Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
3 posters
Page 1 of 1
பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
கிழக்கில் வரலாறு காணாத வெள்ள அனர்த் தம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கில் அனர்த்தங்களை நேற்று (11) நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பில் வைத்து இந்த வேண்டுகோளை விடுத்தார்.
ஜனாதிபதி அவர்களு டன் அடிக்கடி கலந்து ரையாடி ஆலோசனைகளைப் பெற்று நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகத் தினகரனுக்குத் தெரிவித்த அமைச்சர் அமரவீர, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணமளிக்க அரசாங்கம் நேற்றுவரை 60 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார். நிவாரணங்களை வழங்கத் தேவையான நிதியை இன்னும் அரசாங்கம் வழங்குமென்று குறிப்பிட்ட அமைச்சர், கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்தம் பாரதூரமானதென்பதால், அவர்களுக்கு உதவ முழு நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.
நிவாரண உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொடுக்கவிரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் இடர் முகாமைத்துவ நிலையத்தில் ஒப்படைக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டமே வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார். இந்த மாவட்டத்துக்கு மாத்திரம் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உறவினர் வீடுகளில் தங்கி உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேற்று முதல் உலர் உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட மாநாட்டில் அமைச்சர் அமரவீர இதனைத் தெரிவித்தார்.
இதில் அவர் மேலும் கூறியதாவது:-
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மட்டக்களப்பு மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்படல் வேண்டும். சமைத்த உணவு வழங்குவதற்கான ஆரம்பகட்ட நிதியாக இருபது மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக அனைவருக்கும் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான பணிப்புரையை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுக்கின்றேன்.
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களு க்கு மாத்திரம் ஏற்கனவே சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இந்த முடிவு தற்போது மாற்றப்பட் டுள்ளது. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் வீட்டில் சமைக்க முடியாதவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவு வழங்குவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. வீடுகளில் சமையல் பாத்திரங்கள் உடைந்து வெள்ளத்தினால் சேதமடைந்தவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வெள்ளத்தினால் மரணித்தவர்களின் மரணச் சடங்குகளின் அடக்கச் செலவுகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாகவும், அவர்களுக்கான நிவாரண நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் என்னிடம் பணித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூத், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பி.
அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக உட்பட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தினால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறையில் இதுவரை வெள்ளத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3,36,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (வி)
நன்றி தினகரன்
இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கிழக்கில் அனர்த்தங்களை நேற்று (11) நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பில் வைத்து இந்த வேண்டுகோளை விடுத்தார்.
ஜனாதிபதி அவர்களு டன் அடிக்கடி கலந்து ரையாடி ஆலோசனைகளைப் பெற்று நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகத் தினகரனுக்குத் தெரிவித்த அமைச்சர் அமரவீர, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணமளிக்க அரசாங்கம் நேற்றுவரை 60 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார். நிவாரணங்களை வழங்கத் தேவையான நிதியை இன்னும் அரசாங்கம் வழங்குமென்று குறிப்பிட்ட அமைச்சர், கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்தம் பாரதூரமானதென்பதால், அவர்களுக்கு உதவ முழு நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.
நிவாரண உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொடுக்கவிரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் இடர் முகாமைத்துவ நிலையத்தில் ஒப்படைக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டமே வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார். இந்த மாவட்டத்துக்கு மாத்திரம் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உறவினர் வீடுகளில் தங்கி உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேற்று முதல் உலர் உணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட மாநாட்டில் அமைச்சர் அமரவீர இதனைத் தெரிவித்தார்.
இதில் அவர் மேலும் கூறியதாவது:-
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மட்டக்களப்பு மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த உணவு வழங்கப்படல் வேண்டும். சமைத்த உணவு வழங்குவதற்கான ஆரம்பகட்ட நிதியாக இருபது மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக அனைவருக்கும் உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான பணிப்புரையை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுக்கின்றேன்.
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களு க்கு மாத்திரம் ஏற்கனவே சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இந்த முடிவு தற்போது மாற்றப்பட் டுள்ளது. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் வீட்டில் சமைக்க முடியாதவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவு வழங்குவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. வீடுகளில் சமையல் பாத்திரங்கள் உடைந்து வெள்ளத்தினால் சேதமடைந்தவர்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வெள்ளத்தினால் மரணித்தவர்களின் மரணச் சடங்குகளின் அடக்கச் செலவுகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாகவும், அவர்களுக்கான நிவாரண நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் என்னிடம் பணித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூத், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, பி.
அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக உட்பட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தினால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறையில் இதுவரை வெள்ளத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3,36,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (வி)
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|