகதீஷ் ஷெட் டர் கூறுகையில், ‘கர்நாடக துணை முதல்வர் குறித்த ஆலோசனை எதுவும் நடக்க வில்லை. சதானந்த கவுடா மீது நம் பிக்கை உள்ளது. அனைத்தும் நல்ல படியாக அமைய அவருக்கு வாழ்த்து தெரி விக்கிறேன்’ என்றார்.

பின்னர் ராஜ்பவனில் கவர்னர் பரத்வாஜை சந்தித்து, பா.ஜ. எம். எல். ஏ.க்கள் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்ட கடிதத்தை சதானந்த கவுடா வழங்கினார். கடிதத்தை பரிசீலனை செய்த கவர்னர் பரத்வாஜ் சதானந்த கவு டாவை முதல்வராக பதவியேற்க வரும் படி அழைப்பு விடுத்தார். கர்நாடக புதிய முதல்வராக சதானந்த கவுடா பொறுப்பேற்றார்.

கவர்னர் பரத்வாஜை சந்தித்த பின் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்ற சதானந்த கவுடா, பின்னர் முதன் முறை யாக எடியூரப்பா வீட்டுக்கு சென்றார். அவருடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum