Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
3 posters
Page 1 of 1
சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டொக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்6பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த அறிவிப்பு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காங். தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் (4 ம் திகதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டொக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விடயம் என்பதால் இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயத்தில், தொடர்ந்து ரகசியம் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் ரகசியத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ராகுல் விரைவில் வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டொக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்6பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த அறிவிப்பு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காங். தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் (4 ம் திகதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டொக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விடயம் என்பதால் இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயத்தில், தொடர்ந்து ரகசியம் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் ரகசியத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ராகுல் விரைவில் வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
சொந்த விஷயங்கள் என்று இதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது .தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் தேசிய ஜன நாயக கட்சியின் ஒருங்கிணைப்பு தலைவருமான இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி பொது வாழ்வுக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது .
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:சொந்த விஷயங்கள் என்று இதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது .தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் தேசிய ஜன நாயக கட்சியின் ஒருங்கிணைப்பு தலைவருமான இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி பொது வாழ்வுக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது .
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
அப்போ உங்கள் கருத்துப்படி நோய்வாய்ப்பட்டால் அனைவருடனும் சொன்னபிறகுதான் வைத்தியம் பார்ப்பதா
குணமாகிட்டாங்கன்னு சந்தோசப்படவேண்டாமா
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
அப்படி தேவை இல்லை சாதிக் ..ஆனால் இந்த நவீன யுகத்தில் நாட்டு மக்களுக்கு சொல்லா விட்டாலும் தன் கட்சிக்காவது தெரிவித்து இருக்க வேண்டாமா?
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:அப்படி தேவை இல்லை சாதிக் ..ஆனால் இந்த நவீன யுகத்தில் நாட்டு மக்களுக்கு சொல்லா விட்டாலும் தன் கட்சிக்காவது தெரிவித்து இருக்க வேண்டாமா?
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
அவர் அறிவிக்கவில்லை என்று எப்படி உறுதியாகச்சொல்கிறீர்கள் நோய் எப்படி இருந்தது என்று யாராவது விபரிக்க விரும்புவார்களா என்ன தனக்குள்ள நோயினை யாருக்கும் தெரியாமல் குணமாக்கத்தானே பார்ப்பார்கள் உங்கள் கருத்து என்னை வியக்க வைக்கிறது
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
இல்லை சாதிக் இந்த விடயத்தில் சோனியா செய்தது பெரும் தவறு ,அவர் தெரிவிக்கவிட்டாலும் ராகுல் தெரிவித்து இருக்க வேண்டும் .
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:இல்லை சாதிக் இந்த விடயத்தில் சோனியா செய்தது பெரும் தவறு ,அவர் தெரிவிக்கவிட்டாலும் ராகுல் தெரிவித்து இருக்க வேண்டும் .
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
நல்லது நாம் சாந்தி பெறுவோம் நல்லது நடக்கட்டும்
Similar topics
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் _
» மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி எஸ். ஜானகி...!!!
» தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு: டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
» கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு
» அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
» மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி எஸ். ஜானகி...!!!
» தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு: டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
» கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு
» அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|