Latest topics
» சிறுகதை - சப்தமும் நாதமும்!by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
ஒவ்வொன்றும் ஒருவிதம் ;
2 posters
Page 1 of 1
ஒவ்வொன்றும் ஒருவிதம் ;
லேட்டா வந்தாலும்......
இந்தியாவில் பலதரப்பட்ட இன,மொழி,சாதி,மதப்பிரிவினைகள் இருப்பது போல் பூகோள ரீதியாகவும் இந்தியா ஒரு வித்தியாசமான நாடு என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பதினைந்தாவது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்திருக்கிறது.அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார உத்திகளை கையாண்டு மக்களிடம் ஒட்டுக்கேட்டு வருகிறார்கள்.இந்த வித்தியாசங்கள், வித்தியாசமான ஒட்டுசாவடிகள் சாவடிகள் அமைப்பதிலும் காணப்படுவதால் தேர்தல் நமக்கு பிரமிப்பூட்டுகிறது.நமது ஜனநாயகத்தின் வலிமையை நமக்கு புரியவைக்கிறது.
மிகச்சில வாக்கு சாவடிகள் மக்களால் எளிதாக செல்ல முடியாத இடங்களில் அமைக்கப்படுகின்றன.மக்களுக்கு, தண்ணீர், உணவு,மின்சாரம்,கல்வி,மருத்துவம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் கிடைக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓட்டுப்போடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.இன்னொரு ஆச்சரியம் இவர்கள் படித்த மேதாவிகளைப் போல தேர்தல்களில் ஓட்டளிக்காமல் புறக்கணிப்பதும் இல்லை.அரசியல்வாதிகளும் அரசும் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தங்களது ஜனநாயக கடைமையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறார்கள்.
உதாரணமாக ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஒட்டுச்சாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்களையும், மற்ற தேர்தல் உபகரணங்களையும் ஹெலிகாப்டரில் தான் கொண்டு செல்ல வேண்டும்.அதே போல லடாக் பகுதியில் உள்ள பாஸ்டன் ஓட்டுச்சாவடி தான் உலகிலேயே மிக உயரமான(17,000 அடி) இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஆகும்.அடுத்தது அன்லே-பு என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடி.உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16,400அடிக்கு மேல்!
அதேபோல் லே சட்டமன்றத் தொகுதியில் உள்ள தக்ஜே கோன்பா என்ற வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை வெறும் ஐந்து பேர் தான்.இதாவது பரவாயில்லை!தலைமை தேர்தல் அதிகாரி என்.கோபால்சாமி கூறியுள்ள படி “ஜுனாகத் பகுதியில் உள்ள கிர் காடுகளுக்கிடையே உள்ள images32ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரே ஒரு வாக்காளர் தான் உள்ளார்.சட்டிச்காரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெறும் இரண்டு வாக்காளர்கள் தான்.அருணாச்சல் பிரதேசில் வெறும் மூன்று பேருக்கு மூன்று வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது”
அஸ்ஸாமில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் உள்ள சில வாக்குசாவடிகளுக்கு தேர்தல் அலுவலுர்களையும்,தேர்தல் உபகரணங்களையும் யானை மூலமாகவோ அல்லது மாட்டுவண்டி மூலமாகவோ தான் கொண்டுசெல்ல வேண்டும் அல்லது கால் நடையாக செல்லவேண்டும்.இது அஸ்ஸாமில் மட்டுமில்லை; வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளின் நிலை இது தான். இதற்க்கு பூகோள காரணங்களை மட்டும் கூறி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது!
ஆந்திரப்பிரதேசத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு சாதாரணமாக யாரு சென்றுவிட முடியாது!காரணம் அதன் பூகோள அமைப்பு அப்படி.இருந்தும் அங்கும் image6வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.மக்கள் தங்கள் ஜனநாயக் கடைமைகளை ஆற்றுகின்றனர்.
இன்னும் பல பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி கிடையாது.கண்டிப்பாக மின்சாரம் கிடைத்திருக்கப்போவதில்லை. அந்தப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்தச் செல்லும் அதிகாரிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்?
இதெல்லாம் போக பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று பல வாக்குச்சாவடிகளை பாதுகாப்பு,நேர்மையான வாக்குப்பதிவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தரம் பிரித்துள்ளது.இந்தவாக்குச்சாவடிகள் மீது தேர்தல் ஆணையம் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பை பலப்படுத்தி நேர்மையான முறையில் வாக்குப்பதிவை நடத்த முயற்சி செய்யும்.
குறிப்பாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் அல்லது அச்சுறுத்தல் உள்ள ஆந்திரபிரதேசம்,ஜார்கண்ட்,பிகார், சத்திஷ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகள்,வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பல வாக்குச்சாவடிகள் இந்த பதற்றமான மற்றும் மிக பதற்றமான கணக்கில் வருகிறது.
இவை போக சில கொழுப்பெடுத்த அரசியல்வாதிகளின் சுயநலத்தால் சில தொகுதிகளில் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதால் அந்த வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும்.
இப்போது புரிகிறதா வாக்குச்சாவடிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம் ;
இந்தியாவில் பலதரப்பட்ட இன,மொழி,சாதி,மதப்பிரிவினைகள் இருப்பது போல் பூகோள ரீதியாகவும் இந்தியா ஒரு வித்தியாசமான நாடு என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பதினைந்தாவது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்திருக்கிறது.அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார உத்திகளை கையாண்டு மக்களிடம் ஒட்டுக்கேட்டு வருகிறார்கள்.இந்த வித்தியாசங்கள், வித்தியாசமான ஒட்டுசாவடிகள் சாவடிகள் அமைப்பதிலும் காணப்படுவதால் தேர்தல் நமக்கு பிரமிப்பூட்டுகிறது.நமது ஜனநாயகத்தின் வலிமையை நமக்கு புரியவைக்கிறது.
மிகச்சில வாக்கு சாவடிகள் மக்களால் எளிதாக செல்ல முடியாத இடங்களில் அமைக்கப்படுகின்றன.மக்களுக்கு, தண்ணீர், உணவு,மின்சாரம்,கல்வி,மருத்துவம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் கிடைக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓட்டுப்போடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.இன்னொரு ஆச்சரியம் இவர்கள் படித்த மேதாவிகளைப் போல தேர்தல்களில் ஓட்டளிக்காமல் புறக்கணிப்பதும் இல்லை.அரசியல்வாதிகளும் அரசும் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தங்களது ஜனநாயக கடைமையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறார்கள்.
உதாரணமாக ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஒட்டுச்சாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்களையும், மற்ற தேர்தல் உபகரணங்களையும் ஹெலிகாப்டரில் தான் கொண்டு செல்ல வேண்டும்.அதே போல லடாக் பகுதியில் உள்ள பாஸ்டன் ஓட்டுச்சாவடி தான் உலகிலேயே மிக உயரமான(17,000 அடி) இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஆகும்.அடுத்தது அன்லே-பு என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடி.உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16,400அடிக்கு மேல்!
அதேபோல் லே சட்டமன்றத் தொகுதியில் உள்ள தக்ஜே கோன்பா என்ற வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை வெறும் ஐந்து பேர் தான்.இதாவது பரவாயில்லை!தலைமை தேர்தல் அதிகாரி என்.கோபால்சாமி கூறியுள்ள படி “ஜுனாகத் பகுதியில் உள்ள கிர் காடுகளுக்கிடையே உள்ள images32ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரே ஒரு வாக்காளர் தான் உள்ளார்.சட்டிச்காரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெறும் இரண்டு வாக்காளர்கள் தான்.அருணாச்சல் பிரதேசில் வெறும் மூன்று பேருக்கு மூன்று வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது”
அஸ்ஸாமில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் உள்ள சில வாக்குசாவடிகளுக்கு தேர்தல் அலுவலுர்களையும்,தேர்தல் உபகரணங்களையும் யானை மூலமாகவோ அல்லது மாட்டுவண்டி மூலமாகவோ தான் கொண்டுசெல்ல வேண்டும் அல்லது கால் நடையாக செல்லவேண்டும்.இது அஸ்ஸாமில் மட்டுமில்லை; வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளின் நிலை இது தான். இதற்க்கு பூகோள காரணங்களை மட்டும் கூறி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது!
ஆந்திரப்பிரதேசத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு சாதாரணமாக யாரு சென்றுவிட முடியாது!காரணம் அதன் பூகோள அமைப்பு அப்படி.இருந்தும் அங்கும் image6வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.மக்கள் தங்கள் ஜனநாயக் கடைமைகளை ஆற்றுகின்றனர்.
இன்னும் பல பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி கிடையாது.கண்டிப்பாக மின்சாரம் கிடைத்திருக்கப்போவதில்லை. அந்தப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்தச் செல்லும் அதிகாரிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்?
இதெல்லாம் போக பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று பல வாக்குச்சாவடிகளை பாதுகாப்பு,நேர்மையான வாக்குப்பதிவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தரம் பிரித்துள்ளது.இந்தவாக்குச்சாவடிகள் மீது தேர்தல் ஆணையம் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பை பலப்படுத்தி நேர்மையான முறையில் வாக்குப்பதிவை நடத்த முயற்சி செய்யும்.
குறிப்பாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் அல்லது அச்சுறுத்தல் உள்ள ஆந்திரபிரதேசம்,ஜார்கண்ட்,பிகார், சத்திஷ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகள்,வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பல வாக்குச்சாவடிகள் இந்த பதற்றமான மற்றும் மிக பதற்றமான கணக்கில் வருகிறது.
இவை போக சில கொழுப்பெடுத்த அரசியல்வாதிகளின் சுயநலத்தால் சில தொகுதிகளில் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதால் அந்த வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும்.
இப்போது புரிகிறதா வாக்குச்சாவடிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம் ;
Re: ஒவ்வொன்றும் ஒருவிதம் ;
அறிய தந்தமைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நன்றிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு
» ..உன் அங்கம் ஒவ்வொன்றும் ஓர் சிறப்பு பெற்றுள்ளது,,,
» பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு
» ..உன் அங்கம் ஒவ்வொன்றும் ஓர் சிறப்பு பெற்றுள்ளது,,,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|