Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
3 posters
Page 1 of 1
போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
புதுடெல்லி, ஆக.28-
ஊழலுக்கு
எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி
காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16-ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும்
ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி
ராம்லீலா மைதானத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்
திரண்டு அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு
அலை உருவானதையடுத்து மத்திய அரசு அன்னாஹசாரே குழுவினருடன் பேச்சு
நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அன்னா
ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
அடுத்தக்கட்டமாக
மத்திய மந்திரி விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அரசுக்கும், அன்னாஹசாரே
குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அன்னாஹசாரே 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று
நிபந்தனை விதித்தார். அன்னா ஹசாரே கோரிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட
குழுவினருடனும் மத்திய மந்திரிகளுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர்
அன்னாஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதற்கான
உறுதி மொழி கடிதம் அன்னா ஹசாரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரும்
அன்னாஹசாரேயின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத்
தொடர்ந்து அன்னாஹசாரே நேற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கோரிக்கைகளை ஏற்று பாராளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றினால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று
அன்னாஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால்
12-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இது மத்திய அரசுக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை
ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திலும், மேல்-
சபையிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.
இது
ஒருபுறம் இருக்க மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், நிதி மந்திரி
பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரே குழுவைச்
சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச்சு நடத்தினார். பாராளுமன்றத்தில் அன்னா
ஹசாரேயின் 3 கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட சம்மதம் தெரிவித்தார். நேற்று மாலை இந்த
தகவல் பரவியதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்கு பின் நேற்று இரவு 8
மணிக்கு ஹசாரேயின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்கும் தீர்மானத்தை நிதி மந்திரி
பிரணாப்முகர்ஜி கொண்டு வந்தார்.
ஆளும் கட்சியான
காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டன. எம்.பி.க்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம்
பாராளுமன்றத்தில் நிறைவேறியது. டெல்லி மேல்- சபையிலும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், காங்கிரஸ்
எம்.பி. சந்தீப் தீட்சித் ஆகியோர் அன்னா ஹசாரேயை நேற்று இரவு சந்தித்து
பாராளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தின் நகலையும், பிரதமரின்
கடிதத்தையும் அவரிடம் கொடுத்தனர்.
அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-
உங்கள்
அனைவரது அனுமதியுடன் எனது உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு
முடித்துக் கொள்கிறேன். இது ஜன்லோக்பாலுக்கு கிடைத்த பாதி வெற்றிதான். முழு
வெற்றியை கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். எனது 3 கோரிக்கைகளை ஏற்று
தீர்மானத்தை நிறை வேற்றிய எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.
இதை
கேட்டதும் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் விண்ணை முட்டும்
வண்ணம் கரகோஷமும், வாழ்த்து கோஷமும் எழுப்பி னார்கள். தேசிய கொடியை
அசைத்தவாறு மைதானம் முழுவதும் கொண்டாடி னார்கள். இதேபோல் நாடு முழு வதும்
அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.
பாராளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேறியதும் உடனடியாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வில்லை.
ஏனென்றால் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட அவர்
விரும்பவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை
முடித்துக் கொள்ள திட்டமிட்டார். இதையட்டி இன்று காலை முதலே ராம்லீலா
மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மேடையில் அன்னா ஹசாரே காந்தி
குல்லா அணிந்து இருந்தார்.
அவரை சுற்றிலும்
காந்திகுல்லா அணிந்த சிறுவர்- சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். முதலில்
அரவிந்த் கெக்ரிவால் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அன்னா ஹசாரேயின்
கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மத்திய
அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நாடு
முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் வாழ்த்து
தெரிவித்தார். தலித்- முஸ்லிம் சிறுமிகள் அதன்பிறகு டெல்லியில் வசிக்கும்
ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 வயது தலித் சிறுமி சிம்ரன், முஸ்லிம் சிறுமி
இக்ரா ஆகியோர் அன்னாஹசாரேக்கு தேன் கலந்த இளநீர் கொடுத்தனர்.
அதை
வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அப்போது அன்னா ஹசாரே வாழ்க
என்று கோஷமிட்டனர். தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது. அதை அன்னாஹசாரே
கைதட்டி ரசித்தார். ஆதரவாளர்கள் மத்தியில் அன்னாஹசாரே நன்றி தெரிவித்து
பேசினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதந்தா மெடிசிட்டி மருத்துவ
மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.
அவரதுஉடல் உறுப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பரிசோதனை
செய்யப்பட்டது. 12 நாளில் அவரது உடல் எடை 7 கிலோ குறைந்து 64 கிலோவாக
இருக்கிறது.
சில நாட்கள் சிகிச்சைக்குப்பின் அவர்
வீடு திரும்புவார் என்று அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
அன்னாஹசாரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான
சித்தி கிராமத்திலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள்.
மும்பை, பெங்களூர், ஆமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் ஆதரவாளர்கள்
வெற்றியை கொண்டாடினார்கள்.
மாலை மலர்
ஊழலுக்கு
எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி
காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16-ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும்
ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி
ராம்லீலா மைதானத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்
திரண்டு அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு
அலை உருவானதையடுத்து மத்திய அரசு அன்னாஹசாரே குழுவினருடன் பேச்சு
நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அன்னா
ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
அடுத்தக்கட்டமாக
மத்திய மந்திரி விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அரசுக்கும், அன்னாஹசாரே
குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அன்னாஹசாரே 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று
நிபந்தனை விதித்தார். அன்னா ஹசாரே கோரிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட
குழுவினருடனும் மத்திய மந்திரிகளுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர்
அன்னாஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதற்கான
உறுதி மொழி கடிதம் அன்னா ஹசாரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரும்
அன்னாஹசாரேயின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத்
தொடர்ந்து அன்னாஹசாரே நேற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கோரிக்கைகளை ஏற்று பாராளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றினால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று
அன்னாஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால்
12-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இது மத்திய அரசுக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை
ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திலும், மேல்-
சபையிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.
இது
ஒருபுறம் இருக்க மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், நிதி மந்திரி
பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரே குழுவைச்
சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச்சு நடத்தினார். பாராளுமன்றத்தில் அன்னா
ஹசாரேயின் 3 கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட சம்மதம் தெரிவித்தார். நேற்று மாலை இந்த
தகவல் பரவியதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்கு பின் நேற்று இரவு 8
மணிக்கு ஹசாரேயின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்கும் தீர்மானத்தை நிதி மந்திரி
பிரணாப்முகர்ஜி கொண்டு வந்தார்.
ஆளும் கட்சியான
காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டன. எம்.பி.க்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம்
பாராளுமன்றத்தில் நிறைவேறியது. டெல்லி மேல்- சபையிலும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், காங்கிரஸ்
எம்.பி. சந்தீப் தீட்சித் ஆகியோர் அன்னா ஹசாரேயை நேற்று இரவு சந்தித்து
பாராளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தின் நகலையும், பிரதமரின்
கடிதத்தையும் அவரிடம் கொடுத்தனர்.
அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-
உங்கள்
அனைவரது அனுமதியுடன் எனது உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு
முடித்துக் கொள்கிறேன். இது ஜன்லோக்பாலுக்கு கிடைத்த பாதி வெற்றிதான். முழு
வெற்றியை கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். எனது 3 கோரிக்கைகளை ஏற்று
தீர்மானத்தை நிறை வேற்றிய எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.
இதை
கேட்டதும் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் விண்ணை முட்டும்
வண்ணம் கரகோஷமும், வாழ்த்து கோஷமும் எழுப்பி னார்கள். தேசிய கொடியை
அசைத்தவாறு மைதானம் முழுவதும் கொண்டாடி னார்கள். இதேபோல் நாடு முழு வதும்
அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.
பாராளுமன்றத்தில்
தீர்மானம் நிறைவேறியதும் உடனடியாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வில்லை.
ஏனென்றால் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட அவர்
விரும்பவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை
முடித்துக் கொள்ள திட்டமிட்டார். இதையட்டி இன்று காலை முதலே ராம்லீலா
மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மேடையில் அன்னா ஹசாரே காந்தி
குல்லா அணிந்து இருந்தார்.
அவரை சுற்றிலும்
காந்திகுல்லா அணிந்த சிறுவர்- சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். முதலில்
அரவிந்த் கெக்ரிவால் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அன்னா ஹசாரேயின்
கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மத்திய
அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நாடு
முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் வாழ்த்து
தெரிவித்தார். தலித்- முஸ்லிம் சிறுமிகள் அதன்பிறகு டெல்லியில் வசிக்கும்
ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 வயது தலித் சிறுமி சிம்ரன், முஸ்லிம் சிறுமி
இக்ரா ஆகியோர் அன்னாஹசாரேக்கு தேன் கலந்த இளநீர் கொடுத்தனர்.
அதை
வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அப்போது அன்னா ஹசாரே வாழ்க
என்று கோஷமிட்டனர். தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது. அதை அன்னாஹசாரே
கைதட்டி ரசித்தார். ஆதரவாளர்கள் மத்தியில் அன்னாஹசாரே நன்றி தெரிவித்து
பேசினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதந்தா மெடிசிட்டி மருத்துவ
மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.
அவரதுஉடல் உறுப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பரிசோதனை
செய்யப்பட்டது. 12 நாளில் அவரது உடல் எடை 7 கிலோ குறைந்து 64 கிலோவாக
இருக்கிறது.
சில நாட்கள் சிகிச்சைக்குப்பின் அவர்
வீடு திரும்புவார் என்று அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
அன்னாஹசாரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான
சித்தி கிராமத்திலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள்.
மும்பை, பெங்களூர், ஆமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் ஆதரவாளர்கள்
வெற்றியை கொண்டாடினார்கள்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அன்னா ஹசாரே வுக்கு கிடைத்த வெற்றியல்ல இது கையாலாகாத மத்திய அரசின் தோல்வி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அவங்க தோற்றதால்தான் இவரு வெற்றி :,;:jasmin wrote:அன்னா ஹசாரே வுக்கு கிடைத்த வெற்றியல்ல இது கையாலாகாத மத்திய அரசின் தோல்வி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அருமையாகச் சொன்னிங்க அக்காjasmin wrote:அன்னா ஹசாரே வுக்கு கிடைத்த வெற்றியல்ல இது கையாலாகாத மத்திய அரசின் தோல்வி
Similar topics
» உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னா ஹசாரே கைது: ஊழல் எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்படுவதாக கண்டனங்கள்
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
» இந்துக்கள் மனதை புண்படுத்துவதை கண்டித்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் “திடீர்” உண்ணாவிரதம்
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
» இந்துக்கள் மனதை புண்படுத்துவதை கண்டித்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் “திடீர்” உண்ணாவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|