Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
Vengayam வெங்காயம்
3 posters
Page 1 of 1
Vengayam வெங்காயம்
சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நாத்திகவாதங்களை வைத்து படமெடுப்பவர்கள்
மிக சொற்பம். அதிலும் அதை தைரியமாய் சொல்பவர்கள் மிக சொற்பம். இம்மாதிரியான
படங்களுக்கு அதுவும் புதியவர்கள் நடித்து, எடுத்திருந்தால்
பத்திரிகையாளர்களும், பகுத்தறிவு பட்டறை ஆட்கள்கூட அவர்களுக்கு கொடுக்கும்
ஆதரவு சொற்பமே சொற்பம்தான்.. அது ஒரு தனி சோகக் கதை. இதையெல்லாம் மீறி
சாட்டையடியாய் ஒரு படம் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சங்ககிரி
ராஜ்குமார்.
பல பேர்களை ஏமாற்றி பணம் பறிப்பது, பொய் ஜோசியம் சொல்வது, நரபலி
கொடுப்பது என்று பல சாமியார்கள் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அடாவடியாக
கிராம மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள்
எடுக்கும் தற்கொலை முடிவாலும், மனநிலை பாதிக்கப்படுவதால் பல குழந்தைகள்
அனாதைகளாகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த ஒரு கும்பல் சாமியார்களையும்,
ஜோசியர்களையும் கடத்துகிறது. இந்தக் கடத்தல்களை கண்டுபிடிக்க போலீஸ்
இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டரை நியமிக்கிறார்கள். இவர் கடத்தல்காரர்களை
கண்டுபிடித்தாரா? கடத்தியது யார்? என்பதே படத்தின் இறுதி முடிவு.
இந்த விறுவிறுப்பான திரைக்கதையில் ஒரு காதல் ஜோடியின் கதையை இணைத்து
படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சங்ககிரி
ராஜ்குமார்.
சத்யராஜ் கௌரவ வேடத்தில் சிறிது நேரம் வந்தாலும் படத்தின் திருப்புமுனைக்கு வழிவகுக்கிறார்.
நாடகக் கலைஞராக நடித்துள்ள எஸ்.எம்.மாணிக்கம் இயக்குநர் ராஜ்குமாரின்
தந்தைதான். இவருக்கு சினிமாவில் தனி இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இயக்குநர்
ராஜ்குமாரும் நடித்திருக்கிறார். அவருடைய சேலத்து தமிழ் உச்சரிப்பும்,
யதார்த்தமான நடிப்பும் மனதில் பதிகின்றன.
இளம் காதல் ஜோடிகளாக வரும் அலெக்சாண்டர், பவீனா ஆகியோரின் நடிப்பு
கனகச்சிதம். பவீனாவின் கிராமத்து பேச்சும், குறும்பும் நம்மனதை கொள்ளை
கொள்கின்றன. பூ விற்கும் சிறுமி, சைக்கிள் கடைச் சிறுவன், டீ கடை சிறுவன்,
மனநலம் பாதித்த மூதாட்டி என படத்தில் வரும் துணை கதாபாத்திரங்களும் தங்களது
பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ள படம். கிடைத்த வசதிகளை வைத்து,
முற்றிலும் புதுமுகங்களை வைத்து சுவாரஸ்யமாகவே கொடுக்க
முயற்சித்திருக்கிறார்கள்.
பாட்டி ஒருத்தி பைத்தியமாய் அலையும் காரணத்துக்கான ப்ளாஷ்பேக், என்று
ஆரம்பித்து ஒவ்வொரு விஷயத்துக்கும் ப்ளாஷ்பேக் கொஞ்சம் சலிப்படைய
வைத்தாலும், இரண்டாம் பாதியில் வரும் கூத்துக்காரர் தன் பையனின்
சிகிச்சைக்காக நடுரோட்டில் கூத்து ஆடி தன்னை நிரூபித்து அழுது பணம் பெரும்
காட்சி செம டச்சிங். ஆழமானதும்கூட. அந்த கூத்துக்கார நடிகரின் நடிப்பு
அருமை.
முக்கியமாய் இம்மாதிரியான கதைக்களனை வைத்து படமெடுக்க, தயாரிக்க
நிஜமாகவே தைரியம் வேண்டும் அந்த தைரியம் சங்ககிரி ராஜ்குமாருக்கு
இருந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் சாமியார்களை பார்த்து சிறுமி தேவடியா
பசங்களா என்று திட்டும் போது தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல் சத்தம்
ஒன்றே போதும் ராஜ்குமாருக்கு. குறைகள் என்று பார்த்தால் நாடகத்தனமான
காட்சிகள், மோசமான துணை நடிகர்கள் நடிப்பு என்று சிலபல விஷயங்கள்
இருந்தாலும், தன்னால் இயன்ற சக்திக்கு, கிடைத்த வசதிகளை வைத்து, வழக்கமான
படமெடுக்காமல், இவ்வளவு முக்கியமான விஷயத்தை சுவாரஸ்யமான சினிமாவாக கொடுக்க
முனைந்ததற்கு நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
இசையமைப்பாளர் பரணியின் இசைத்தாலாட்டில் 'அச்சமென்ன அச்சமென்ன ஆசைத்
தமிழே...' பாடல் மனதில் தாளம் போடுகின்றன. பகுத்தறிவு வசனங்களுக்கேற்ப
பின்னணி இசையும் படத்திற்கு உயிரூட்டுகின்றன. ஒளிப்பதிவாளர் சபா ரத்தினம்
செதுக்கிய காட்சிகளை, செ.மா.செந்தில்குமாரின் படத்தொகுப்பு சிற்பமாக்கி
காட்டியிருக்கிறது. சுப. வீரபாண்டியன் மற்றும் அறிவுமதியின் பாடல்கள்
படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது
பணம் கொடுத்தால் பாதிக்கப்பட்ட மனம் சாந்தியடையாது என்பதையும், மூட
நம்பிக்கைக்கு எதிராக தெளிவான கருத்துக்களுடன் முதல் படத்திலேயே அனைவரின்
பாராட்டுதலை பெற்றிருக்கும் இயக்குநர் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும்
தோலுரித்துக் காட்ட 'வெங்காயத்தை' பயன்படுத்தியதற்காக பாராட்டியே
ஆகவேண்டும். இம்மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு தூண்கள்.
வெங்காயம் - நல்லா உறைக்கிது...!
நடிகர்கள்
சத்யராஜ், அலெக்ஸாண்டர், பவீனா, கல்கி, ஈழவேந்தன், தங்கராஜ், இந்திராணி, அழகப்பன், வாவி, வெள்ளையம்மாள், வாசு
இசை
பரணி
இயக்கம்
சங்ககிரி ராஜ்குமார்
தயாரிப்பு
எஸ்.எம்.மாணிக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Vengayam வெங்காயம்
இன்றைக்கு நான் வெங்காயம்..
அடச் சீ. தப்பு..
இன்றைக்கு நான் வெங்காயம் படம் பார்க்கிறேன்..
அடச் சீ. தப்பு..
இன்றைக்கு நான் வெங்காயம் படம் பார்க்கிறேன்..
Re: Vengayam வெங்காயம்
அப்போ இன்றைக்கு சேனை மூன்று மணி நேரம் உங்களைப் பார்க்க முடியாதுபர்ஹாத் பாறூக் wrote:இன்றைக்கு நான் வெங்காயம்..
அடச் சீ. தப்பு..
இன்றைக்கு நான் வெங்காயம் படம் பார்க்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Vengayam வெங்காயம்
இந்த காயமே (உடலே )
ஒரு வெங்காயம் தான்!
வெறுங் காயம் (வெங்காயம் ) உரைக்கிறது என விமரிசனம் செய்யுங்கள் :!+: :!+:
ஒரு வெங்காயம் தான்!
வெறுங் காயம் (வெங்காயம் ) உரைக்கிறது என விமரிசனம் செய்யுங்கள் :!+: :!+:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|