Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
2 posters
Page 1 of 1
அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
பெண்களில் மாதவிடாய் மாதம் மாதம் வருவது வழக்கம். இது ஒரு பெண் 13 14 வயதில் பருவமடையும் போது ஆரம்பிக்கும். பின்னர் சூலகங்கள் தொழிற்படுவதால் சூல் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இதனால் மாதவிடாயும் மாதம் மாதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு பெண் 50 51 வயதை அடையும் போது மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும். இதனை மெனோபோஸ் பருவம் என அழைப்பார்கள்.
இவ்வாறு மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பையின் உள்சுவர் உடைந்து குருதியாக வெளியேறும். இது காரணமாக 35 நாட்கள் நீடிக்கும். இதன்போது வயிற்றில் இருந்து கழிவுகள் எதுவும் வேளியேறுவதில்லை. பெண்களது குருதியும் கர்ப்பப்பையின் உட்சுவருமே உடைந்து வெளியேறுகின்றது. பின்னர் மாதவிடாய் வரத் தொடங்கியதில் இருந்து 14ஆவது நாள் சூலகம் சூல் முட்டையை வெளியேற்றும். அடுத்ததாக 28ஆவது அல்லது 29ஆவது நாளில் அடுத்த மாதவிடாய்க்கான குருதிப் போக்கு ஆரம்பிக்கும். இதுவே ஒரு பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம். இந்த ஒழுங்கான மாதவிடாய் மற்றும் அளவான குருதிப் போக்கு ஒரு பெண்ணுக்கு வழமையானதும் அவளால் அதனை தாங்கக் கூடியதுமான ஒரு விடயம்.
ஆனால் இந்த மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றதாகவும் இது எந்த நேரத்தில் வருமோ எப்படி வருமோ என பெண்களை ஏங்க வைத்தும் அவர்களால் அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியாதவாறு கட்டி கட்டியாக அதிகப்படியான குருதிப் போக்கையும் ஏற்படுத்தினால் பெண்களது வாழ்க்கையில் இந்த மாதவிடாய் ஒரு பாரிய சிக்கலாக மாறுகிறது. பெண்கள் தடுமாறும் போது அவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பமும் தடுமாறத் தொடங்கும். ஆகையால் இந்த அதிகப்படியான மாதவிடாய் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வது பொருத்தமானது.
மாதவிடாய் போக்கின் அதிகரிப்புக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் பெண்ணின் வயதை பொறுத்து வேறுபடும். அதாவது 13 வயது தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் ஒருவகை, 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் ஒருவகை, 40 வயதுக்கும் மெனோபோஸ் பருவமான 51 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஒருவகை. இறுதியாக மெனோபோஸ் பருவத்திற்கு பின்னர் உள்ள வயதுடைய பெண்கள் ஒருவகை ஆகும். இவ்வாறு பெண்களை நான்கு வகைகளாக பிரித்து இது குறித்து ஆராய்வோம்.
13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
பருவமடைந்தவுடன் ஆரம்பிக்கும் மாதவிடாய் போக்கினை உடைய இந்த வகைப் பெண்களில் மாதவிடாய்கள் ஒழுங்கற்றதாகவும் சில பேரில் கூடுதலாகவும் காணப்படும். இதற்கு காரணம் இந்த வயது எல்லை உடைய இளம் பெண்களில் சூலகங்களில் இருந்து சூல் முட்டைகள் ஒழுங்காக வெளிவரத் தொடங்கவில்லை. இதனால் இவர்களது உடலில் ஹோர்மோன்கள் சமநிலையற்றதாக இருந்து இவ்வாறான ஒழுங்கற்ற மாதவிடாய்களையும் சிலவேளைகளில் அதிகரித்த குருதிப் போக்கையும் ஏற்படுத்தும்.
இதற்கு வேறு எந்த பாரதூரமான காரணங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதனால் இந்நிலை உடைய பெண்களோ அவர்களது தாய்மாரோ இது குறித்து கலங்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாம் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்யும் இரும்புச் சத்து நிறைந்த விற்றமின்கள் வழங்குவோம். சில பேரில் இதனை கட்டுப்படுத்த புரலொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளோ மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளோ வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய்களை ஒழுங்காக்கி அவற்றின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். எனவே தயக்கமின்றி குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளை இந்த வயதுப் பெண்கள் இந்த நோக்கத்திற்காக வைத்திய ஆலோசனைப்படி எடுக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பட்சத்தில் இவர்களுக்கு இரத்தத்தில் குருதி உறையும் தாமதத்தை அறியும் பரிசோதனை, தையிரோயிட் ஹோர்மோனை அளக்கும் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படலாம்.
எனினும் காலப்போக்கில் இவ் வயது எல்லை உடைய பெண்களில் இப் பிரச்சினை வழமைக்கு திரும்பிவிடும். அதாவது இது தொடர வாய்ப்பில்லை. 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் இந்த வயது உடைய பெண்களில் மாதம் மாதம் சூலகங்களில் இருந்து சூல்முட்டை ஒழுங்காக வெளிவருவதால் மாதவிடாய்களும் ஒழுங்காக இருக்கும். சில பேரில் இது அதிகப்படியாக கட்டி கட்டியாக குருதிப் பெருக்கை ஏற்படுத்தினால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். ஒழுங்காகவும் அதிகமாகவும் மாதவிடாய் போக்கு இருக்கும்போது கர்ப்பப்பை கட்டிகள் பைப்புரோயிட்டுகள் காரணமாக இருக்க முடியும். இதனை ஸ்கான் மூலம் கண்டறியலாம்.
ஆனால் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் குருதி கசிவு மற்றும் தாம்பத்திய உறவின் பின்னர் ஏற்படும் குருதி கசிவு என்பன கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள், பொலிப்புகள், கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆகையால் கர்ப்பப்பையின் வாசலை (Cervix) நாம் பார்ப்பது அவசியம். இவ்வாறு எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்கான் பரிசோதனையும் சாதாரணமாக சிக்கல்கள் இல்லாது இருப்பின் இவ்வாறான ஒழுங்கான மாதவிடாய்களில் ஏற்படும் அதிகப்படியான குருதிப் போக்கு சில ஹோர்மோன் சிக்கல்களாலே ஏற்படுகின்றது. இதற்கு வயிறு கழுவுதலோ அல்லது டி சி (ஈ இ)யோ தேவைப்படாது.
மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்று புதிய முறையாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ள குடும்ப பெண்களுக்கு இதற்கு தீர்வாகவும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் ஹோர்மோன்களை கர்ப்பப் பையினுள் வெளியேற்றக்கூடிய கொயில்கள் அல்லது லூப்கள் போடப்படும். இது 5 வருடங்களுக்கு செயற்படக்கூடியது. இந்த புதிய முறையினால் பெண்களில் இப் பிரச்சினைகளுக்காக கர்ப்பப்பையை அகற்றும் நிலையை தவிர்க்கலாம். எனவே இது ஒரு பயனுள்ள தீர்வு. இதன்போது மாதவிடாய்கள் மிகவும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வருகின்றது.
] 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபோஸ் பருவம் வரை உள்ள பெண்கள் இவ் வயது எல்லை உடைய பெண்களில் மாதவிடாய் போக்கில் அதிகரிப்பு இருப்பின் இதற்கு தீர்வாக எடுத்தவுடன் ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது வேறு மாத்திரைகளையோ வழங்க முடியாது. ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு இருக்கும் போது கர்ப்பப்பையின் உட்புறத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களுக்கு சிறிது வாய்ப்புள்ளது. அதாவது 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலை இருக்கலாம். ஆகையால் ஸ்கான், வயிறு கழுவுதல் அல்லது டீ சி (D and C) ) அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தில் சிறிதளவு இழையத்தை பரிசோதனைக்கு அனுப்பும் (Biopsy) பரிசோதனையை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த சிக்கல்களும் இல்லையென பெறுபேறுகள் வரும் போது நாம் மாத்திரைகள் மூலம் அல்லது நான் முன்பு குறிப்பிட்ட ஹோர்மோன்களை வெளியிடும் லூப்கஸ் அல்லது கொயில்கள் கர்ப்பப்பையினுள் போடலாம்.
இதன்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவும் குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் இருந்து பெண்களின் கர்ப்பப்பையை அகற்றும் பழைய முறைகளில் இருந்து மீட்சி ஏற்படுகின்றது. இந்த லூப் சாதாரணமாக வழமையில் உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாட்டு லூப்பில் இருந்து வேறுபட்டது.
இதற்கும் சரிவராவிட்டால் குடும்பத்தை நிறைவு செய்த பெண்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பப்பை அகற்றாமல் கர்ப்பப்பையின் உட்சுவரை மட்டும் அகற்றும் சத்திர சிகிச்சை (Endome trial Abcation) பிரபல்யமடைந்து வருகின்றது. இதற்கான வசதிகள் இல்லாவிட்டால் கர்ப்பப் பையை அகற்ற வேண்டும். இதன்போது சூலகங்கள் அகற்ற வேண்டும் என்பது அல்ல. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் குருதிப் போக்கு மெனோபோஸ் ஒருவருக்கு ஏற்பட்டு மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் குருதி கசிவு ஏற்பட்டால் இதனை சற்று ஆபத்தான அறிகுறியாக எடுத்து ஸ்கான் மற்றும் இழையத்தை பரிசோதிக்கும் ஆடிணிணீண்தூ ஈ ச்ணஞீ இ பரிசோதனை மூலம் கர்ப்பப்பையின் உள் நிலவரங்களை அறிய வேண்டும்.
ஆகையால் மாதவிடாய்களில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சினை. இது குறித்து அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் பல. அத்துடன் வயது எல்லைகளை பொறுத்து காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும். ஆகையால் இன்று இது குறித்து உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
இவ்வாறு மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பையின் உள்சுவர் உடைந்து குருதியாக வெளியேறும். இது காரணமாக 35 நாட்கள் நீடிக்கும். இதன்போது வயிற்றில் இருந்து கழிவுகள் எதுவும் வேளியேறுவதில்லை. பெண்களது குருதியும் கர்ப்பப்பையின் உட்சுவருமே உடைந்து வெளியேறுகின்றது. பின்னர் மாதவிடாய் வரத் தொடங்கியதில் இருந்து 14ஆவது நாள் சூலகம் சூல் முட்டையை வெளியேற்றும். அடுத்ததாக 28ஆவது அல்லது 29ஆவது நாளில் அடுத்த மாதவிடாய்க்கான குருதிப் போக்கு ஆரம்பிக்கும். இதுவே ஒரு பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம். இந்த ஒழுங்கான மாதவிடாய் மற்றும் அளவான குருதிப் போக்கு ஒரு பெண்ணுக்கு வழமையானதும் அவளால் அதனை தாங்கக் கூடியதுமான ஒரு விடயம்.
ஆனால் இந்த மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றதாகவும் இது எந்த நேரத்தில் வருமோ எப்படி வருமோ என பெண்களை ஏங்க வைத்தும் அவர்களால் அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியாதவாறு கட்டி கட்டியாக அதிகப்படியான குருதிப் போக்கையும் ஏற்படுத்தினால் பெண்களது வாழ்க்கையில் இந்த மாதவிடாய் ஒரு பாரிய சிக்கலாக மாறுகிறது. பெண்கள் தடுமாறும் போது அவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பமும் தடுமாறத் தொடங்கும். ஆகையால் இந்த அதிகப்படியான மாதவிடாய் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வது பொருத்தமானது.
மாதவிடாய் போக்கின் அதிகரிப்புக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் பெண்ணின் வயதை பொறுத்து வேறுபடும். அதாவது 13 வயது தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் ஒருவகை, 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் ஒருவகை, 40 வயதுக்கும் மெனோபோஸ் பருவமான 51 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஒருவகை. இறுதியாக மெனோபோஸ் பருவத்திற்கு பின்னர் உள்ள வயதுடைய பெண்கள் ஒருவகை ஆகும். இவ்வாறு பெண்களை நான்கு வகைகளாக பிரித்து இது குறித்து ஆராய்வோம்.
13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
பருவமடைந்தவுடன் ஆரம்பிக்கும் மாதவிடாய் போக்கினை உடைய இந்த வகைப் பெண்களில் மாதவிடாய்கள் ஒழுங்கற்றதாகவும் சில பேரில் கூடுதலாகவும் காணப்படும். இதற்கு காரணம் இந்த வயது எல்லை உடைய இளம் பெண்களில் சூலகங்களில் இருந்து சூல் முட்டைகள் ஒழுங்காக வெளிவரத் தொடங்கவில்லை. இதனால் இவர்களது உடலில் ஹோர்மோன்கள் சமநிலையற்றதாக இருந்து இவ்வாறான ஒழுங்கற்ற மாதவிடாய்களையும் சிலவேளைகளில் அதிகரித்த குருதிப் போக்கையும் ஏற்படுத்தும்.
இதற்கு வேறு எந்த பாரதூரமான காரணங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதனால் இந்நிலை உடைய பெண்களோ அவர்களது தாய்மாரோ இது குறித்து கலங்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாம் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்யும் இரும்புச் சத்து நிறைந்த விற்றமின்கள் வழங்குவோம். சில பேரில் இதனை கட்டுப்படுத்த புரலொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளோ மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளோ வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய்களை ஒழுங்காக்கி அவற்றின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். எனவே தயக்கமின்றி குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளை இந்த வயதுப் பெண்கள் இந்த நோக்கத்திற்காக வைத்திய ஆலோசனைப்படி எடுக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பட்சத்தில் இவர்களுக்கு இரத்தத்தில் குருதி உறையும் தாமதத்தை அறியும் பரிசோதனை, தையிரோயிட் ஹோர்மோனை அளக்கும் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படலாம்.
எனினும் காலப்போக்கில் இவ் வயது எல்லை உடைய பெண்களில் இப் பிரச்சினை வழமைக்கு திரும்பிவிடும். அதாவது இது தொடர வாய்ப்பில்லை. 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் இந்த வயது உடைய பெண்களில் மாதம் மாதம் சூலகங்களில் இருந்து சூல்முட்டை ஒழுங்காக வெளிவருவதால் மாதவிடாய்களும் ஒழுங்காக இருக்கும். சில பேரில் இது அதிகப்படியாக கட்டி கட்டியாக குருதிப் பெருக்கை ஏற்படுத்தினால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். ஒழுங்காகவும் அதிகமாகவும் மாதவிடாய் போக்கு இருக்கும்போது கர்ப்பப்பை கட்டிகள் பைப்புரோயிட்டுகள் காரணமாக இருக்க முடியும். இதனை ஸ்கான் மூலம் கண்டறியலாம்.
ஆனால் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் குருதி கசிவு மற்றும் தாம்பத்திய உறவின் பின்னர் ஏற்படும் குருதி கசிவு என்பன கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள், பொலிப்புகள், கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆகையால் கர்ப்பப்பையின் வாசலை (Cervix) நாம் பார்ப்பது அவசியம். இவ்வாறு எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்கான் பரிசோதனையும் சாதாரணமாக சிக்கல்கள் இல்லாது இருப்பின் இவ்வாறான ஒழுங்கான மாதவிடாய்களில் ஏற்படும் அதிகப்படியான குருதிப் போக்கு சில ஹோர்மோன் சிக்கல்களாலே ஏற்படுகின்றது. இதற்கு வயிறு கழுவுதலோ அல்லது டி சி (ஈ இ)யோ தேவைப்படாது.
மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்று புதிய முறையாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ள குடும்ப பெண்களுக்கு இதற்கு தீர்வாகவும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் ஹோர்மோன்களை கர்ப்பப் பையினுள் வெளியேற்றக்கூடிய கொயில்கள் அல்லது லூப்கள் போடப்படும். இது 5 வருடங்களுக்கு செயற்படக்கூடியது. இந்த புதிய முறையினால் பெண்களில் இப் பிரச்சினைகளுக்காக கர்ப்பப்பையை அகற்றும் நிலையை தவிர்க்கலாம். எனவே இது ஒரு பயனுள்ள தீர்வு. இதன்போது மாதவிடாய்கள் மிகவும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வருகின்றது.
] 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபோஸ் பருவம் வரை உள்ள பெண்கள் இவ் வயது எல்லை உடைய பெண்களில் மாதவிடாய் போக்கில் அதிகரிப்பு இருப்பின் இதற்கு தீர்வாக எடுத்தவுடன் ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது வேறு மாத்திரைகளையோ வழங்க முடியாது. ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு இருக்கும் போது கர்ப்பப்பையின் உட்புறத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களுக்கு சிறிது வாய்ப்புள்ளது. அதாவது 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலை இருக்கலாம். ஆகையால் ஸ்கான், வயிறு கழுவுதல் அல்லது டீ சி (D and C) ) அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தில் சிறிதளவு இழையத்தை பரிசோதனைக்கு அனுப்பும் (Biopsy) பரிசோதனையை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த சிக்கல்களும் இல்லையென பெறுபேறுகள் வரும் போது நாம் மாத்திரைகள் மூலம் அல்லது நான் முன்பு குறிப்பிட்ட ஹோர்மோன்களை வெளியிடும் லூப்கஸ் அல்லது கொயில்கள் கர்ப்பப்பையினுள் போடலாம்.
இதன்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவும் குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் இருந்து பெண்களின் கர்ப்பப்பையை அகற்றும் பழைய முறைகளில் இருந்து மீட்சி ஏற்படுகின்றது. இந்த லூப் சாதாரணமாக வழமையில் உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாட்டு லூப்பில் இருந்து வேறுபட்டது.
இதற்கும் சரிவராவிட்டால் குடும்பத்தை நிறைவு செய்த பெண்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பப்பை அகற்றாமல் கர்ப்பப்பையின் உட்சுவரை மட்டும் அகற்றும் சத்திர சிகிச்சை (Endome trial Abcation) பிரபல்யமடைந்து வருகின்றது. இதற்கான வசதிகள் இல்லாவிட்டால் கர்ப்பப் பையை அகற்ற வேண்டும். இதன்போது சூலகங்கள் அகற்ற வேண்டும் என்பது அல்ல. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் குருதிப் போக்கு மெனோபோஸ் ஒருவருக்கு ஏற்பட்டு மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் குருதி கசிவு ஏற்பட்டால் இதனை சற்று ஆபத்தான அறிகுறியாக எடுத்து ஸ்கான் மற்றும் இழையத்தை பரிசோதிக்கும் ஆடிணிணீண்தூ ஈ ச்ணஞீ இ பரிசோதனை மூலம் கர்ப்பப்பையின் உள் நிலவரங்களை அறிய வேண்டும்.
ஆகையால் மாதவிடாய்களில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சினை. இது குறித்து அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் பல. அத்துடன் வயது எல்லைகளை பொறுத்து காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும். ஆகையால் இன்று இது குறித்து உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
Admin- புதுமுகம்
- பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0
Re: அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
நல்லதொரு தகவல் மங்கையர்களுக்கு பயனுடையதாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி தலைவா....... :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்
» பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தூக்கமும்......
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்.
» தேயும் எலும்புகளும், தீர்வுகளும்...
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்!
» பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தூக்கமும்......
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்.
» தேயும் எலும்புகளும், தீர்வுகளும்...
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|