சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தமிழர் மூலிகைகள்: வாழை Khan11

தமிழர் மூலிகைகள்: வாழை

3 posters

Go down

தமிழர் மூலிகைகள்: வாழை Empty தமிழர் மூலிகைகள்: வாழை

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 5:12

முக்கனிகளில் ஒன்றான வாழைக்கு அரம்பை,அம்பணம்,கவரி,கதலி,கமரி, கிரணபதி,சேகிலி ஓசை என்ற பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் தாவரப்பெயர் மினுசா ஸ்பீசிஸ்.



தமிழர்களின் உணவு முறை இன்றும் கூட வியந்து பார்க்கப்படுகிறது. குழம்பும், கூட்டும், பொரியலும் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் தங்களுக்குள் கொண்டு வந்து விடுகின்றன. வாழை இலையில் உணவை வைத்து சாப்பிட்டு நிறைவாக வாழைப்பழத்தை சாப்பிட்டு முடிக்கும் பழக்கம் தமிழர்களின் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அறிவுப்பூர்வமான பழக்கத்திற்கு சிறந்த உதாரணமாகிறது. தெய்வ வழிபாடுகளிலும் வாழைப்பழம் முக்கிய பிரசாதமாக இடம் பிடிக்கிறது.



பிரசாதம் என்ற பெயரில் மருந்துகளை மக்களிடம் மருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வாழை இலையில் உணவு உண்ணுதல் சுகாதாரமான உணவு முறை. இது தொற்று நோய்கள் உண்டாவதை தடுக்கிறது.நாள் தோறும் வாழை இலையில் சாப்பிட்டால் கண்பார்வை தெளிவு பெறும். இன்றும் கூட தீக்காயங்களின் கொடூரத்தை குறைக்க வாழை இலைக்குருத்தின் தளிர் இலையை காயத்தின் மேல் வைத்து கட்டும் பழக்கம் காணப்படுகிறது. உடலில் உண்டான சூட்டு கொப்புளங்களின் மேல் காய்ந்த வாழை இலையை வைத்துக் கட்டினால் குளிர்ச்சி உண்டாகி விரைவில் குணமாகும்.

வாழையில் உள்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உண்ண சிறுநீர் தாரையில் உண்டாகும் கல்லடைப்பை கரைக்கும். சீதபேதி என்னும் ரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு குணமாகும். காது நோய்கள்,கருப்பை நோய்கள்,இரத்தக் கோளாறுகள் குணமாக்குவதில் வாழைத்தண்டு சிறப்பான குணங்களை கொண்டது. வெட்டிய தண்டிலிருந்து வடியும் சாற்றை நரம்புக் கோளாறுகளால் உண்டாகும் காக்கை வலிப்பு,நரம்புத்தளர்ச்சி நோய்களுக்கு பஞ்சாப் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சிலருக்கு சிறுநீர் அதிகமாக கழியும். இதனை தடுக்க உள்தண்டு சாற்றை குடித்து நிவாரணம் காணலாம். நீரிழிவு நோயினாலும், அதிக காய்ச்சலினாலும் மிகுதாகும் உண்டாகும் நோயாளிகளுக்கு இந்த தண்டு சாறு நல்ல மருந்தாக அமையும். நுரையீரல், மலக்குடலில் ரத்தக்கசிவு உள்ளவர்களுக்கு இந்த வாழைத் தண்டின் சாறு உதவுகிறது. பாம்புக்கடித்தவர்களை வாழைப்பட்டையை பரப்பி படுக்க வைத்திருந்தால் பாம்பின் நஞ்சு இறங்கும் என்று கருதப்படுகிறது. தேள், பூரான் போன்றவை கடித்த இடத்தில் தண்டின் சாற்றை தடவினால் வலி குறைவதை காணலாம்.

வாழைப்பூக்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு,அசீரணம் போன்ற நோய்கள் குறையும். வயிற்றில் தங்கியிருக்கும் புழுக்களை கொன்று வெளியேற்றும். பித்தநோய்கள், இருமலை நீக்கும்.வாழைப்பூவை வடையாக செய்து சாப்பிட உடல் வலிமை பெறும். குடல் புண் குணமாகும். வாழைப்பூவை கருணைக்கிழங்கு,பாசிப்பருப்பு இவற்றுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட மூல நோய் கட்டுப்படும். வாழைப்பூவுடன் பருப்பு சேர்த்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக்கசிவு நீங்கும். ஊளைச்சதை உள்ளவர்கள் வாழைப்பழத்தில் பசும்பால் சேர்த்து பிசைந்து வாழைப்பூவின் சாற்றையும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறையும். மாதவிடாயின் போது அதிக வலி உள்ளவர்கள் வாழைப்பூவுடன் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் வலி குறையும்.

வாழைக்காயை வேகவைத்து அதனுடன் பாகற்காய் சேர்த்து உண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மிகவும் குறைவாக சிறுநீர் போகும் பிரச்சனை உள்ளவர்கள் வாழைக்காயின் தோலை தண்ணீரில் நன்கு காய்ச்சி கசாயமாக தயாரித்து அளவுடன் சர்க்கரையை கலந்து அருந்தினால் சிறுநீர் கோளாறு நீங்கும்.
வாழைப்பழம் மலச்சிக்கலை போக்க வல்லது. குடல் சார்ந்த புண்களையும், வயிற்று போக்கு, இருதய நோய்களை தடுக்கும் சக்தி உள்ளது. விந்துவை பெருக்குவதுடன், உடலுக்கு அழகூட்டும். நன்றாக பழுத்த பழத்துடன் மோர் கரைத்து சாப்பிட்டால் உள்ளங்கால்,கை, கண் எரிச்சல் குணமாகும். பாலும்,வாழைப்பழமும் இரவில் உண்ண அசீரணம் குணமாகும். அம்மை, டைப்பாய்டு காய்ச்சல், காமாலை நீங்க வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து உண்ணலாம்.

நேந்திரன் பழம் ஆண்களுக்கு உண்டாகும் சிறுநீர்க்குறைபாட்டை நீக்கும். இரத்த விருத்தி உண்டுபண்ணும். ரஸ்தாளி வாத நோயாளிக்கு உதவாது என்கிறார்கள். பசியை குறைக்கும். பூவன் பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் பழம் வாத நோயாளிக்கு ஆகாது எனக்கருதப்படுகிறது. வயிற்றுப்புண்ணை குணமாக்கும். மலை வாழை உடல் சூட்டை தணிக்கும். பித்தத்தை போக்கும்.
நாட்டு வாழைப்பழம் கபநோய்களை அதிகரிக்க செய்யும். செவ்வாழை மலச்சிக்கலை நீக்கும்.

டாக்டர்.ஜெயவெங்கடேஷ், பி.எஸ்,எம்,எஸ், எம்,டி(சித்தா). மதுரை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தமிழர் மூலிகைகள்: வாழை Empty Re: தமிழர் மூலிகைகள்: வாழை

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 6:07

வாழ்ந்தால் பயனுள்ள வாழை போல வாழவேண்டும்.

சிறந்த பதிவு கலைநிலா.!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழர் மூலிகைகள்: வாழை Empty Re: தமிழர் மூலிகைகள்: வாழை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 6:52

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி


தமிழர் மூலிகைகள்: வாழை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழர் மூலிகைகள்: வாழை Empty Re: தமிழர் மூலிகைகள்: வாழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum