Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
5 posters
Page 1 of 1
தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
சென்னை: மறைமலையடிகள் தலைமையிலான புலவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
`தை` முதல் நாளுக்குப் பதிலாக சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று மாற்றி நேற்று அதிமுக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இது குறித்து கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: `தை' முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
கருணாநிதி: மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.
அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியில், `தை` முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டித்தான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்தோம்.
கேள்வி: திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து அதிமுக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்திருக்கிறார்களே?
பதில்: அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
தமிழ்ப் புத்தாண்டை மாற்றக்கூடாது-ராமதாஸ்:
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை மாற்றி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வகை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இது தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தை மாதம் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று நானும், தமிழ் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே கடந்த 2008ம் ஆண்டு தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பதற்கான சட்ட திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது. இந் நிலையில், தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல.
சித்திரை முதல் நாள் இந்துக்களின் புத்தாண்டு என்ற போதிலும், குஜராத்தியர்களும், மராட்டியர்களும் தங்களது இனத்தின் அடிப்படையில் தனி புத்தாண்டை கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் முன்தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் உரிமையை பறிக்கக்கூடாது.
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
கி.வீரமணி கண்டனம்:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில், ஏற்கனவே தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் `தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.
அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அதிமுக அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
ராம்தாஸ ஆட்கள் வாயே திறக்காமல் சட்டசபையில் இருந்துவிட்டு இப்ப என்ன அறிக்கை வேண்டிருக்கு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அப்படியே அம்மாவிடமும் வந்துள்ளது அம்மா பார்த்து கவனம்
விழுந்திரப்போறீங்கள்
விழுந்திரப்போறீங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
மெதுவாக ஆடினால் , நிலை தடுமாறும் நிலைமை வரும் பொது, சுதாரித்துக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
:,”,: :,”,: @.sikkandar_badusha wrote:மெதுவாக ஆடினால் , நிலை தடுமாறும் நிலைமை வரும் பொது, சுதாரித்துக்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு,,
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» இவர் எடுத்த முடிவு சரியா?
» சுய விளம்பரத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய கருணாநிதி: ஜெ தாக்கு
» திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
» தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்: 'அப்பப்பப்பா'...பாஜக: 'அடடடடடடா'...விஸ்வ ஹிந்து பரிஷத்!
» இவர் எடுத்த முடிவு சரியா?
» சுய விளம்பரத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய கருணாநிதி: ஜெ தாக்கு
» திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
» தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்: 'அப்பப்பப்பா'...பாஜக: 'அடடடடடடா'...விஸ்வ ஹிந்து பரிஷத்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|