Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிங்கம் புலி - Singam Puli
2 posters
Page 1 of 1
சிங்கம் புலி - Singam Puli
வழக்கமான இரட்டை வேட கதை தான்.
அண்ணன், தம்பி இருவருக்கும் உருவத்தில் வித்தியாசமேயில்லை, பாடி
லேங்குவேஜில் கூட வித்தியாசமில்லை. ஆனால் கேரக்டர்களில் வித்தியாசம்
மலையளவில் உண்டு. அண்ணன் கோபக்காரன், நியாயத்துக்காக எகிறுபவன். தம்பி
வக்கீல், ஸ்த்ரிலோலன், தன் சுகத்துக்காக சொந்த அண்ணனையே போட்டுத்தள்ள
முடிவெடுப்பவன். வீட்டில் சின்ன வயதிலிருந்தே அண்ணனைவிட தம்பியின் பால்
அன்பும் ஆதரவும் அதிகமாயிருக்க, தம்பி வீட்டில் நல்லவனாகவும், வெளியே எல்லா
தில்லாலங்கடியும் செய்பவனாக இருக்கிறான். அண்ணன்காரன் மீன் கடை
வைத்துள்ளான். தம்பியால் பிரச்சினைக்குள்ளான பெண்ணொருத்தி தற்கொலை
செய்துகொள்ள, அதற்கு காரணமான வக்கீல் தம்பியை போலீஸில் பிடித்து
கொடுக்கிறார் மீன்வெட்டி அண்ணன். தான் வாதாடபோகும் கோர்ட்டிலேயே தன்னை
குற்றவாளியாக நிறுத்தும் அண்ணணை பழிவாங்க புறப்படுகிறார் தம்பி! எல்லா
விதமான தகிடுதத்தங்களை செய்து கேஸிலிருந்து வெளிவரும் தம்பி அண்ணனை
கூலிப்படையினரை வைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். ஜெயித்தது அண்ணனா?
தம்பியா? யாருக்கு சங்கு என்பது மிதீக்கதை.
உருவத்தில், நடையுடை பாவனையில், கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல்
இருப்பது போன்ற கேரக்டர்களை தன் திறமையான நடிப்பைக் கொண்டு,
வித்தியாசப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் ஜீவா. சமயங்களில் அவர் எவ்வளவு
முயன்றும் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணன் கேரக்டரைவிட,
கேஸனோவா தம்பி கேரக்டருக்கு அதிகம் வேலை. அதை சுவாரஸ்யமாய் ரசித்து
செய்திருக்கிறார்.
ஹீரோயின்களில் திவ்யாவுக்கு அதிக வாய்ப்பு. ஐ.டியில் வேலை செய்யும்
திவ்யா, மீன் வியாபாரம் செய்யும் சிவாவை காதலிப்பது புதுசு. ஆனால் அதற்கு
அவர் சொல்லும் பிளாஷ்பேக் காரணம் பழசு. இன்னொரு நாயகி சவுந்தர்யாவுக்கு
அதிக வேலையில்லை. தம்பி ஜீவாவை காதலித்து, கர்ப்பமாகி செத்துப்போவதுதான்
அவரது வேலை. தான் வேலை பார்க்கும் ஷோ ரூமில் ஜீவாமேல் எரிந்து விழும் அவர்,
மறுநாளே கோவில் குளக்கரைக்கு வரச்சொல்லி காதல் வசனம் பேசுவதும்,
படுக்கையில் விழுவதும் எப்படி என்றுதான் புரியவில்லை.
படத்தின் இன்னொரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர் சந்தானம். மனுஷனுக்கு இப்போ
சுக்ர திசை போலருக்கு, ஸ்கிரீனில் தெரிந்தாலே மக்கள் சிரிக்க
ஆரம்பித்துவிடுகிறார்கள். எம்ஜிஆரின் மாறுவேடத்தில் துவங்கி
'சுப்ரமணியபுரம்' ஜெய், 'நிறம் மாறாத பூக்கள்' விஜயன் என்று கலந்து கட்டி
அடிக்கும் அவரது கெட்டப்புகளும், டயலாக்குகளும் கதி கலங்க அடிக்கிறது
தியேட்டரை.
பொன்வண்ணன், பாண்டு, குயிலி, மாணிக்கவிநாயகம் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
காய்கறி வாங்க கடைக்கு வரும் மாமியை கரெக்ட் பண்ணுவதில் தொடங்கி, ஈவ்
டீசிங் ஆசாமிகளை வெளுக்க வரும் லேடி கான்ஸ்டபிள் வரைக்கும் ஜீவாவின் மன்மத
பார்வைக்குள் விழுந்து மஜாவாகிறார்கள். மேல் மாடியில் அம்மா டாடா காட்ட,
கிரவுண்ட் புளோரில் மகள் டாடா காட்ட, இடையில் பசுவும் கன்றுமாக ஒரு ஆள்
கிராஸ் ஆவது இயக்குநரின் அபாய டச்சிங்!
இரண்டு ஜீவாவில் யாரை போட்டுத்தள்ளுவது என்பதை யூகிக்க முடியாமல்
தடுமாறும் வில்லன் கோஷ்டிகளையும் ரசிக்க முடிகிறது. இந்த கோஷ்டியில் குணா
என்ற அந்த வாலிபருக்கு வழி அமைத்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் ஒரு ஹீரோ
ரெடி!
ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப்
பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல். பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி
இருக்கலாம். அந்த ஃபிகரையும் ஹீரோ கரெக்ட் பண்றார்..(!!)
மணிசர்மாவின் இசையில் ஒரே தெலுங்கு வாடை. ஜீவாவும், கல்யாணியும் பாடலைத்
தவிர நத்திங் இம்ப்ரசிவ். அதிலும் அந்த பின்னணியிசை அய்யோ.. அப்பா..
முடியலை.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். டெக்னாலஜி எவ்வளவோ
உயர்ந்திருக்கும் காலத்தில் இவ்வளவு அரத பழசான டபுள் ஆக்ஷன் டெக்னிக்குகள்
படு அமெச்சூர்தனம். ஜீன்ஸ் காலத்திலேயே இதை விட பிரமாதமான
காட்சியமைப்புகளில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். முக்கியமாய் இரு
ஜீவாக்களின் லுக்குகளில் அநியாயமான ஆங்கிள் வித்தியாசங்கள்.
முதல் பாதி நல்ல வேகம்.. ரெண்டாவது கொஞ்சம் தொய்வு.. க்ளைமாக்ஸ் இழுவை.
ஆனா, இத்தனையும் தாண்டி படம் தேறுதுன்னா அதுக்கு மிகப்பெரிய பலம்
சந்தானத்தின் காமெடி தான்! படத்தின் நீளத்திற்கு கொஞ்சம் கத்தரி
போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
சிங்கம் புலி - கவுச்சி!
நடிகர்கள்
ஜீவா, திவ்யா ஸ்பந்தனா, சௌந்தர்யா, சந்தானம், பொன்வண்ணன், குயிலி, லட்சுமி ராமகிருஷ்ணன்
இசை
மணிசர்மா
இயக்கம்
சாய்ரமணி
தயாரிப்பு
எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ்.வாசன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சிங்கம் புலி - Singam Puli
» Puli Vesham-புலி வேஷம்
» Puli Vesham(புலி வேஷம்)
» உங்களுக்கு தெரியுமா? சிங்கம் + புலி.
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
» Puli Vesham-புலி வேஷம்
» Puli Vesham(புலி வேஷம்)
» உங்களுக்கு தெரியுமா? சிங்கம் + புலி.
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|