Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
2 posters
Page 1 of 1
நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
சென்னை, ஆக.13-
தமிழ்நாடு
முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக்
கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு
உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா
அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி
கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர்.
இந்த
புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் சிறப்பு
பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த பிரிவுகளில் இதுவரை 2400-க்கும்
மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மனுக்களின் மீது
தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன்,
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை
பெறப்பட்டுள்ள 2400-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்களில் உரிய
ஆவணங்களுடன் தரப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு
வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டு பதிவாகும் பகுதியில்
உள்ள கோர்ட்டுகளில் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால்
வழக்கமான கோர்ட்டுகளில் நில அபகரிப்பு வழக்கு விசாரணையையும் நடத்தினால்
மிகவும் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து
நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள்
ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட
தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25
சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன்
அறிவித்தது.
சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்க தமிழக
அரசு ரூ.5.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சிறப்பு
கோர்ட்டுக்கள் செயல்படும். மற்ற 23 கோர்ட்டுக்கள் மற்ற மாவட்ட
தலைநகரங்களில் இயங்கும். வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர்,
நாகை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் சிறப்பு
கோர்ட்டுக்கள் அமைக்கப்படவில்லை.
இந்த
மாவட்டங்களில் பதிவாகும் நிலஅபகரிப்பு புகார் விசாரணை பக்கத்து மாவட்ட
சிறப்பு நீதிமன்றங்களில் சேர்த்து நடத்தப்படும். இந்த சிறப்பு கோர்ட்டுகள்
ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள்
ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள்.
ஓராண்டுக்கு
இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. சிறப்பு
கோர்ட்டுகளுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு
ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கோர்ட்டுக்களை விரைவாக அமைத்து பணிகளை தொடங்க
ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்ட முதன்மை
நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கோர்ட்டுகளுக்கு தேவையான உள்
கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி
யோரும் கலெக்டர்களிடம் பேசி சிறப்பு கோர்ட்டுக்களை உருவாக்க ஒருங்கிணைப்பு
நடவடிக்கைகளை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே நிலத்தை பறி
கொடுத்தவர்களுக்கு கோர்ட்டு நடவடிக்கை மூலம் அவர்களது நிலம் விரைவில்
திரும்ப கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாலை மலர்
தமிழ்நாடு
முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக்
கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு
உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா
அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி
கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர்.
இந்த
புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் சிறப்பு
பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த பிரிவுகளில் இதுவரை 2400-க்கும்
மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மனுக்களின் மீது
தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன்,
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை
பெறப்பட்டுள்ள 2400-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்களில் உரிய
ஆவணங்களுடன் தரப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு
வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டு பதிவாகும் பகுதியில்
உள்ள கோர்ட்டுகளில் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால்
வழக்கமான கோர்ட்டுகளில் நில அபகரிப்பு வழக்கு விசாரணையையும் நடத்தினால்
மிகவும் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து
நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள்
ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட
தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25
சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன்
அறிவித்தது.
சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்க தமிழக
அரசு ரூ.5.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சிறப்பு
கோர்ட்டுக்கள் செயல்படும். மற்ற 23 கோர்ட்டுக்கள் மற்ற மாவட்ட
தலைநகரங்களில் இயங்கும். வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர்,
நாகை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் சிறப்பு
கோர்ட்டுக்கள் அமைக்கப்படவில்லை.
இந்த
மாவட்டங்களில் பதிவாகும் நிலஅபகரிப்பு புகார் விசாரணை பக்கத்து மாவட்ட
சிறப்பு நீதிமன்றங்களில் சேர்த்து நடத்தப்படும். இந்த சிறப்பு கோர்ட்டுகள்
ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள்
ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள்.
ஓராண்டுக்கு
இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. சிறப்பு
கோர்ட்டுகளுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு
ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கோர்ட்டுக்களை விரைவாக அமைத்து பணிகளை தொடங்க
ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்ட முதன்மை
நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கோர்ட்டுகளுக்கு தேவையான உள்
கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி
யோரும் கலெக்டர்களிடம் பேசி சிறப்பு கோர்ட்டுக்களை உருவாக்க ஒருங்கிணைப்பு
நடவடிக்கைகளை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே நிலத்தை பறி
கொடுத்தவர்களுக்கு கோர்ட்டு நடவடிக்கை மூலம் அவர்களது நிலம் விரைவில்
திரும்ப கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
இது திமுக வை ஒடுக்க ஜெயா எடுத்து இருக்கும் புதிய ஆயுதம் ..ஆனால் முதன் முதலில் நில ஆக்கிரமைப்பு செய்தவர் ஜெயா என்பதை மறந்துவிடக்கூடாது.
2001 -2005 ஆட்சியில் கங்கை அமரனை மிரட்டி வாங்கிய சிறுதாவூர் இடத்தையும் அதை சுற்றி அபகரித்த தலித்துக்கள் இடங்களையும் திரும்ப கொடுக்க ஜெ ஜெ தயாரா ? தான் உடைத்தால் மண்குடம் மாமியார் உடைத்தால் பொன்குடமா?
சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாம்
2001 -2005 ஆட்சியில் கங்கை அமரனை மிரட்டி வாங்கிய சிறுதாவூர் இடத்தையும் அதை சுற்றி அபகரித்த தலித்துக்கள் இடங்களையும் திரும்ப கொடுக்க ஜெ ஜெ தயாரா ? தான் உடைத்தால் மண்குடம் மாமியார் உடைத்தால் பொன்குடமா?
சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு
» தி.மு.க. அலுவலகத்துக்கு நிலம் அபகரிப்பு: கே.என்.நேரு-அன்பில் பெரியசாமி கைது; எம்.எல்.ஏ.வும் சிக்குகி
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு
» தி.மு.க. அலுவலகத்துக்கு நிலம் அபகரிப்பு: கே.என்.நேரு-அன்பில் பெரியசாமி கைது; எம்.எல்.ஏ.வும் சிக்குகி
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|