Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்: ஸ்டாலின்
2 posters
Page 1 of 1
தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்: ஸ்டாலின்
சேலம்: சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் கொட்டு வாங்குவார் என்று தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழி நடத்தப்படுவதுதான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது.
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா நடந்து கொண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
2002 வருடம் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.
முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு ராணி மேரி கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று சொன்னார். மக்கள் எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த இடத்தையும் விட்டுவிட்டு, கோட்டூர்புரத்தில் இப்போது அறிஞர் அண்ணா நூல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். ஆனால், அதில் எதையும் அவர் செய்யவில்லை.
ஜெயலலதா கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்தோம். இப்போது அந்த கட்டிடம் சரியில்லை என்கிறார். நாங்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்.
இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிஷன் போட்டுள்ளார்.
ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என் மீது போடப்பட்ட விசாரனை கமிஷன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.
தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறு மாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறு மாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம்.
சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைப்போல் தலைமைச் செயலக வழக்கிலும், கடைசியில் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்.
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, இந்த இயக்கம் பதவிக்கு வரவேண்டும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான் தொடங்குகிறேன் என்று அண்ணா சொன்னார். அதைத்தான் கருணாநிதி தலைமையில் திமுக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. தமிழ் நாட்டு மகக்ளின் நலன் தான் முக்கியம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம் என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கத்திலேயே கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் திரளான திமுகவினர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க கூடிய பெரிய வேலையை ஜெயலலிதா எனக்கு கொடுத்துள்ளார்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சிறைகளுக்கும் சென்று திமுகவினரை பார்க்கும் வாய்ப்பையும் அவர் நிச்சயம் தருவார். நான் அதற்குத் தயார்.
திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த விஷயம் எங்கள் வெற்றியை பாதிக்காது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகள், தேர்தலில் திமுகவுக்கு உதவும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்றார்.
தி.மு.க சட்டப் பிரிவு கூட்டம் கூடுகிறது:
இந் நிலையில் நிலமோசடி வழக்குகளில் தி.மு.கவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதையடுத்து, வரும் செப்டம்பர் 10ம் தேதி அக்கட்சியின் சட்டப் பிரிவு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இக் கூட்டம் நடக்கவுள்ளது.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழி நடத்தப்படுவதுதான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது.
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா நடந்து கொண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
2002 வருடம் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.
முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு ராணி மேரி கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று சொன்னார். மக்கள் எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த இடத்தையும் விட்டுவிட்டு, கோட்டூர்புரத்தில் இப்போது அறிஞர் அண்ணா நூல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். ஆனால், அதில் எதையும் அவர் செய்யவில்லை.
ஜெயலலதா கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்தோம். இப்போது அந்த கட்டிடம் சரியில்லை என்கிறார். நாங்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்.
இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிஷன் போட்டுள்ளார்.
ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என் மீது போடப்பட்ட விசாரனை கமிஷன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.
தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறு மாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறு மாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம்.
சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைப்போல் தலைமைச் செயலக வழக்கிலும், கடைசியில் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்.
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, இந்த இயக்கம் பதவிக்கு வரவேண்டும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான் தொடங்குகிறேன் என்று அண்ணா சொன்னார். அதைத்தான் கருணாநிதி தலைமையில் திமுக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. தமிழ் நாட்டு மகக்ளின் நலன் தான் முக்கியம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம் என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கத்திலேயே கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் திரளான திமுகவினர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க கூடிய பெரிய வேலையை ஜெயலலிதா எனக்கு கொடுத்துள்ளார்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சிறைகளுக்கும் சென்று திமுகவினரை பார்க்கும் வாய்ப்பையும் அவர் நிச்சயம் தருவார். நான் அதற்குத் தயார்.
திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த விஷயம் எங்கள் வெற்றியை பாதிக்காது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகள், தேர்தலில் திமுகவுக்கு உதவும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்றார்.
தி.மு.க சட்டப் பிரிவு கூட்டம் கூடுகிறது:
இந் நிலையில் நிலமோசடி வழக்குகளில் தி.மு.கவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதையடுத்து, வரும் செப்டம்பர் 10ம் தேதி அக்கட்சியின் சட்டப் பிரிவு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இக் கூட்டம் நடக்கவுள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்: ஸ்டாலின்
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கத்திலேயே கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் திரளான திமுகவினர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க கூடிய பெரிய வேலையை ஜெயலலிதா எனக்கு கொடுத்துள்ளார்.
நல்லவேளை உங்களை பார்க்க வேற யாரும் வரவைக்கவில்லை இவர் .
நல்லவேளை உங்களை பார்க்க வேற யாரும் வரவைக்கவில்லை இவர் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.கவை அழிக்க நினைக்கிறார் ஜெயலலிதா : மு.க.ஸ்டாலின் குற்றச்சா
» எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி
» கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்திற்கான செயலக கட்டடத்தை கட்டுவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பத
» சத்யராஜின் தலைமை
» தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.கவை அழிக்க நினைக்கிறார் ஜெயலலிதா : மு.க.ஸ்டாலின் குற்றச்சா
» எனக்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதி ஆக முடியுமா! – மஹிந்த நீதிமன்றத்திடம் கேள்வி
» கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்திற்கான செயலக கட்டடத்தை கட்டுவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பத
» சத்யராஜின் தலைமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|