Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஊழல் புற்று நோயை ஒழித்திட வேண்டும்: சுதந்திரதின உரையில் பிரதீபா பாட்டீல் பேச்சு
2 posters
Page 1 of 1
ஊழல் புற்று நோயை ஒழித்திட வேண்டும்: சுதந்திரதின உரையில் பிரதீபா பாட்டீல் பேச்சு
டெல்லி: புற்று நோயைப்போல் பரவி வரும் ஊழலை ஒழித்திட வேண்டும். அதற்காக நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாடு நிதானமான விவேகமான அறிவுடன் சிந்திக்கும் திறன் கொண்டது என்று போற்றப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல், அதீத செயல்களை தவிர்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மை, அவற்றின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் வரைமுறைக்கு உட்பட்டு அமைந்துள்ளது. தேவைப்படும்போது சரியான நடவடிக்கை மூலம் அவற்றுக்கு திறமையும், வலிமையும் சேர்க்க வேண்டும். இதில் தொடர் முயற்சி மேற்கொள்ளாவிட்டால் அவற்றின் நம்பகத்தன்மை அழிந்துவிடும்.
நமது நாடாளுமன்றத்தில் சாதனைக்குரிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் சுமூகமாக விவாதங்கள் நடைபெற வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்க நமது இளம் தலைமுறை எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியது.
இது போன்ற பிரச்சனைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். தூய்மையான ஆட்சி முறை, சுகாதாரமான செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்க, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதுபோல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நம்பி இருக்கும் விவசாயத்தில் நாம் அதன் முழு உற்பத்தி திறனை எட்டாமல் இருக்கிறோம். விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்பட ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் இதில் முன்னணி பங்கு வகிக்க வேண்டும். மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து வருவதற்கு காரணமான சமூக பாரபட்சங்களுக்கு எதிராக போராட வேண்டும். வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளை விரட்டுவதற்கு போராட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாடு நிதானமான விவேகமான அறிவுடன் சிந்திக்கும் திறன் கொண்டது என்று போற்றப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல், அதீத செயல்களை தவிர்க்க வேண்டும்.
நாடாளுமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மை, அவற்றின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் வரைமுறைக்கு உட்பட்டு அமைந்துள்ளது. தேவைப்படும்போது சரியான நடவடிக்கை மூலம் அவற்றுக்கு திறமையும், வலிமையும் சேர்க்க வேண்டும். இதில் தொடர் முயற்சி மேற்கொள்ளாவிட்டால் அவற்றின் நம்பகத்தன்மை அழிந்துவிடும்.
நமது நாடாளுமன்றத்தில் சாதனைக்குரிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் சுமூகமாக விவாதங்கள் நடைபெற வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்க நமது இளம் தலைமுறை எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியது.
இது போன்ற பிரச்சனைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். தூய்மையான ஆட்சி முறை, சுகாதாரமான செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்க, தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதுபோல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் நம்பி இருக்கும் விவசாயத்தில் நாம் அதன் முழு உற்பத்தி திறனை எட்டாமல் இருக்கிறோம். விவசாயத்தில் ஒரு புரட்சி ஏற்பட ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் இதில் முன்னணி பங்கு வகிக்க வேண்டும். மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் குறைந்து வருவதற்கு காரணமான சமூக பாரபட்சங்களுக்கு எதிராக போராட வேண்டும். வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளை விரட்டுவதற்கு போராட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஊழல் புற்று நோயை ஒழித்திட வேண்டும்: சுதந்திரதின உரையில் பிரதீபா பாட்டீல் பேச்சு
எண்ணம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு செயில் மக்கள் காட்டினால் இந்தியா எங்கேயோ போய் விடும்
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்
எடுத்திருப்பாங்களா?
நன்றி மேடம் தகவலுக்கு
இந்த நன்னாளில், அனைத்து குடிமக்களும் முழு அர்ப்பணிப்புடனும், உண்மையுடனும், பெருமையுடனும் பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்
எடுத்திருப்பாங்களா?
நன்றி மேடம் தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்
» ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்; ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பேச்சு
» ராஜீவ் கொலையாளிகள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முடிவ
» மார்பக புற்று நோயை தடுக்க
» மார்பக புற்று நோயை தடுக்க
» ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்; ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பேச்சு
» ராஜீவ் கொலையாளிகள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முடிவ
» மார்பக புற்று நோயை தடுக்க
» மார்பக புற்று நோயை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|