Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சுகததாஸவைப் போன்ற மேயராக செயற்படுமாறு முஸம்மிலுக்கு ரணில் அறிவுரை
Page 1 of 1
சுகததாஸவைப் போன்ற மேயராக செயற்படுமாறு முஸம்மிலுக்கு ரணில் அறிவுரை
கொழும்பு மேயராக வீ.ஏ.சுகததாஸ பதவி வகித்த காலத்தில் திறமையுடன் அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதேபோன்று திறமையாகவும் தைரியமாகவும் செயற்பட்டு கொழும்பு மாநகரை கட்டியெழுப்பப் பாடுபட வேண்டுமென புதிய மேயர் முஸம்மிலுக்கு அறிவுரை வழங்கினார்.
கொழும்பு மாநகரிலிருந்து ஒரு குடிமகனையேனும் வெளியேற்ற யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் ரணில் தெரிவித்தார்.
கொழும்பு மேயராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும் பிரதி மேயராக ரைட்டஸ் பெரேராவும் பதவியேற்கும் வைபவத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.
கொழும்பு மாநகரிலிருந்து ஒரு குடிமகனையேனும் வெளியேற்ற யாருக்கும் தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் ரணில் தெரிவித்தார்.
கொழும்பு மேயராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும் பிரதி மேயராக ரைட்டஸ் பெரேராவும் பதவியேற்கும் வைபவத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.
Re: சுகததாஸவைப் போன்ற மேயராக செயற்படுமாறு முஸம்மிலுக்கு ரணில் அறிவுரை
பதவிப் பிரமாணத்துக்குப் பின்னர் அங்கு ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது தொடர்ந்து கூறியதாவது;
கொழும்பு மாநகர மக்கள் கடந்த 8 ஆம் திகதி உணர்வுபூர்வமாகச் செயற்பட்டு தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். கொழும்பு மாநகரை பாதாளத்துக்குள் தள்ளிவிட மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மீண்டுமொரு தடவை கொழும்பு மாநகரை நாம் வென்றெடுத்துள்ளோம். கடந்த காலங்களைப் போன்றே சிறந்ததொரு மேயரை நாம் உங்களுக்குத் தந்திருக்கின்றோம். சிறிது காலமாக இருளடைந்து போயிருந்த கொழும்பு மாநகரை மீண்டும் ஒளிமயமானதாக மாற்ற உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் சிறந்த மாநகரமாக கொழும்பை மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை மேயர் முஸம்மில் தயாரித்துள்ளார்.
மேயர் முஸம்மிலுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றேன். திறமையாகச் செயற்படுங்கள். ஒருபோதும் தைரியத்தை விட்டு விடாதீர்கள். எடுக்கக் கூடிய தீர்மானங்களை உறுதியுடன் எடுங்கள். 1965இல் கொழும்பு மாநகர மேயராக இருந்த வீ.ஏ.சுகததாஸவைப் போன்று தைரியசாலியாக இருக்க வேண்டும்.
கொழும்பு மாநகர மக்கள் கடந்த 8 ஆம் திகதி உணர்வுபூர்வமாகச் செயற்பட்டு தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். கொழும்பு மாநகரை பாதாளத்துக்குள் தள்ளிவிட மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மீண்டுமொரு தடவை கொழும்பு மாநகரை நாம் வென்றெடுத்துள்ளோம். கடந்த காலங்களைப் போன்றே சிறந்ததொரு மேயரை நாம் உங்களுக்குத் தந்திருக்கின்றோம். சிறிது காலமாக இருளடைந்து போயிருந்த கொழும்பு மாநகரை மீண்டும் ஒளிமயமானதாக மாற்ற உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் சிறந்த மாநகரமாக கொழும்பை மாற்றியமைப்பதே எமது இலக்காகும். அதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை மேயர் முஸம்மில் தயாரித்துள்ளார்.
மேயர் முஸம்மிலுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றேன். திறமையாகச் செயற்படுங்கள். ஒருபோதும் தைரியத்தை விட்டு விடாதீர்கள். எடுக்கக் கூடிய தீர்மானங்களை உறுதியுடன் எடுங்கள். 1965இல் கொழும்பு மாநகர மேயராக இருந்த வீ.ஏ.சுகததாஸவைப் போன்று தைரியசாலியாக இருக்க வேண்டும்.
Re: சுகததாஸவைப் போன்ற மேயராக செயற்படுமாறு முஸம்மிலுக்கு ரணில் அறிவுரை
அன்று 1965இல் நடைபெற்ற தேர்தலில் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போது ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மைப் பலம் கிட்டவில்லை. இச் சந்தர்ப்பத்தில் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியை அமைக்க முற்பட்டது. இந்த வேளையில் டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்., பிலிப் குணவர்தன, சி.பி.டி.சில்வா போன்றோர் யாழ்ப்பாணத்தோடு தொடர்பு கொண்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சி எம்.பி.க்கள் கொழும்பு வந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இக் கடிதத்தை மகாதேசாதிபதியாக இருந்த வில்லியம் கோபல்லாவைக்கு கையளிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு 11 மணியையும் தாண்டிவிட்டது. விடிவதற்குள் கடிதம் ஒப்படைக்கப்பட வேண்டும். பாதுகாப்பும் கடுமையாகக் காணப்பட்டது. எவராலும் இராணி மாளிகைப் பாராளுமன்றப் பக்கம் போக முடியாத நிலை காணப்பட்டது.
அப்போதுதான் கொழும்பு மேயர் சுகததாஸ தான் அக்கடிதத்தை ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனது உத்தியோகபூர்வ வாகனத்தை வீட்டிலிருந்து வரவழைத்தார். அவரது பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரியையும் ஏற்றிக் கொண்டு மகாதேசாதிபதியை சந்திக்கப் புறப்பட்டார். மேயரின் வாகனம் வருவதைக் கண்ட பாதுகாப்புத் தரப்பினர் "சல்யூட்' அடித்து வாகனத்துக்கு வழிவிட்டனர். நேரடியாக கடிதத்தை மகாதேசாதிபதி கோபல்லாவவிடம் ஒப்படைத்து சிறிமாவை பதவி விலகி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியமைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மறுதினம் ஐ.தே.க. அரசு பதவியேற்றுக் கொண்டது.
யாரிடமும் காணப்படாத விவேகம், தைரியம், மனோதிடம் சுகததாஸவிடம் காணப்பட்டது. அவ்வாறான தைரியமும் விவேகமும் மனோதிடமும் உங்களிடமும் வரவேண்டும். யாருக்கும் அஞ்ச வேண்டாம். வெற்றிப் பயணத்தை ஆரம்பியுங்கள். மக்கள் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என ரணில் விக்கிரமசிங்க மேயர் முஸம்மிலிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இக் கடிதத்தை மகாதேசாதிபதியாக இருந்த வில்லியம் கோபல்லாவைக்கு கையளிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு 11 மணியையும் தாண்டிவிட்டது. விடிவதற்குள் கடிதம் ஒப்படைக்கப்பட வேண்டும். பாதுகாப்பும் கடுமையாகக் காணப்பட்டது. எவராலும் இராணி மாளிகைப் பாராளுமன்றப் பக்கம் போக முடியாத நிலை காணப்பட்டது.
அப்போதுதான் கொழும்பு மேயர் சுகததாஸ தான் அக்கடிதத்தை ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனது உத்தியோகபூர்வ வாகனத்தை வீட்டிலிருந்து வரவழைத்தார். அவரது பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரியையும் ஏற்றிக் கொண்டு மகாதேசாதிபதியை சந்திக்கப் புறப்பட்டார். மேயரின் வாகனம் வருவதைக் கண்ட பாதுகாப்புத் தரப்பினர் "சல்யூட்' அடித்து வாகனத்துக்கு வழிவிட்டனர். நேரடியாக கடிதத்தை மகாதேசாதிபதி கோபல்லாவவிடம் ஒப்படைத்து சிறிமாவை பதவி விலகி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியமைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மறுதினம் ஐ.தே.க. அரசு பதவியேற்றுக் கொண்டது.
யாரிடமும் காணப்படாத விவேகம், தைரியம், மனோதிடம் சுகததாஸவிடம் காணப்பட்டது. அவ்வாறான தைரியமும் விவேகமும் மனோதிடமும் உங்களிடமும் வரவேண்டும். யாருக்கும் அஞ்ச வேண்டாம். வெற்றிப் பயணத்தை ஆரம்பியுங்கள். மக்கள் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என ரணில் விக்கிரமசிங்க மேயர் முஸம்மிலிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Similar topics
» அமெரிக்க மேயராக இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
» அரசுடன் இணைந்து செயற்படுமாறு த.தே.கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» கண்டி மாநகரசபை மேயராக ரத்வத்தை பதவியேற்பு _
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» அரசுடன் இணைந்து செயற்படுமாறு த.தே.கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு
» என் செல்லத்தும்பி முஸம்மிலுக்கு திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» கண்டி மாநகரசபை மேயராக ரத்வத்தை பதவியேற்பு _
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|