Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
3 posters
Page 1 of 1
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
ஹட்டன், பதுளை தினகரன் விசேட நிருபர்கள்
மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கிaஸ் மனிதனின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள் பரவியுள்ளதனால் பொதுமக்கள் பீதியும் பரபரப்புமடைந்துள்ளனர்.
அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டதாக கூறப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையடுத்து அப்பகுதியெங்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன், இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கிaஸ் மனிதர்களை மடக்கிப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் அப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் நடமாடிய இனம் தெரியாத நான்கு இளைஞர்களை, தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து, அவர்களை 9.8.2011 அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, இனம் தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து, நையப் புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளு க்குட்படுத்தப்பட்ட போது, அவ் இளைஞர்கள் காலி பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுவதற்காகவே, வந்தவர்களென்றும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
அப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை போன்ற பகுதிகளில் கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்து வரும் தகவல்களையடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடனும் பீதியுடனும் காணப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குறிப்பிட்ட இடங்களில் தோட்டங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.
இதனால் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக, தொழிலாளர்கள் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, மர்மமனிதனின் தாக்குதலால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பத்தனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் (08.08.11) பகல் 12.30 மணியளவில் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 05 இலக்க மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த திலகவதி (வயது 42) என்ற பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படு வதாவது, மேற்படி பெண் கொழுந்து பறித்துக் கொண்டு இருக்கும் போது தனது கொழுந்து பையினை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்மமனிதன் இப்பெண்ணின் தலையில் உள்ள துணியினை இழுத்துள்ளான் பெண் கூச்சலிட கையிலிருந்த ஏதோ ஒரு திரவத்தினை முகத்தில் தெளித்து ஓடியுள்ளான். பின் மயக்கமுற்ற நிலையில் பெண் கொட்டகலை மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மேற்படி பெண்ணின் உடம்பில் காயங்களோ, திரவம் தெளித்ததற்கான தடயங்களோ கிடையாது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வெலிஓயா பிரதேசத்திலிருந்து தனது பெரியம்மா வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் மர்மமனிதன் என எண்ணி தாக்கப்பட்டு வட்டவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டு வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தினால் மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் பதற்ற நிலை நிலவிவருவதுடன், தோட்டத்துறையும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.
ஹட்டன், பதுளை தினகரன் விசேட நிருபர்கள்
மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கிaஸ் மனிதனின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள் பரவியுள்ளதனால் பொதுமக்கள் பீதியும் பரபரப்புமடைந்துள்ளனர்.
அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டதாக கூறப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையடுத்து அப்பகுதியெங்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன், இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கிaஸ் மனிதர்களை மடக்கிப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் அப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தம்பேதன்னை பெருந்தோட்டத்தில் நடமாடிய இனம் தெரியாத நான்கு இளைஞர்களை, தோட்ட இளைஞர்கள் நையப்புடைத்து, அவர்களை 9.8.2011 அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, இனம் தெரியாத நான்கு இளைஞர்களைப் பிடித்து, நையப் புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்ட நான்கு இளைஞர்கள் தீவிர புலன் விசாரணைகளு க்குட்படுத்தப்பட்ட போது, அவ் இளைஞர்கள் காலி பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், அப்புத்தளைப் பகுதியின் லிப்டன் சுற்று வட்டத்தை பார்வையிடுவதற்காகவே, வந்தவர்களென்றும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.பிரியங்கர குமார மேற்கொண்டுள்ளார்.
அப்புத்தளை, பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை போன்ற பகுதிகளில் கிaஸ் பூசப்பட்ட மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைத்து வரும் தகவல்களையடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடனும் பீதியுடனும் காணப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குறிப்பிட்ட இடங்களில் தோட்டங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.
இதனால் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தில் மர்ம மனிதர்கள் உலாவி வருவதாக, தொழிலாளர்கள் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, மர்மமனிதனின் தாக்குதலால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பத்தனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் (08.08.11) பகல் 12.30 மணியளவில் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 05 இலக்க மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த திலகவதி (வயது 42) என்ற பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படு வதாவது, மேற்படி பெண் கொழுந்து பறித்துக் கொண்டு இருக்கும் போது தனது கொழுந்து பையினை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த மர்மமனிதன் இப்பெண்ணின் தலையில் உள்ள துணியினை இழுத்துள்ளான் பெண் கூச்சலிட கையிலிருந்த ஏதோ ஒரு திரவத்தினை முகத்தில் தெளித்து ஓடியுள்ளான். பின் மயக்கமுற்ற நிலையில் பெண் கொட்டகலை மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மேற்படி பெண்ணின் உடம்பில் காயங்களோ, திரவம் தெளித்ததற்கான தடயங்களோ கிடையாது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வெலிஓயா பிரதேசத்திலிருந்து தனது பெரியம்மா வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் மர்மமனிதன் என எண்ணி தாக்கப்பட்டு வட்டவலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டு வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தினால் மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் பதற்ற நிலை நிலவிவருவதுடன், தோட்டத்துறையும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
இப்படி நாடு முழுவதும் இவனுகளின் நடமாட்டம் காணப்படுகிறதாக சொல்கிறீர்கள். இதற்க்கு அந்நாட்டு அரசாங்கம் அதனைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கவில்லையா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
அரசாங்கத்தின் வேலையாகத்தான் இருக்கும் என மக்கள் சந்தேகப்படுகின்றனர் என்ன வென்று இன்னமும் தெரியவில்லை
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு _
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|