சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...! Khan11

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!

2 posters

Go down

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...! Empty வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!

Post by *சம்ஸ் Fri 14 Oct 2011 - 10:36

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...! Child-Care-Diarrhoea-jpg-891
வயிற்றுப்போக்கு வந்துவிட்டால் எவ்வளவு ஆரோக்கியமான குழந்தைகள் என்றாலும் தளர்ந்து போகும். தொடக்கத்தில் இதற்கு வீட்டு சிகிச்சை கைகொடுக்கும் என்றாலும், நோய் தீவிரமாகிவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சுகாதாரமற்ற உணவு, சுகாதாரமற்ற தண்­ணீர், வைரஸ் பாதிப்பு போன்றவைகளால் வயிற்றுப்போக்கு உருவாகிறது. திறந்திருக்கும் உணவில் ஈ போன்றவை உட்காரும்போது அதனால் ஏற்படும் அசுத்தத்தால் வயிற்றுப்போக்கு தோன்றும். சில குழந்தைகளுக்கு பால் பருகுவதால் ஏற்படும் அலர்ஜி, கடை உணவுகள் சாப்பிடும் போது ஏற்படும் வயிற்றுப் பாதிப்பும் வயிற்றுபோக்காக மாறும். சில நோய்களின் அறிகுறியாகவும் வயிற்றுப்போக்கு காணப்படுகிறது.

வீட்டில் சிகிச்சை:

சிறிய அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், வீட்டு சிகிச்சையிலே அதை சரி செய்திட முடியும். "ஓ.ஆர்.எஸ்" திரவத்தையோ, உப்பு சேர்த்த கஞ்சி நீரையோ அடிக்கடி கொடுக்கவேண்டும். இளநீரும் கொடுக்கலாம். அரிசி வகை உணவுகள் விரைவாக ஜீரணமாகும் என்பதால் தோசை, இட்லி போன்றவைகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கோதுமை- பொடி அரிசி கஞ்சி, சூப் போன்றவைகளும் கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வாந்தியும் இருந்தால் கொதித்து ஆற வைத்த நீரைப் பருகக் கொடுக்க வேண்டும். அப்போது பருகுவதற்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது.

சோர்வை நீக்க:

வயிற்றுப்போக்கு தொடரும்போது குழந்தைகளுக்கு சோர்வு தோன்றும். அப்போது வாந்தியும் ஏற்பட்டால் சோர்வு அதிகரிக்கும். "ஓ.ஆர்.எஸ்" திரவம் சோர்வை நீக்கவும் பயன்படும். நீண்ட நாட்கள் வயிற்றுப்போக்கு இருந்துகொண்டிருந்தால், குழந்தைகளின் உடல் எடை குறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு நின்ற பிறகு அவைகளுக்கு பசி அதிகரிக்கும். அதற்குத் தக்கபடி உணவு கொடுக்கத் தொடங்கினால் உடல் எடை அதிகரித்துவிடும்.

"ஓ.ஆர்.எஸ்" திரவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டால், மெடிக்கல் ஷாப்களில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் தரமானவற்றை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஒரு பாக்கெட்டைத் திறந்து விட்டால் அதை 24 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரு கப் நிறைய பருக கொடுக்கக்கூடாது. ஒரு கப் திரவத்தை மூன்று அல்லது நான்கு தடவையாக கொடுக்க வேண்டும். ஆனால் வீட்டு சிகிச்சை மூலமாக மட்டுமே வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியாது. பாதிப்பு அதிகரிப்பதாகத் தெரிந்தால், உடனடியாக ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிட வேண்டிய நிர்பந்தம்:

* குழந்தைக்கு தளர்ச்சி தோன்றினால்.

* குழந்தையின் வாய் வறண்டு, உலர்ந்துபோனால்

* சிறுநீர் கழிக்கும் தடவை குறைந்துபோனால்

* சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்தால்

* நிறுத்தாமல் அழுவது, அழும்போது கண்ணீ­ர் வராமல் இருப்பது

* மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுதல்

* வயிற்றுப்போக்கோடு கடுமையான காய்ச்சல் ஏற்படுதல்

* வயிறு வீங்கிப்போதல்

* அடிக்கடி மலம் வெளியேறுதல்

சிறிய அளவிலான வயிற்றுப்போக்கு என்றாலும், ஒரு வாரத்திற்கு மேல் நீண்டு போகுதல்.

வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை:

* கைக் குழந்தைகளுக்கு முடிந்த அளவு தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். அதுதான் பாதுகாப்பானது.

* பால் பொடியை கலக்கி கொடுக்க பயன்படுத்தும் நீர், நன்கு கொதித்ததாக இருக்க வேண்டும்.

* பாதி அளவு பாட்டில் பாலை பருகிவிட்டு, மீதியை அடுத்த நேரத்திற்கு வைத்து கொடுக்கக்கூடாது.

* குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், வென்னீரில் நன்றாகக் கழுவப்பட வேண்டும்.

* குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முன்னதாக உணவு ஊட்டுபவர்கள் தங்கள் கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்குக் கொதித்து ஆறிய நீரை மட்டுமே பருகக் கொடுக்க வேண்டும்.

* பள்ளிக்குச் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை பள்ளி அருகில் உள்ள கடைகளில் எந்த உணவும் வாங்கி சாப்பிட ஊக்குவிக்கக்கூடாது.

* அவ்வப்போது தயாரிக்கும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட அனுமதியுங்கள்.

* உணவு சாப்பிடும் முன்பு கைகளை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...! Empty Re: வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!

Post by Inudeen Fri 14 Oct 2011 - 11:11

##* :”@: :”@:
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum