சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு Khan11

அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு

Go down

அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு Empty அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 8:17

அமைச்சர் சிதம்பரத்துக்கு
பிரதமர் மன்மோகன் ஆதரவு




2 ஜி அலைக்கற்றையை ஏல முறையில் அல்லாமல் ‘முதலில் வந்தவருக்கே முன்னுரிமை’ என்ற
அடிப்படையில் விற்க அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அனுமதித்ததாகக் கூறப்படும்
விவகாரம் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் பதவி
விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட், அ. தி. மு. க. உள்ளிட்ட எதிர்க்
கட்சிகள் வியாழக்கிழமை கோரின.

அமைச்சர் சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு I1அவர் தவறு இழைக்கவில்லை, பதவி விலகவும் தேவையில்லை
என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. உங்களுடைய நேர்மை சந்தேகத்துக்கு இடமில்லாதது.
நான் டில்லி திரும்பும்வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்
சிங் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், பிரதமர்
திரும்பும்வரை இது தொடர்பாக பொதுவில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று
உறுதியளித்திருக்கிறார். ரகசிய கடிதம் 2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்ய
வேண்டும் என்று அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால் அதில்
ஊழலே நடந்திருக்காது என்று குறிப்பிடும் ரகசியக் கடிதம் வெளியாகியிருக்கிறது.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி. ஜி. எஸ். ராவ், பிரதமர்
அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை
எழுதியிருந்தார். 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுதாக்கல் செய்த ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி, இந்தக் கடிதத்தையும் ஆதாரமாகச் சமர்ப்பித்திருக்கிறார். தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இந்தக் கடிதத்தை சமூக ஆர்வலர் ஒருவர்
பெற்றதாகக் கூறப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை விற்பனை நடைபெற்ற சமயத்தில் நிதித் துறை அமைச்சராக இருந்த ப.
சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் ‘முதலில்
வருபவருக்கே முன்னுரிமை’ என்கிற முடிவை அனுமதித்ததாக அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
மேலும் அலைக்கற்றை விற்பனையை ஏலத்தின் மூலமே நடத்த வேண்டும் என்று நிதி அமைச்சராக
இருந்த ப. சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால், இந்த ஊழல் நடந்திருக்கவே வாய்ப்பில்லை
என்கிற கருத்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற்ற பிறகே பிரதமர்
அலுவலகத்துக்கு இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிதம்பரத்துடன் பிரதமர் பேச்சு, இதனிடையே ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில்
கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து இந்த விவகாரம்
தொடர்பாக சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
20 நிமிடங்கள் நீடித்த இந்தத் தொலைபேசி உரையாடலில் சிதம்பரத்தின்
நேர்மையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிரதமர், செப்டம்பர் 27 ஆம் திகதி
தான் நாடு திரும்பும் வரை அமைதியாக இருக்கும்படி அவரை சமாதானப்படுத்தியதாகவும் அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன. கருத்து தெரிவிக்க சிதம்பரம் மறுப்பு:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப் பயணம்
மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம், நிதி அமைச்சகத்தின் கடித விவரம்
தொடர்பாக செய்தியாளர்கள் வினவினர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க
சிதம்பரம் மறுத்துவிட்டார்.
பிரணாப் மறுப்பு :
இந்திய - அமெரிக்க முதலீட்டாளர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க
சுற்றுப் பயணத்தில் உள்ள மத்திய நிதித் துறை அமைச்சர் பிரணாப் முகார்ஜியிடமும் 2 ஜி
தொடர்பான அவரது அமைச்சகத்தின் கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரணாப், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்து
கருத்து தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
நடைபெறும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்றும் அவர்
தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum