சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அர்த்தமற்ற அதேநாள்.... Khan11

அர்த்தமற்ற அதேநாள்....

+12
விஜய்
Atchaya
கலைவேந்தன்
முனாஸ் சுலைமான்
rinos
நண்பன்
kutty
kalainilaa
எந்திரன்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
ஹாசிம்
16 posters

Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty அர்த்தமற்ற அதேநாள்....

Post by ஹாசிம் Wed 31 Aug 2011 - 10:22

அர்த்தமற்ற அதேநாள்.... 19826
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை

விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது

உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது

அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது

நிமிடங்களின் நகர்வுகளில்
காத்திருப்பின் காதல்களோடு
இன்பத்தின் தேடல்களின்னும்
அடைந்திடாது திண்டாடுகிறது

நாற்புற சுவர்களின் நடுவில்
சிறைப்பட்ட வாழ்வோடு
மடிகணனியின் துணையின்னும்
நிஜமாய்த் தெரிகிறது

மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 11:00

நிதர்சன வரிகள் அனைத்தும் சோகம் கலந்து சுமைகளோடு எழுதிய வரிகள் மனதை கணக்கவைத்து கண்ணீர் துளிகளை காணிகையாக சமர்பிக்கிறேன் வரிகளுக்கு.

சுமைதீர்க்க சுமையான வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள் தோழரே





உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 31 Aug 2011 - 18:36

*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் சோகம் கலந்து சுமைகளோடு எழுதிய வரிகள் மனதை கணக்கவைத்து கண்ணீர் துளிகளை காணிகையாக சமர்பிக்கிறேன் வரிகளுக்கு.

சுமைதீர்க்க சுமையான வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள் தோழரே




@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by எந்திரன் Wed 31 Aug 2011 - 19:06

உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள் அர்த்தமற்ற அதேநாள்.... 800522 அர்த்தமற்ற அதேநாள்.... 800522
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by kalainilaa Wed 31 Aug 2011 - 20:19

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது.

பாராட்டுகள்,தோழரே.தொடருங்கள் உங்கள் கவிதை வேட்டையை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by kutty Thu 1 Sep 2011 - 7:06

சூப்பர் அண்ணா அருமை அர்த்தமற்ற அதேநாள்.... 587993
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 11:01

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

ஒவ்வொரு வரிகளும்
என் மனதை வருடி விட்டது
மனம் நெகிழ்ந்து விட்டது
வாழ்த்துக்கள் ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by rinos Thu 1 Sep 2011 - 13:22

எந்திரன் wrote:உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள் அர்த்தமற்ற அதேநாள்.... 800522 அர்த்தமற்ற அதேநாள்.... 800522
@. @. :!#:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 13:30

நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை



சோகமும் அர்த்தமும் உள்ள கவிதைக்கு :flower: கவிஞரே :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 13:39

இல்லம் விட்டு அயலகம் ஏகும்போதே
நல்லன யாவுமே நழுவிப் போகும்.
முல்லை சூடிய மனையாள் தொலைவில்
இல்லை அங்கே ஆணுக்கு அங்கீகாரம்...


இது தான் வாழ்க்கை இது தான் சோகம்..!

அருமையான கவிதைகள் ஆயிரத்துக்கு சொந்தக்காரர் ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துகள்..!


..
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 15:07

கலைவேந்தன் wrote:இல்லம் விட்டு அயலகம் ஏகும்போதே
நல்லன யாவுமே நழுவிப் போகும்.
முல்லை சூடிய மனையாள் தொலைவில்
இல்லை அங்கே ஆணுக்கு அங்கீகாரம்...


இது தான் வாழ்க்கை இது தான் சோகம்..!

அருமையான கவிதைகள் ஆயிரத்துக்கு சொந்தக்காரர் ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துகள்..!


..
ஆயிரமா இது எங்கோ இடிக்குதே @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by Atchaya Thu 1 Sep 2011 - 15:45

நெஞ்சை சுடும் வரிகள்....ஹாசீம்
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு

பதிவிற்கு நன்றி...நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by விஜய் Thu 1 Sep 2011 - 19:24

நண்பன் wrote:உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

ஒவ்வொரு வரிகளும்
என் மனதை வருடி விட்டது
மனம் நெகிழ்ந்து விட்டது
வாழ்த்துக்கள் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... 111433 அர்த்தமற்ற அதேநாள்.... 111433
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 12:05

மிக்க நன்றிகள் அனைவருக்கும் தோழரகளே அருமையான ஆதரவான பின்னூட்டங்களின் ஆனந்தமுற்றேன் நன்றிகள்


அர்த்தமற்ற அதேநாள்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 12:51

நெஞ்சகத்து சோகமெல்லாம் மாறிடும் நிர்க்குமிழாய்
கொஞ்சிடும் வஞ்சியவள் துடித்துனது மடி சேர்வாள்.
உறவுகள் ஓடிவந்து உவப்புடனே உன்பக்கம்
நிறைவுடன் நின்றிடுவர் நிம்மதியடை என்தோழா...

ஆழமான அருமைக் கருத்துடன் கூடிய கவிதை ஹாஷிம்
அன்புடன் அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by பாயிஸ் Sat 3 Sep 2011 - 13:31

எம் நிலமையை நிஜமாகத்தந்து அதிலும் குறிப்பாக கடல் கடந்த எம்மவரின் வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக உங்களின் தவிப்பு என்னையும் பாதித்துள்ளது சில வரிகள் என் உள்ளத்தை வருடினாலும் அவைகள் இன்னும் என் உள்ளத்தை உறசிச் கொண்டே இருக்கிறது. எம் விதி தலையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை சுமக்கின்ற உள்ளங்கள் ஏதோ ஒரு சுகத்தை தேடத்ததான் செய்கிறது. இவ்வாழ்கையை வெறருத்த உள்ளங்களோடு போராடத்தான் முடிகிறதே தவிர அதை வெல்ல முடியாமல் நாம் போராடுவது யாருக்குத்தான் தெரியுமோ..?

உன் வரிகள் வலியானதால்
என் இதயமும் அழுகிறது அர்த்தமற்ற அதேநாள்.... 876805


உன் மெய்யான் உணர்வுகள்
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது

இந்தக்கவிதை வேதனைகளைச் சுமந்து வந்தாலும் எங்கள் உணர்வுகளை வென்று நிற்கிறது நன்றி தோழா நன்றி


Last edited by பாயிஸ் on Sat 3 Sep 2011 - 13:44; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 13:42

பாயிஸ் wrote:எம் நிலமையை நிஜமாகத்தந்து அதிலும் குறிப்பாக கடல் கடந்த எம்மவரின் வாழ்கையை பிறதிபலிக்கும் விதமாக உங்களின் தவிப்பு என்னையும் பாதித்துள்ளது சில வரிகள் என் உள்ளத்தை வருடினாலும் அவைகள் இன்னும் என் உள்ளத்தை உறசிச் கொண்டே இருக்கிறது. எம் விதி தலையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை சுமக்கின்ற உள்ளங்கள் ஏதோ ஒரு சுகத்தை தேடத்ததான் செய்கிறது. இவ்வாழ்கையை வெறருத்த உள்ளங்களோடு போராடத்தான் முடிகிறதே தவிர அதை வெல்ல முடியாமல் நாம் போராடுவது யாருக்குத்தான் தெரியுமோ..?

உன் வரிகள் வலியானதால்
என் இதயமும் அழுகிறது அர்த்தமற்ற அதேநாள்.... 876805


உன் மெய்யான் உணர்வுகள்
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது

இந்தக்கவிதை வேதனைகளைச் சுமந்து வந்தாலும் எங்கள் உணர்வுகளை வென்று நிற்கிறது நன்றி தோழா நன்றி

நன்றி தோழா எம்மவர்களின் பிரதிபலிப்பே கவிதை என்பதை உணர முடிந்த வார்த்தைகளில் கவிதைக்கு மகுடம் சூடுகிறது நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 13:49

அப்துல்லாஹ் wrote:நெஞ்சகத்து சோகமெல்லாம் மாறிடும் நிர்க்குமிழாய்
கொஞ்சிடும் வஞ்சியவள் துடித்துனது மடி சேர்வாள்.
உறவுகள் ஓடிவந்து உவப்புடனே உன்பக்கம்
நிறைவுடன் நின்றிடுவர் நிம்மதியடை என்தோழா...

ஆழமான அருமைக் கருத்துடன் கூடிய கவிதை ஹாஷிம்
அன்புடன் அப்துல்லாஹ்

நன்றி தோழரே ஆறுதல் வரியில் ஆனந்தம் எனக்கு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:50

தீராத சுமைகளின்னும் கனமாய்க் கனக்கிறது

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 18:23

Atchaya wrote:தீராத சுமைகளின்னும் கனமாய்க் கனக்கிறது

:!+: :!+:

மிக்க நன்றி அண்ணா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 21:22

ஹாசிம் wrote:அர்த்தமற்ற அதேநாள்.... 19826
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை

விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
விரும்பி ஏற்காத துரவரமாய் வெளிநாட்டு வாழ்க்கை அமைந்து விட்ட கொடுமையை ஆழமாய் பதித்துள்ளீர்
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
"உறவுகளின் பிரிவென்னும் நோய்க்கு மருந்தே இல்லை.. தீராத வலிமட்டுமே தொடர்கிறது... அருமை ஹாசிம்
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது
"தொடுதலில்லாத தொலைத்தொடர்பு... தேங்கிக்கிடக்கும் ஆசைகளுக்கு வெறும் ஒத்தடமே... உவகை விம்முகிறது... வலியுணர்த்தும் வரிகள் ஹாசிம்

மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
"மழலையின் ஏக்கமும் நம் மனதின் ஏக்கமும் அதை உணர்ந்தவர்களாலே அறிய முடியும்... ஆறுதல் சொல்லமுடியா வேதனைஇது

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
- அருமையான வரிகள்... வழிகள் தான் ஆனால் அதுவும் மங்களமாகத் தெரிகிறதே... மங்கலான வாழ்க்கையையும்மங்கலமாகக் காணும் யதார்த்த மனிதன் நீர்....சபாஷ் !

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
"புனிதப் பெருநாளே அர்த்தமற்றதாக ஆகிவிட்டதென்று கூறும் அளவிற்கு சொந்த பந்தங்களின் தொடுதலும் தொணதொணப்பும் இல்லாமல்.... எப்போதும் போன்றே இதுவும் ஒரு நாளாக ஆகிவிட்டதென்று கூறும் விரக்தி...
எல்லாம் இருந்தும் எஹ்டுவும் இல்லா நிலையே வெளிநாட்டு வாழ்க்கை என உணர்த்திவிட்டீர் ஹாசிம்..

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
அருமையான வரிகள்... மறுமைக்காக வாழும் வாழ்க்கையில் இம்மையிலும் மாறுதல் கேட்டு கையேந்தி பிரார்த்தனையோடு.... அருமையாய் கவிதையைக் கொண்டு சென்றுள்ளீர்....
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித மாறுதல்.... தேவைப்படுகிறது....

நல்ல கவிதை ஹாசிம்... வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by யாதுமானவள் Fri 16 Sep 2011 - 21:23

ஹாசிம் wrote:அர்த்தமற்ற அதேநாள்.... 19826
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை

விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
விரும்பி ஏற்காத துரவரமாய் வெளிநாட்டு வாழ்க்கை அமைந்து விட்ட கொடுமையை ஆழமாய் பதித்துள்ளீர்
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
"உறவுகளின் பிரிவென்னும் நோய்க்கு மருந்தே இல்லை.. தீராத வலிமட்டுமே தொடர்கிறது... அருமை ஹாசிம்
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது
"தொடுதலில்லாத தொலைத்தொடர்பு... தேங்கிக்கிடக்கும் ஆசைகளுக்கு வெறும் ஒத்தடமே... உவகை விம்முகிறது... வலியுணர்த்தும் வரிகள் ஹாசிம்

மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
"மழலையின் ஏக்கமும் நம் மனதின் ஏக்கமும் அதை உணர்ந்தவர்களாலே அறிய முடியும்... ஆறுதல் சொல்லமுடியா வேதனைஇது

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
- அருமையான வரிகள்... வழிகள் தான் ஆனால் அதுவும் மங்களமாகத் தெரிகிறதே... மங்கலான வாழ்க்கையையும்மங்கலமாகக் காணும் யதார்த்த மனிதன் நீர்....சபாஷ் !

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
"புனிதப் பெருநாளே அர்த்தமற்றதாக ஆகிவிட்டதென்று கூறும் அளவிற்கு சொந்த பந்தங்களின் தொடுதலும் தொணதொணப்பும் இல்லாமல்.... எப்போதும் போன்றே இதுவும் ஒரு நாளாக ஆகிவிட்டதென்று கூறும் விரக்தி...
எல்லாம் இருந்தும் எஹ்டுவும் இல்லா நிலையே வெளிநாட்டு வாழ்க்கை என உணர்த்திவிட்டீர் ஹாசிம்..

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
அருமையான வரிகள்... மறுமைக்காக வாழும் வாழ்க்கையில் இம்மையிலும் மாறுதல் கேட்டு கையேந்தி பிரார்த்தனையோடு.... அருமையாய் கவிதையைக் கொண்டு சென்றுள்ளீர்....
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித மாறுதல்.... தேவைப்படுகிறது....

நல்ல கவிதை ஹாசிம்... வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 22:59

மனதுக்கு ஆறுதலாகவும் கண்களில் நீரும் பனிக்கிறது கவிதை எழுதும் போதில்லாத முழுமை உங்களின் விரிவான பின்னோட்டத்தில் கிடைத்ததாய் உணர்கிறேன் வாழ்க்கையின் வேதனைகளை எத்தனை பக்கம் எழுதினாலும் தகும் நன்றி அக்கா மிக்க நன்றி


அர்த்தமற்ற அதேநாள்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by Atchaya Sat 17 Sep 2011 - 5:35

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது

:!+: :!+: :!+: :];: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by இன்பத் அஹ்மத் Sat 17 Sep 2011 - 6:20

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தற்று
அதேநாளாய்க் கழிகிறது


அடுத்த கனம் மரணம் என்று வாழும் மனிதர்கள்
நிலமையை தீர்க்க யார்தான் உதவுவாரோ.....

அருமையான வரிகள் படிக்கும் போது கண்ணீர் சொட்டும் வரிகள்
நன்றி கவியரசர் ஹாசிம் சார்


இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அர்த்தமற்ற அதேநாள்.... Empty Re: அர்த்தமற்ற அதேநாள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum