சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Khan11

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

3 posters

Go down

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Empty 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

Post by யாதுமானவள் Mon 29 Aug 2011 - 7:36

காஞ்சிபுரம்: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது உயிர்களைக் காக்க வலியுறுத்தி செப்டம்பர் 8ம் தேதி பத்து லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை அருகே மறைமலை நகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடந்தது. பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.

அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்க செப்டம்பர் 9-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க தமிழக முதல்வரிடம் மட்டுமே கோரிக்கை வைக்கவேண்டிய சூழல் இருக்கிறது.

முதல்வர் துரிதமாகச் செயல்பட்டு மூவரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 6-ம் தேதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பொது மக்களை வேலூருக்குத் திரட்டுவோம். செப்டம்பர் 8-ம் தேதி 10 லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்.

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. இப்போது இம்மூவரையும் மீட்பதற்காக வேலூர் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அவசியம் என்றார்.

விடுதலைச் சிறுத்தைககள் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,

தனக்கு எதிரானவர்கள் எந்த நாட்டை ஆண்டாலும் அவர்களை அழிப்பதைக் குறியாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சதாம் உசேனைக் கொன்றதும் இப்படித்தான். ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச சதி உள்ளது என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டபோதும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

ஒருவேளை ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தாலும், அவர்கள் எப்போதும் கூட்டுச் சதி செய்வது கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைமை எடுக்கும் முடிவு அவர்களின் முக்கிய நிர்வாகிகளுக்கே சில சமயங்களில் தெரியாது.

மாபெரும் தலைவரான ராஜீவ்காந்தியைக் கொல்லும்போது பேரறிவாளனிடம் பேட்டரி வாங்கித்தான் கொல்ல வேண்டுமா? விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இவர்களைத் தூக்கில் போடவேண்டிய அவசியம் இல்லை.

11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து அவர்களை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? எனவே 3 பேரின் உயிரைக் காப்பாற்ற வேலூர் சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவேண்டும் என்றார்.

முன்னதாக மாநாட்டுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சுப. வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்

மாநாட்டில் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை டாக்டர் ராமதாஸ் வாசித்தார். அதை ஆதரித்து அனைவரும் கைகளைத் தட்டி வரவேற்றனர்.

அந்தத் தீர்மானம்:

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கலிடுவது, அவர்களுக்கு இரண்டாவது தண்டனையாக அமைந்துவிடும். தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், கலைத்துறையினர், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், வணிகர் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

மக்களின் இந்த உணர்வுகளை மதித்தும், மனித நேயத்துடனும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு விட்டதால் அவர்களின் தண்டனையை நிறுத்திவைப்பதற்கான நிர்வாக தடையாணையை தமிழக அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Empty Re: 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 29 Aug 2011 - 8:37

அனர்த்தங்களற்ற போராட்டம் வரவேற்கத்தக்கது உயிர்களைக் காத்திட அரசிடம் கோத்திரமாக கோரலாம்
பொறுத்திருந்து பார்ப்பபோம் போராட்டம் கை தருமா என்று


10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Empty Re: 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 8:52

பெரிய போராட்டம் எல்லாம் வேண்டாம் கண்டிப்பாக இவர் மூவருக்கும் தூக்குத் தண்டனை கிடையாது கருணை உண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ் Empty Re: 10 லட்சம் பேரைத் திரட்டி செப். 8ல் வேலூர் சிறையை முற்றுகையிடுவோம்- டாக்டர் ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum