Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
புலிகளை போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுகின்றது: அரசாங்கம் _
Page 1 of 1
புலிகளை போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுகின்றது: அரசாங்கம் _
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள கால அவகாசமானது தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு உதவிகரமாகவோ சாதகமான பெறுபேறுகளை அடைவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடாகவோ அமையும் என நாம் எண்ணவில்லை. புலிகளினால் வெளிப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன என்று அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலான மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை 10 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்கவேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பு விதித்துள்ள காலஅவகாசம் தொடர்பிலேயே, சஜின் வாஸ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் ஆட்சி முறைக்கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் ஒதுக்கப்படும் அதிகாரங்கள், வரி மற்றும் நிதியியல் பரவலாக்கம் என்பன தொடர்பில் 10 நாட்களுக்குள் அரசாங்க தூதுக்குழுவினர் எழுத்துமூலம் தமிழ்க் கூட்டமைப்புக்கு அறிவிக்கவேண்டும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட திகதிகளையும் அந்தக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை .
கூட்டமைப்பின் அவசர கோரிக்கைகள் தொடர்பில் தற்போது பரிசீலிப்பது சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. அக்கோரிக்கைகள் தேசிய மட்ட அபிலாஷைகளுக்கு பொருத்தமானவையாக இல்லை.
புலிகள் எதிர்பார்த்ததைப் போன்ற தீர்வு ஒன்றை பெற முடியாது. அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்குவதற்காக மக்களின் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் இவ்வாறான கோரிக்கைகள் தடைகளை ஏற்படுத்தும். இத்தகைய நிபந்தனைகளை கூட்டமைப்பு விதிக்கும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது புலிகளின் செயற்பாடுகளை ஒத்ததாகவுள்ளது.
நாட்டில் எந்தவொரு சமூகத்தையும் சுதந்திரக் கட்சி மட்டும் முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. இந்நிலையில் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் முறிவு ஏற்பட்டால், பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்குகொள்ளும் என்றும் நம்புகின்றோம்.
அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் அரசியலமைப்ப மறுசீரமைப்பு குறித்து தமது கருத்துக்களை விவாதிக்கக்கூடிய ஒரு களமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவே அமையும்.
இதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கு இரண்டு வாரகால அவகாசத்தை விதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்த கோரிக்கைகளுக்கு இக் காலப்பகுதிக்குள் உரிய பதிலை அரசாங்கம் தரவேண்டுமென திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
பத்து சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உண்மையான “அக்கறையுடன் நோக்கியிருப்பதாக தெரியவில்லை என்று விசனம் தெரிவித்திருந்த கூட்டமைப்பு, இதுவரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. __
Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.
» தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|