Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
வெற்றிப் பாதை!
2 posters
Page 1 of 1
வெற்றிப் பாதை!
மூன்று விஷயங்களால் வரக்கூடிய நஷ்டங்கள் மிகப் பயங்கரமானவை.
ஒன்று ஞாபகசக்திக் குறைவு. இரண்டு சோம்பல். மூன்று முன்யோசனைகள் இன்மை.
எந்தப் பிரச்சினையையும் முன்யோசனை யுடன் அணுகுகிறவர்கள் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள்.
முன் யோசனையின்றி ஒரு பிரச்சினையை அணுகுவதென்பது எவ்வித ஆயுதமின்றி ஒரு போர்க்களத்தில் குதிக்கும் செயலுக்கும் ஒப்பானது.
வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பான உணர்வு என்றைக்குமே நல்லதல்ல.
எப்படி வரும்? எந்த ரூபத்தில் வரும்? எவ்வளவு வரும்? எப்போது வரும்? என்றெல்லாம் யோசனை செய்து பார்த்து அவற்றிற்கு ஏற்ப நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை.
வெளியூரிலிருந்து இரயிலில் வரும் ஒருவரை வரவேற்கச் செல்லும் சாதாரண விஷயம் முதல், மகளுக்குத் திருமணம் செய்யும் பெரிய விஷயம் வரை அனைத்து விஷயங்களிலுமே முன்யோசனை வேண்டப்படுகிறது.
முன் யோசனையாளர்கள் வாழ்வில் ஏமாற்றத்தைத் தவிர்க்கிறார்கள்.
சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நேரத்தையும் பொருளையும் மிச்சப்படுத்துகிறார்கள்.
“இப்பவே எனக்கு பிஸ்கெட் வேணும்” என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கும், அவசியமே இல்லாத சூழ்நிலையிலும் அவசரப்படும் மனிதர்களுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
பொறுமையாய் இருப்பது என்பது அடியோடு செயல்படாமல் இருப்பதல்ல; மெதுவாகவும் உறுதியாகவும் இலக்கை நோக்கி நகர்வது. மாறாக தள்ளிப் போடுவதோ, தப்பிப்பதோ அல்ல!
தங்களை ஒழுங்குபடுத்தியிருக்கிற மனிதர்கள் பலரும் உலகின் கண்களுக்குமுன் தங்களை சரிவர வெளிப்படுத்திக் கொண்டதில்லை. மனித வாழ்க்கையில் இது ஒரு நுட்பமான பிரச்சினை. “நம் செயலை எப்படி வெளிப்படுத்து வது”
இந்த உலகம் சரியான ஏமாளி-கோமாளி உலகம். ஒருவன் பார்க்கிற கணத்தில் மற்றவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதைத்தான் அவன் அதிகம் அல்லது உண்மையாகச் செய்கிறான் என்று நம்புகிறது.
ஒரு காவலாளி, சில கணங்கள் அசந்தால் கூட, இரவு முழுக்க அவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நம்புவதும்; திடீர்ச் சோதனையின்போது அவன் தற்செயலாக விழித்துக் கொண்டிருந்தால், அடடா! இவனைப் போன்ற உண்மையான காவலாளி வேறு எவனுமே இல்லை என்ற முடிவுக்கு வருவதும் எவ்வளவு பேதமை! ஆனால் இந்தத் தவறுகள் மிகவும் விபரம் தெரிந்தவர்கள் மத்தியில் கூட நடக்கின்றன.
ஒருவர் ஒரு பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டுச் சென்று திரும்பும்போது நாம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா என்பது மிக முக்கியம். வெகுநேரம் அந்தப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கணம் நாம் ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தோமானால் அல்லது காப்பி சாப்பிட நகர்ந்துவிட்டால் நம்முடைய உண்மை உணர்வு இங்கே சந்தேகிக்கப்படுகிறது என்று பொருள்.
ஆக, எதையும் கண்கூடாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், பிரச்னைகள் வரா!
நன்றி மரபின் மைந்தன் முத்தயாஹ் & நமது நம்பிக்கை
ஒன்று ஞாபகசக்திக் குறைவு. இரண்டு சோம்பல். மூன்று முன்யோசனைகள் இன்மை.
எந்தப் பிரச்சினையையும் முன்யோசனை யுடன் அணுகுகிறவர்கள் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள்.
முன் யோசனையின்றி ஒரு பிரச்சினையை அணுகுவதென்பது எவ்வித ஆயுதமின்றி ஒரு போர்க்களத்தில் குதிக்கும் செயலுக்கும் ஒப்பானது.
வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பான உணர்வு என்றைக்குமே நல்லதல்ல.
எப்படி வரும்? எந்த ரூபத்தில் வரும்? எவ்வளவு வரும்? எப்போது வரும்? என்றெல்லாம் யோசனை செய்து பார்த்து அவற்றிற்கு ஏற்ப நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை.
வெளியூரிலிருந்து இரயிலில் வரும் ஒருவரை வரவேற்கச் செல்லும் சாதாரண விஷயம் முதல், மகளுக்குத் திருமணம் செய்யும் பெரிய விஷயம் வரை அனைத்து விஷயங்களிலுமே முன்யோசனை வேண்டப்படுகிறது.
முன் யோசனையாளர்கள் வாழ்வில் ஏமாற்றத்தைத் தவிர்க்கிறார்கள்.
சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நேரத்தையும் பொருளையும் மிச்சப்படுத்துகிறார்கள்.
“இப்பவே எனக்கு பிஸ்கெட் வேணும்” என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கும், அவசியமே இல்லாத சூழ்நிலையிலும் அவசரப்படும் மனிதர்களுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
பொறுமையாய் இருப்பது என்பது அடியோடு செயல்படாமல் இருப்பதல்ல; மெதுவாகவும் உறுதியாகவும் இலக்கை நோக்கி நகர்வது. மாறாக தள்ளிப் போடுவதோ, தப்பிப்பதோ அல்ல!
தங்களை ஒழுங்குபடுத்தியிருக்கிற மனிதர்கள் பலரும் உலகின் கண்களுக்குமுன் தங்களை சரிவர வெளிப்படுத்திக் கொண்டதில்லை. மனித வாழ்க்கையில் இது ஒரு நுட்பமான பிரச்சினை. “நம் செயலை எப்படி வெளிப்படுத்து வது”
இந்த உலகம் சரியான ஏமாளி-கோமாளி உலகம். ஒருவன் பார்க்கிற கணத்தில் மற்றவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ அதைத்தான் அவன் அதிகம் அல்லது உண்மையாகச் செய்கிறான் என்று நம்புகிறது.
ஒரு காவலாளி, சில கணங்கள் அசந்தால் கூட, இரவு முழுக்க அவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நம்புவதும்; திடீர்ச் சோதனையின்போது அவன் தற்செயலாக விழித்துக் கொண்டிருந்தால், அடடா! இவனைப் போன்ற உண்மையான காவலாளி வேறு எவனுமே இல்லை என்ற முடிவுக்கு வருவதும் எவ்வளவு பேதமை! ஆனால் இந்தத் தவறுகள் மிகவும் விபரம் தெரிந்தவர்கள் மத்தியில் கூட நடக்கின்றன.
ஒருவர் ஒரு பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டுச் சென்று திரும்பும்போது நாம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா என்பது மிக முக்கியம். வெகுநேரம் அந்தப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கணம் நாம் ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தோமானால் அல்லது காப்பி சாப்பிட நகர்ந்துவிட்டால் நம்முடைய உண்மை உணர்வு இங்கே சந்தேகிக்கப்படுகிறது என்று பொருள்.
ஆக, எதையும் கண்கூடாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், பிரச்னைகள் வரா!
நன்றி மரபின் மைந்தன் முத்தயாஹ் & நமது நம்பிக்கை
Re: வெற்றிப் பாதை!
முன் யோசனையின்றி ஒரு பிரச்சினையை அணுகுவதென்பது எவ்வித ஆயுதமின்றி ஒரு போர்க்களத்தில் குதிக்கும் செயலுக்கும் ஒப்பானது.
அரிய கருத்துக்கள் பொதிந்த கட்டுரை பகிர்வுக்கு நன்றி ஐயா
முன்யோசனை இன்றிய செயல்கள் சிலவேளை தோல்வியையே தருகிறது எம்மை நாம் பரிட்சித்து செயல்படுத்தும்போதுதான் வெற்றியின் உறுதி நிலைக்கிறது நன்றி அண்ணா
அரிய கருத்துக்கள் பொதிந்த கட்டுரை பகிர்வுக்கு நன்றி ஐயா
முன்யோசனை இன்றிய செயல்கள் சிலவேளை தோல்வியையே தருகிறது எம்மை நாம் பரிட்சித்து செயல்படுத்தும்போதுதான் வெற்றியின் உறுதி நிலைக்கிறது நன்றி அண்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|